ஐசிசியின் ஒருநாள் உலகக் கிண்ண சுபர் லீக் தொடருக்கான புள்ளிப் பட்டியலில் 8ஆவது இடத்தைப் பிடித்து இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கு நேரடி தகுதி பெறும் கடைசி அணிக்காக மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய 3 அணிகள் இடையே பலத்த போட்டி நிலவி வருகின்றது. இதுதொடர்பில் ThePapare.com இணையத்தளத்தின் ஊடகவியலாளர் மொஹமட் றிஷாட் வழங்குகின்ற விசேட தொகுப்பு The post WATCH – ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் ஆடும் இலங்கை? |2023 ODI World Cup appeared ...
சுற்றுலா இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இலங்கை A கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநிறைவில் இங்கிலாந்து லயன்ஸ் ஹஸீப் ஹமிட், டொம் ஹெய்னஸ் மற்றும் அலெக் லீஸ் ஆகியோரது அரைச்சதங்களுடன் வலுப் பெற்றிருக்கின்றது. பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகும் சந்திக்க ஹதுருசிங்க இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணி தமது சுற்றுப் பயணத்தில் முதற்கட்டமாக இரண்டு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது. அதன்படி இந்த உத்தியோகபூர்வமற்ற டெ
அதிகாரம் 3 : போரின் குழந்தை பிறைமருக்கு மாற்றலாகிப் போன முதல்நாள், அவளுடன் வேலை செய்வதற்கு நந்தனுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. மறுநாள் காரின் இரண்டு பக்கங்களிலும் நின்று வேலை செய்தார்கள். அவளின் பெயரைச் சொல்லி அவளை அசத்த வேண்டும் என விரும்பினான் நந்தன். ”உனது பெயர் லோம் தானே?” அவளிடமிருந்து பதில் வரவில்லை. மீண்டும் கேட்டான். “இல்லை!” அவளது முகம் சடுதியாக இருண்டது. ஆனாலும் அவள் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. “அப்ப உனது அப்பாவின் பெயரா அது?” “இல்லை என்னுடைய பெயர் புங். ...
நியூ சவூத் வேல்ஸ் (NSW) அணியின் உதவிப் பயிற்சியாளராக செயற்பட்டு வந்த சந்திக்க ஹதுருசிங்க தனது பதவியில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. >> பாகிஸ்தான் அணிக்காக இன்னும் விளையாடலாம் – சொஹைப் மலிக் இலங்கை அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் சந்திக்க ஹதுருசிங்க பங்களாதேஷ் (2014-2017), இலங்கை தேசிய கிரிக்கெட் அணிகளின் (2017-2019) முன்னாள் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டிருக்கின்றார். ஹதுருசிங்க அவுஸ்திரேலியாவின் உள்ளூர் பிராந்திய அணியான நியூ சவூத் வேல்ஸ் அணிக்கு பயிற்சியாளராக மு
தன்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக இன்னும் விளையாட முடியும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அனுபவமிக்க சகலதுறைவீரரான சொஹைப் மலிக் தெரிவித்திருக்கின்றார். >> சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் முரளி விஜய்! பெப்ரவரி மாதத்துடன் தன்னுடைய 41ஆவது வயதினை பூர்த்தி செய்யும் சொஹைப் மலிக் ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் ஓய்வினை அறிவித்திருக்கின்ற போதும் T20i போட்டிகளில் இன்னும் ஓய்வினை அறிவிக்கவில்லை. அந்தவகையில் கடைசியாக 2021ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் பாகிஸ்தான் அணியினைப் பிரதிநிதித்துவம் செய்த சொஹைப் மலி
மேற்கிந்திய தீவுகள் ஆடவர் கிரிக்கெட் அணியின் செயல்திறன் ஆலோசகராக (Performance Mentor) அந்த அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான பிரையன் லாரா நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, அந்நாட்டு ஆடவர் சர்வதேச கிரிக்கெட் அணி மற்றும் கிரிக்கெட் சபை அகடமியுடன் இணைந்து லாரா பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியில் உள்ள பயிற்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது மற்றும் வீரர்களுக்கு தந்திரோபாய ஆலோசனைகளை வழங்குவது பிரையன் லாராவின் பிரதான பணியாக அமைந்துள்ளது. அத்துடன், இந்த ஆண்ட
இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் முரளி விஜய் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ்நாடு வீரரான முரளி விஜய் இந்திய அணிக்காக இறுதியாக 2018ம் ஆண்டு விளையாடியிருந்தார். அதனைத்தொடர்ந்து தேசிய அணியில் அவருக்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. >> அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறாரா தசுன் ஷானக? எனவே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுதற்கு முரளி விஜய் தீர்மானித்துள்ளார். எனினும் சர்வதேசத்தில் இருக்கும் கிரிக்கெட்டுக்கான வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதற்கும், அதனை பொரு
இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் T20I போட்டிகளுக்கான தலைவர் தசுன் ஷானக எந்த அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்படவில்லை என தெரிவித்துள்ளார். தசுன் ஷானகவின் புகைப்படத்துடன் ஒருசில அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டுவருவதாக தசுன் ஷானக சுட்டிக்காட்டியுள்ளார். >> UAE அணியுடன் T20I தொடரில் ஆடவுள்ள ஆப்கானிஸ்தான் இவ்வாறு தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி பிரச்சாரங்களை மேற்கொண்டுவருதற்கும், தனக்கும் எந்தவொரு தொடர்புகளும் இல்லையென குறிப்பிட்ட தசுன் ஷானக, அரசியலில் தனக்கு எந்தவ
பிரமோத்ய விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கலைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பிரமோத்ய விக்கிரமசிங்க தலைமையில் தேர்வு செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி ஆசியக் கிண்ணத்தை வென்று வெறும் நான்கு மாதங்கள் கடந்திருக்கும் நிலையில், தேர்வுக்குழுவானது கலைக்கப்படவிருக்கிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. >> UAE அணியுடன் T20I தொடரில் ஆடவுள்ள ஆப்கானிஸ்தான் கடந்த 2021ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் பொறுப்பேற்ற பிரமோத்ய விக்கிரமசிங்க தலைமையிலான தேர்வுக்குழு திமுத் கருணாரட
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு (UAE) எதிராக மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகளுக்கு இடையிலான இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடர் எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், தொடருக்கான முதற்கட்ட ஆப்கானிஸ்தான் குழாமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்னாவை வீழ்த்திய தம்புள்ள அணிக்கு முதல் வெற்றி எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கான ஆப்கானிஸ்தான் அணியின் போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவதற்கான ஒப்
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு ஆண்டுகள் போட்டித் தடையை ஏற்கனவே சந்தித்துள்ள ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் முன்னாள் தேசிய சம்பியனான ஹிமாஷ ஏஷானுக்கு விதிக்கப்பட்ட தடையை ஆறு ஆண்டுகளாக நீட்டிக்க இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த தடை தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (24) குற்றஞ்சாட்டப்பட்ட வீரருக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது இலங்கை ஊக்கமருந்து தடுப்பு
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இரண்டாவது வாரத்துக்கான மற்றுமொரு போட்டியில் ஜப்னா அணியை 5 விக்கெட்டுகளால் தம்புள்ள அணி வீழ்த்தியது. கொழும்பு SSC மைதானத்தில் கடந்த 25ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய ஜப்னா அணி, விஷ்வ பெர்னாண்டோ மற்றும் அசித பெர்னாண்டோவின் அபார பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் 62 ஓட்டங்களுக்கு சுருண்டது. தம்புள்ள அணியின் பந்துவீச்சில் விஷ்வ பெர்னாண்டோ 14 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், அச
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இரண்டாவது வாரத்துக்கான இரண்டு போட்டிகளின் மூன்றாவது நாள் ஆட்டங்கள் நேற்று (27) நிறைவுக்கு வந்தன. இதில் கொழும்பு அணிக்கு எதிரான போட்டியில் காலி அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டி இம்முறை போட்டித் தொடரில் தொடர்ச்சியாக 2ஆவது வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இதேவேளை, தம்புள்ளை மற்றும் ஜப்னா அணிகளுக்கிடையிலான போட்டியின் மூன்றாவது நா
தென்னாப்பிரிக்காவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி மகளிர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான நடுவர்கள் குழாத்தில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு பெண் நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, மிட்;செல் பெரேரா போட்டி மத்தியஸ்தராகவும், நிமாலி பெரேரா கள நடுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐசிசியின் அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான T20 உலகக் கிண்ணத் தொடர் தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருவதுடன், இந்த தொடர் நிறைவடைந்தவுடன், ஐசிசியின் 8ஆவது மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடர் தென்னாப்பிரிக்காவில் ப
