ஆசிய றக்பி சம்பியன்ஷிப் பிரிவு 1 தொடரில் சம்பியனாகிய இலங்கை தேசிய றக்பி அணியை அங்கீகரிக்கும் முகமாக இலங்கை கிரிக்கெட் சபை பரிசுத்தொகையொன்றை வழங்கியுள்ளது. இலங்கை றக்பி அணி கொழும்பில் நடைபெற்ற ஆசிய றக்பி சம்பியன்ஷிப் பிரிவு 1 இறுதிப்போட்டியில் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி சம்பியனாக முடிசூடியது. >> பானுக, ஜனித்தின் அதிரடியுடன் 252 ஓட்டங்களை விளாசிய SLC கிரீன் குறித்த இந்த வெற்றிக்காக உழைத்த பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வீரர்களை அங்கீகரிக்கும் முகமாக 30 ஆயிரம் அமெரிக்க டொலரை (89 இலட்சம்) இலங்கை கிரிக்கெட் .
ஐசிசி T20 உலகக்கிண்ணத்திற்கான தயார்படுத்தலுக்காக நடைபெற்று வரும் பயிற்சிப் போட்டி தொடரில் இன்று (06) நடைபெற்ற SLC டீம் யெல்லோவ் அணிக்கு எதிரான போட்டியில் SLC டீம் கிரீன் 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றிபெற்றது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டீம் கிரீன் அணி பானுக ராஜபக்ஷ மற்றும் ஜனித் லியனகே ஆகியோரின் வேகமான ஓட்டக்குவிப்புக்களின் உதவியுடன் 5 விக்கெட்டுகளை இழந்து 252 ஓட்டங்களை பெற்றது. >>T20 உலகக்கிண்ணத்துக்கான வீசாக்களை
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறைவீரரான சகீப் அல்ஹசன் இரசிகர் ஒருவரை மைதானத்திற்குள் உள்ளே வைத்து தாக்க முயன்ற காணொளி வைரலாகியதனைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார். >>மகளிர் T20 உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு சகீப் அல் ஹசன் தற்போது பங்களாதேஷின் உள்ளூர் லீக் தொடரான டாக்கா பிரீமியர் லீக் (DPL) தொடரில் ஆடி வருகின்றார். இவர் குறிப்பிட்ட தொடரின் போட்டியொன்றில் ஆட முன்னர் பயிற்சியாளர்களிடம் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தார். எனினும் குறிப்பிட்ட கலந்துரையாடலின் நடுவே மைதானத்திற்
ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் 25 வீரர்கள் தங்களுடைய அமெரிக்க வீசாக்களை பெற்றுக்கொண்டுள்ளனர். இலங்கை அணியின் 25 வீரர்கள் வீசாக்களை பெற்றுக்கொண்ட புகைப்படம் ஒன்றை அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். >> மகளிர் T20 உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் இலங்கை அணியின் அனுபவ வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் இல்லாவிட்டாலும், அவரும் வீசாவை பெற்றுக்கொண்டுள்ளதாக எமது இணையத்தளத்துக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. W
பங்களாதேஷில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி இன் மகளிருக்கான T20 உலகக் கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 9ஆவது ஐசிசி மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பங்காளதேஷில் நடைபெற உள்ளது. மொத்தம் 18 நாட்களில் 23 போட்டிகள் நடைபெறவுள்ளன. இம்முறை ஐசிசி மகளிர் T20 உலகக் கிண்ணத்தில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள்
இலங்கை A அணிக்கெதிரான 4ஆவது உத்தியோகப்பூர்வமற்ற ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளால் ஆப்கானிஸ்தான் A அணி வெற்றிபெற்றுள்ளது. இலங்கை A அணி சார்பாக நிஷான் மதுஷக் அதிரடியாக துடுப்பெடுத்தாடி சதம் குவித்த போதிலும் அது கடைசியில் வீண் போனது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் A அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட ஒற்றை டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடி வருகின்றது. இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட உத்தியோகப்பூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்ட
