சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை 2007ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. தென்னாபிரிக்காவில் நடைபெற்ற முதல் தொடரில் டோனி தலைமையிலான இந்திய அணி சம்பியன் பட்டம் பெற்றது. >> ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் மீண்டும் ஒத்திவைப்பு இதுவரை 6 தடவைகள் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் மேற்கிந்திய தீவுகள் 2 தடவையும் (2012, 2016), இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் தலா ஒரு தடவையும் T20 உலகக் கிண்ண சம்பியன் பட்டங்களை ...
விஸ்டன் இதழினால் 2000ஆம் ஆண்டுகளின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக இலங்கையின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் பெயரிடப்பட்டுள்ளார். ‘கிரிக்கெட்டின் பைபிள்’ என்று வர்ணிக்கப்படும் இங்கிலாந்தின் விஸ்டன் இதழ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி 1971ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் தலைசிறந்த ஒருநாள் போட்டி வீரர்களை தேர்வு செய்து கௌரவித்துள்ளது. >> Video – “Tom Moody இன் வழிகாட்டலுடன் பாடசாலை கிரிக்கெட் கட்டமைப்பில
பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை சற்றுமுன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தேர்வுக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில், முதன்முறையாக இடதுகை சுழல் பந்துவீச்சாளர் ப்ரவீன் ஜயவிக்ரம இணைக்கப்பட்டுள்ளார். வறுமையை தாண்டி சாதனை நாயகனாக உருவெடுத்த பெதும் நிஸ்ஸங்க குறித்த இந்த குழாத்தில் இறுதியாக நடைபெற்ற கழகங்களுக்கு இடையிலான 50 ஓவர்கள் கிரிக்கெட் தொடரில் 7 போட்டிகளில் 15 விக
கடினமான சூழல்தான் ஒருவரைப் பக்குவப்படுத்துகிறது, செதுக்குகிறது, வெற்றி பேற வேண்டும் என்ற வைராக்கியத்தை மனதிலும், உடலிலும் விதைக்கிறது. இவை அனைத்தும் தமிழக வீரர், சின்னப்பம்பட்டி தங்கராசு நடராஜனுக்குப் பொருந்தும். டென்னிஸ் பந்தில் பயிற்சி, வறுமையான சூழல், கடினமான முயற்சிகளுக்குப் பின்புதான் TNPL, IPL, இந்திய அணியில் தனக்கான அடையாளத்தை நடராஜன் பதித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட IPL வீரர்கள் நடராஜனைப் போன்றே அதே கடினமான சூழலில் வந்து ஒரே போட்டியில் யார் இந்த வேகப் பந்துவீச்சாளர் என அனைவரையும் புருவத்தை உயர்த்
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் இயங்கிவரும் மல்க்ரெவ் கிரிக்கெட் கழக அணியின் (Mulgrave Cricket Club) தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் திலகரட்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் ‘மல்க்ரேவ் கிரிக்கெட் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திலகரட்ன டில்ஷான் எமது கழகத்துக்காக கடந்த வருடம் விளையாடியதுடன், எமது அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேற பெரிதும் உதவியிருந்தார். இலங்கை உருவாக்கிய அதிசிறந்த வீரர்களில் டில்ஷானும் ஒருவராவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 40க்கு மேல்
கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் அக்ஷர் பட்டேலுக்கு பதிலாக, புதுமுக சகலதுறை வீரர் சேம்ஸ் முலானி இணைக்கப்பட்டுள்ளார். அக்ஷர் பட்டேல் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், தொற்றிலிருந்து அவர் குணமடைந்து, அணிக்கு திரும்பும் வரையில் சேம்ஸ் முலானி டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியுடன் இணைந்திருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. >> டெல்லி கெபிடல்ஸ் வீரர் அன்ரிச் நோக்கியாவுக்கு கொரோனா தொற்று ஐ.பி.எல். வீரர்கள் விதிமுறை 6.1 இன் படி, ஐ.பி.எல். தொடரில் வீரர் ஒருவர் கொவிட்-19 தொற்
இலங்கையில் தமிழ்- சிங்கள மக்களால் கொண்டாடப்படும் வைபவமாக புதுவருடப் பிறப்பு இருப்பதால் இது ஒரு தேசியப் பெருவிழாவாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாக கருதப்படுகிறது.இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகள
இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் பகுதியில் 7 வருடஙகளின் பின் சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதிக்கு தகுதி பெற்ற செல்சி அணி, நடப்பு சம்பியன்களை வெளியேற்றிய பரிஸ் செயிண்ட் ஜெர்மைன், கிடைத்த வாய்ப்புகளை வீணடித்ததால் வெளியேறிய லிவர்பூல் மற்றும் PEP GUARDIOLA இன் கீழ் முதன் முறையாக அரையிறுதிக்கு சென்றுள்ள மென்செஸ்டர் சிட்டி போன்ற தகவல்களை பார்ப்போம். The post Video – சம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் 2 இங்கிலாந்து கழகங்கள் | FOOTBALL ULAGAM appeared first on ThePapare.com. ...
பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட உத்தேச இலங்கை அணி, பாக்கு நீரிணையை கடந்து புதிய ஆசிய சாதனை படைத்த ரொஷான் அபேசுந்தர, உள்ளூர் ஒருநாள் தொடரில் ஹெட்ரிக் சம்பியன் பட்டம் வென்ற NCC கழகம், இலங்கை தேசிய அணி மற்றும் இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கும் இடையிலான கண்காட்சி இருபதுக்கு 20 போட்டி மற்றும் கோலாகலமாக ஆரம்பமாகிய ஐபிஎல் தொடர் உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன. The post Video – இளம் வீரர்களுடன் BANGLADESH ஐ சந்திக்கும் இலங்கை அணி..!| Sports
சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்தவுடன் தங்களுடைய பெயர்களை சாதனை பெயர்களாக மாற்றுவதற்கான வாய்ப்பு வீரர்களுக்கு அதிகம். தேடிய இலக்கினை எட்டிய பிறகு சாதனைகளை குவிப்பது அப்படி ஒன்றும் கடினமான விடயமல்ல. ஆனால் நிர்ணயித்த சாதனையை அடைவதற்கான போராட்டமும், வலியும் எமக்கான வாழ்க்கையின் பாடத்தை கற்பிக்கக்கூடியவை. பங்களாதேஷ் டெஸ்ட் தொடரை இழக்கும் பெதும் நிஸ்ஸங்க? இலங்கை கிரிக்கெட்டை பொருத்தவரை, இந்த காலக்கட்டத்தில் பெரிதளவுக்கு பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றாலும், ஒரே ஒரு வீரர் பற்றிய பேச்சுகள் தொடர்ந்தும் வந்துக்கொண்டிரு
இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) T20 போட்டித் தொடரில் டெல்லி கெபிடல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளரும், தென்னாபிரிக்க வீரருமான அன்ரிச் நோக்கியாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இம்முறை IPL தொடரின் முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை இளம் வீரர் ரிஷாப் பாண்ட் தலைமையிலான டெல்லி கெபிடல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை வெற்றிகரமாக ஆரம்பம் செய்தது. இந்த நிலையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடன் அந்த அணி தமது இரண்டாவது போட்டியில் விளையாடவுள்ளது. IPL ...
வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதி ஒரு தமிழ் ஆண்டு எனப்படும். பூமி ஒரு தடவை சூரியனை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. சூரியன் ஆனது மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. இதனாலேயே தமிழ் வருடத்தின் கால அளவு எப்பொழுதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது. ஆங்கில நாட்காட்டியில் பெரும்பாலும் ஏப்ரல் 14 இல் தொடங்
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை 2022ஆம் ஆண்டு வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 1984 முதல் தற்போது வரை சிறப்பாக நடைபெற்று வரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இதுவரை 14 தடவைகள் நடைபெற்றுள்ளது. இதில் இந்திய அணி 7 தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்று உள்ளது. இறுதியாக கடந்த 2018இல் நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சம்பியனாகத் தெரிவாகியது. இந்த நிலையில், 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடத்த திட்டமிட்டிருந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் ...