பாகிஸ்தானில் ஆரம்பமாகியுள்ள மேற்காசிய பேஸ்போல் கிண்ணத்தொடரில் தங்களுடைய முதல் போட்டியில் நேபாள அணியை, இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளது. மேற்காசிய பேஸ்போல் கிண்ணத்தொடரானது ஜனவரி 26ம் திகதி முதல் பெப்ரவரி 2ம் திகதிவரை பாகிஸ்தானில் நடைபெறுகின்றது. இந்த தொடரானது கடந்த வருடம் நடைபெறவிருந்த நிலையில், இலங்கை அணி பயிற்சிகளை ஆரம்பித்திருந்தது. எனினும், கொவிட்-19 தொற்று காரணமாக தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டிருந்தது. >> கனிஷ்ட உலக கபடி சம்பியன்ஷிப்புக்கு 3 நிந்தவூர் வீரர்கள் தெரிவு எனினும் இதற்கான பயிற்சிகளை இலங்கை அணி
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இரண்டாவது வாரத்துக்கான இரண்டு போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டங்கள் இன்று (27) நிறைவுக்கு வந்தன. இதில் காலி அணியின் சங்கீத் குரே சதம் அடித்து பிராகாசிக்க, அதே அணியைச் சேர்ந்த லக்ஷான் எதிரிசிங்க, விஷான் ரன்திக மற்றும் தம்புள்ள அணியின் மினோத் பானுக மற்றும் ரனித லியனாரச்சி ஆகியோர் அரைச் சதங்களைக் குவித்தனர். ஜப்னா எதிர் தம்புள்ள கொழும்பு, SSC மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இந்தப் ...
இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிகள் இடையே நடைபெற்ற மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை, இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தியுள்ளது. 2022இன் ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரராக பாபர் அசாம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணி உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் இங்கே விளையாட முன்னர் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி ஒன்றில் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடன் ஆடுகின்றது. அதன
19 வயதின் கீழ்ப்பட்ட மகளிர் அணிகளுக்காக முதல் தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் T20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு போட்டி மத்தியஸ்தராக (Match Referee) செயற்படும் வாய்ப்பினை இலங்கையைச் சேர்ந்த வனேஸ்ஸா டி சில்வா பெற்றிருக்கின்றார். >> ஜப்னா அணியை பந்துவீச்சில் மிரட்டிய விஷ்வ, அசித இதன் மூலம் வனேஸ்ஸா டி சில்வா உலகக் கிண்ணத் தொடர் ஒன்றின் இறுதிப் போட்டிக்கு மத்தியஸ்தம் செய்கின்ற பொறுப்பினை பெற்ற முதல் இலங்கை பெண்ணாக சாதனை செய்திருக்கின்றார். அதேவேளை வனேஸ்ஸா டி சில்வாவுடன் இணைந்து தென்னாபிரிக்
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) 2022ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சேர் கார்பீல்ட் சோபர்ஸ் விருது மற்றும் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருது ஆகிய 2 விருதுகளையும் பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் வென்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவை ஓவ்வொரு ஆண்டும் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து, அவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. டெஸ்ட், ஒருநாள், T20I என மூன்று வகை கிரிக்கெட்டிலும் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு பல
நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான இந்திய அணியிலிருந்து ருதுராஜ் கைகவட் நீக்கப்பட்டுள்ளார். ருதுராஜ் கைகவட்டிற்கு மணிக்கப்பட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் பெங்களூரில் அமைந்துள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் சிகிச்சைப்பெற்றுக்கொள்ள உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்னா அணியை பந்துவீச்சில் மிரட்டிய விஷ்வ, அசித ரஞ்சி கிண்ணத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் விளையாடியதன் பின்னர், மணிக்கட்டு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளதாக கைகவட் தெரிவித்துள்ள