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் இளம் நம்பிக்கை வேகப்பந்துவீச்சாளரான மதீஷ பதிரன இம்முறை IPL தொடரின் எஞ்சிய போட்டிகளில் ஆடுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. >> அமீரகத்தை வீழ்த்தி மகளிர் T20 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற இலங்கை மதீஷ பதிரனவிற்கு ஏற்பட்டிருக்கும் தசை உபாதையே அவருக்கு IPL தொடரின் எஞ்சிய போட்டிகளில் ஆட முடியாத நிலையை உருவாக்கியிருக்கின்றது. அதேநேரம் மதீஷ பதிரன தனக்கு ஏற்பட்டிருக்கும் உபாதையில் இருந்து குணமடையும் பொருட்டு தனது தாயகமான இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்
2024ஆம் ஆண்டு மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரின் எஞ்சிய அணிகளை தெரிவு செய்ய நடைபெற்று வரும் தகுதிகாண் சுற்றுத் தொடரின் அரையிறுதியில் நேற்று (05) அமீரக கிரிக்கெட் அணியை (ஐக்கிய அரபு இராச்சியம் – UAE) எதிர்கொண்ட இலங்கை மகளிர் வீராங்கனைகள் 15 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த அரையிறுதி வெற்றியுடன் 2024ஆம் ஆண்டுக்கான மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரிற்கும் இலங்கை தெரிவாகியுள்ளது. மகளிர் T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் இரண்டாவது அரையிறுதி அமீரக – இலங்கை ...
கொழும்பில் நேற்று (04) இடம்பெற்று முடிந்த ஆசிய டிவிஷன்-1 ரக்பி சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் கஷகஸ்தானை 45-07 என்கிற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய இலங்கை ரக்பி அணியானது, ஆசிய டிவிஷன்-1 ரக்பி சம்பியன்ஷிப் தொடரின் வெற்றியாளர்களாக நாமம் சூடியிருக்கின்றது. இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இலங்கை கொழும்பு குதிரைப்பந்தயத்திடல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் இலங்கை ரக்பி அணியானது தரிந்த ரத்வத்தவின் அபார ஆட்டத்தோடு, போட்டியின் முதல் பாதியில் 31-00 என முன்னிலை அடைந்தது. பி
எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மஹேந்திர சிங் டோனி தான் தந்தை (அப்பா) என இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திரமுமான மதீஷ பத்திரன நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் நடப்பு சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் 10 போட்டிகளில் 5 வெற்றியும், 5 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக பிளே-ஓப் சுற்றுக்கு தகுதி பெற அடுத்து வரும் போட்டிகளில் சென்னை அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ...
ஐசிசி T20 உலகக்கிண்ணத்திற்கான தயார்படுத்தலுக்காக நடைபெற்றுவரும் பயிற்சி T20 தொடரில் இன்று நடைபெற்ற SLC டீம் கிரீன் மற்றும் SLC டீம் ரெட் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டீம் ரெட் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டீம் கிரீன் அணி ஓட்டங்களை குவிக்க தடுமாறியதுடன் தினேஷ் சந்திமால், சஹான் ஆராச்சிகே மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோரின் ஓரளவு பங்களிப்புகளுடன் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களை பெற்றது. >>இலங்கை – தென்னாபிரிக்கா தொடருக்கான
சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் 2024-25 உள்நாட்டு சீசனுக்கான சர்வதேசப் போட்டி அட்டவணை நேற்று (03) அந்நாட்டு கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டது. இதன்படி, எதிர்வரும் சீசனில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆடவர் அணிகள் மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளன. சர்வதேசப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக இலங்கை
அடுத்த மாதம் ஆரம்பமாகவிருக்கும் T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கவிருக்ககும் ஐக்கிய அமெரிக்க (USA) அணி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. >>T20 உலகக்கிண்ணத்துக்கான மேற்கிந்திய தீவுகள் குழாம் அறிவிப்பு<< T20 உலகக் கிண்ணத் தொடர் இந்த ஆண்டு ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளில் நடைபெறுகின்றது. இந்த உலகக் கிண்ணத் தொடருக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் அடங்கிய ஐக்கிய அமெரிக்க குழாத்தில் நியூசிலாந்தின் முன்னாள் அதிரடி சகலதுறைவீரரான கோரி அன்டர்சன் இடம்பெற்றுள்ளார். கோரி அன்டர்சன
ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட மேற்கிந்திய தீவுகள் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் T20 உலகக்கிண்ண குழாத்தில் ஷெமார் ஜோசப் இணைக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடி வருவதுடன், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தார். எனினும் முதன்முறையாக மேற்கிந்திய தீவுகள் T20I அணியில் இடம்பிடித்துள்ளார். >>சிராஸ், சூரியபண்டார அதிரடியில் ஒருநாள் தொடரை வென்ற இலங்கை A அணி<< மேற்கிந்திய தீவுகள் அணியின
ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள நடுவர்கள் குழாத்தில் இலங்கையின் குமார் தர்மசேன கள நடுவராகவும், மற்றுமொரு இலங்கையரான ரஞ்சன் மடுகல்ல போட்டி மத்தியஸ்தராகவும் இடம்பெற்றுள்ளனர். அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத்துக்கான முதல் சுற்றுக்கான போட்டி நடுவர்களை ஐசிசி நேற்று (03) உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐசிசி பெயரிட்டுள்ள 20 பேர் கொண்ட அதிகாரிகளின் பட்டியலில், 20 கள நடுவர்கள் மற்றும் 6 போட்டி மத்த
ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் பொலிஸ் கழக விளையாட்டரங்கில் நேற்று இரவு (03) நடைபெற்ற டுபாய் கிராண்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் மற்றும் நதீஷா ராமநாயக்க ஆகிய இருவரும் வெற்றிகளைப் பதிவு செய்தனர். எனினும், குறித்த இரண்டு வீரர்களுக்கும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கான உரிய அடைவு மட்டத்தை எட்ட முடியாமல் போனது. ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.18 செக்கன்களில் நிறைவு செய்த யுப்புன் அபேகோன் 3ஆம் இடத்தைப் ...
2024ஆம் ஆண்டு மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரின் எஞ்சிய அணிகளை தெரிவு செய்ய நடைபெற்று வரும் தகுதிகாண் சுற்றுப் போட்டியில் நேற்று (03) ஐக்கிய அமெரிக்காவை எதிர்கொண்ட இலங்கை மகளிர் வீராங்கனைகள் 18 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வெற்றியுடன் மகளிர் T20 உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் குழு A இல் உள்ள இலங்கை அணியானது தமது குழுநிலைப் போட்டிகள் அனைத்தினையும் வெற்றியுடன் நிறைவு செய்து கொள்கின்றது. >>சிராஸ், சூரியபண்டார அதிரடியில் ஒருநாள் தொடரை வென்ற இலங்கை A ...
ஆப்கானிஸ்தான் A அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் உத்தியோகபூர்வமற்ற கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய இலங்கை A அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இன்னும் 2 போட்டிகள் எஞ்சியிருக்க 3-0 என தொடரை கைப்பற்றி அசத்தியது. மொஹமட் சிராஸின் அபார பந்துவீச்சு, சொனால் தினூஷவின் சகலதுறை ஆட்டம் மற்றும் பசிந்து சூரியபண்டாரவின் அதிரடி அரைச் சதம் என்பன இலங்கை A அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றின. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் A அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும்
பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு தகுதி பெறும் நோக்கில் இன்று (03) ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் பொலிஸ் கழக விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ள டுபாய் கிராண்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த அதி சிறந்த 4 வீரர்கள் பங்குபற்றவுள்ளனர். இலங்கை நேரப்படி இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறவுள்ள பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நதீஷா ராமநாயக்க களமிறங்கவுள்ளார். இதனிடையே, இலங்கையின் முன்னணி குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன் இரவு 7.50 மணிக்கு நடைபெறவுள்ள ஆண்களுக்கான