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும், கிரிக்கெட் பயிற்சியாளருமான ஹீத் ஸ்ட்ரேக் கிரிக்கெட் சார்ந்த விடயங்களில் அடுத்த 8 வருடங்களுக்கு ஈடுபடாத அளவிற்கு தடை உத்தரவினை வழங்கியிருக்கின்றது. >> ICC இன் மார்ச் மாதத்தின் சிறந்த வீரராக புவனேஷ்வர் குமார் தேர்வு ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளராக கடந்த 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு வரையில் செயற்பட்ட ஹீத் ஸ்ட்ரேக், தான் பயிற்சியாளராக இருந்த காலங்களில் மேற்கொண்ட ஊழல் விடயங்களுக்காகவே தடை உத்தரவினை பெற்றிரு
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) மார்ச் மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை இந்திய வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் வென்றுள்ளார். இதில் மார்ச் மாதத்தின் சிறந்த வீராங்கனையாக தென்னாபிரிக்காவின் லிஸெலெ லீ தேர்வாகியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு மாதத்திற்குமான சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. >> மார்ச் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரர் யார்? சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிகளிலும் சிறப்
விரல் உபாதைக்கு ஆளாகிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் சகலதுறைவீரரான பென் ஸ்டோக்ஸ், இந்த ஆண்டுக்கான (2021) இந்திய ப்ரீமியர் லீக் தொடரில் (IPL) இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. >> இலங்கையை வந்தடைந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, IPL தொடருக்கான தமது முதல் போட்டியில் இம்முறை பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் விளையாடியிருந்தது. இந்தப் போட்டியின் போது கிறிஸ் கெயிலின் பிடியெடுப்பினை கைப்பற்ற முயற்சித்த பென் ஸ்டோக்ஸிற்கு சுட்டு விரலில் உபாதை உருவாகியிருந்ததோடு, தற்போது இந்த உபாதை அவருக்கு IP
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபையின் தலைவர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி இலங்கை கிரிக்கெட் அணியில் அங்கம் வகிக்கும் வீரர்களுக்கு இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ‘அஸ்ரா செனகா’ தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது. இதன் முதலாவது கட்ட தடுப்பூசியை நேற்றுமுன்தினம் (11) கொழும்பில் வைத்து செலுத்துவதற்கும், இ
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான உத்தேச இலங்கை குழாத்தில், முதன்முறையாக இடதுகை சுழல் பந்துவீச்சாளர் ப்ரவீன் ஜயவிக்ரம இணைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தேர்வுக்குழு, பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடவுள்ள 17 பேர்கொண்ட இலங்கை குழாத்தை தெரிவுசெய்துள்ளது. பங்களாதேஷ் டெஸ்ட் தொடரை இழக்கும் பெதும் நிஸ்ஸங்க? குறித்த இந்த குழாத்தில் இறுதியாக நடைபெற்ற கழகங்களுக்கு இடையிலான 50 ஓவர்கள் கிரிக்கெட் தொடரில் 7 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த
இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL), இலங்கையின் கால்பந்து விளையாட்டில் அபிவிருத்தியை மேற்கொள்ளும் நோக்கில் நடுவர்களுக்கான தொடர்பாடல் உபகரணங்களை நேற்றைய தினம் (12) கையளித்திருக்கின்றது. Video – MBAPPE ஐ கட்டுப்படுத்த தடுமாறும் எதிரணிகள் !FOOTBALL ULAGAM அதன்படி, இவ்வாறு கையளிக்கப்பட்டிருக்கும் தொடர்பாடல் உபகரணத் தொகுதிகள், இலங்கை கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக இம்மாதம் 19ஆம் திகதி தொடக்கம் நடைபெறவிருக்கும் தொழில்முறை கால்பந்து தொடரான சுபர் லீக் தொடரில் உபயோகம் செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த வாரம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலஙகை சாதனையுடன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட டில்ஷி குமாரசிங்க, ஆசிய தரப்படுத்தலில் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறித்த போட்டியை 2 நிமிடங்கள் 02.52 செக்கன்களில் நிறைவு செய்த அவர், புதிய இலங்கை சாதனை படைத்தார். பெண்களுக்கான 800 மீற்றரில் இலங்கை சாதனை படைத்தார் டில்ஷி குமாரசிங்க இதன்படி, கடந்த 2017இல் கயன்திகா அபேரட்னவினால் நிலைநாட்டி