சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில் இலங்கை அணி தனன்ஞய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் ஆகியோரது சதங்களோடு பலம் பெற்றிருக்கின்றது. >>ஐபில் தொடரை தவறவிடும் நான்கு இலங்கை வீரர்கள்?<< முன்னதாக சில்லேட் நகரில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் தலைவர் நஜ்முல் ஹொசைன் ஷன்டோ முதலில் இலங்கையை துடுப்பாடப் பணித்தார். அதன்படி இப்போட்டியில
இத்தாலியில் நடைபெற்ற Florence Sprint Festival 2024இல் பங்குகொண்ட இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன், ஆண்களுக்கான 150 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த சனிக்கிழமை (13) நடைபெற்ற குறித்த போட்டித் தொடரில் 150 மீற்றர் தூரத்தை 15.19 செக்கன்களில் ஓடி முடித்த யுபுன் அபேகோன், 2024 மெய்வல்லுனர் பருவகாலத்தை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளார். 150 மீற்றர் ஓட்டத்தில் யுபுனின் 2ஆவது அதிசிறந்த காலப் பெறுமதியாக இது பதிவாகியது. முன்னதாக அவர் 150 மீற்றர் ஓட்டத்தை 15.16 செக்கன்களில் நிற
இந்த ஆண்டுக்கான மகளிர் T20I உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் பங்கெடுக்கும் 15 பேர் அடங்கிய இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. LPL தொடருக்கான வீரர்கள் பதிவு ஆரம்பம்! 2024ஆம் ஆண்டுக்கான மகளிர் T20I உலகக் கிண்ணத் தொடர் ஒக்டோபர் மாதம் பங்களாதேஷில் நடைபெறவிருக்கின்றது. இந்த T20I உலகக் கிண்ணத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கெடுக்கும் நிலையில் 8 அணிகள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. எனவே உலகக் கிண்ணத் தொடரின் எஞ்சிய 2 அணிகளையும் தெரிவு செய்ய தகுதிகாண் தொடர் இம்மாதம் ...
ACC பிரீமியர் கிண்ண T20I தொடரின் கட்டார் அணிக்கு எதிரான போட்டியில் நேபாள வீரர் திபெந்ர சிங் ஐரீ 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார். சர்வதேச T20I கிரிக்கெட்டில் இந்திய வீரர் யுவராஜ் சிங் மற்றும் மேற்கிந்திய தீவுகள் வீரர் கீரன் பொல்லார்ட் ஆகியோருக்கு அடுத்தப்படியாக 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்களை விளாசிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார். மகளிர் T20I உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடருக்கான ஆடும் இலங்கை இன்னிங்ஸின் கடைசி ஓவர் ஆரம்பத்தில் 15 பந்துகளுக்கு ...
இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான குழாத்திலிருந்து பங்களாதேஷ் வீரர் முஷ்பிகூர் ரஹீம் நீக்கப்பட்டுள்ளார். ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) ஆரம்பமாகவுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்ட வனிந்து ஹஸரங்கவிற்கு போட்டித்தடை குறித்த இந்த டெஸ்ட் தொடருக்கான குழாத்தில் அனுபவ விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் முஷ்பிகூர் ரஹீம் இணைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் உபாதைக்கு முகங்கொடுத்துள்ள காரணத்தால் அணியிலிருந்து நீக
தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என்பவற்றில் ஆடவிருக்கின்றது. >>உயர் செயற்திறன் மையத்துக்கான புதிய பயிற்றுவிப்பாளர்கள் நியமனம்<< அந்தவகையில் இந்த கிரிக்கெட் சுற்றுத் தொடர்களுக்காக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நாளை (23) தென்னாபிரிக்கா பயணமாகவிருக்கும் நிலையில் இந்த சுற்றுத்தொடரில் பங்கெடுக்கும் 17 பேர் அடங்கிய இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் குழாம் அறிவிக்கப்பட்டிர
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பிக் பேஷ் லீக்கின் அடுத்த பருவகாலத்தில் ஆப்கானிஸ்தானின் முன்னணி வீரர் ரஷீட் கான் பங்கேற்பது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவிருந்த மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரை ஒத்திவைப்பதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது. ஐபிஎல் இல் புது வரலாறு படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் அரசு அமைக்கப்பட்ட பின்னர் மகளிருக்கான அனைத்து வகை விளையாட்டுகளும் நிறுத்தப்பட்டன. ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியும் இதனால் பாதிக்கப்பட்டது.
மேற்கிந்திய தீவுகளின் அதிரடி சகலதுறை துடுப்பாட்டவீரரான சுனீல் நரைன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் ஆடுவதற்கான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஐபிஎல் இல் புது வரலாறு படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 35 வயது நிரம்பிய சுனீல் நரைன் கடந்த ஆண்டின் நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வினை அறிவித்திருந்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்ற போதிலும் உள்ளூர் T20 லீக்குகளில் தொடர்ந்து ஆடி வந்த அவர் தற்போது நடைபெற்று வருகின்ற இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக து
நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான பாகிஸ்தான் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அஷாம் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் குழாத்தில் பல முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் முக்கிய மாற்றங்களாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் மொஹமட் ஆமிர் மற்றும் இமாட் வசீம் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக மாறும் அஷார் மஹ்மூட் மொஹமட் ஆமிர் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான T20I தொடரில் பாகிஸ்
ஐபிஎல் தொடரில் கடந்த 16 ஆண்டுகளாக றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற பெயரில் விளையாடி வந்த RCB அணி இந்த முறை ‘றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு’ என அதனை மாற்றியுள்ளது. அதேபோல, அந்த அணி நிர்வாகம் புதிய ஜெர்ஸியையும், புதிய இலச்சினையும் அறிமுகம் செய்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் இன்னும் 2 நாட்களில் ஆரம்பமாக உள்ளது. இதன் முதலாவது போட்டியில்ல் நடப்பு சாம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் – றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. ...
சுற்றுலா இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் தென்னாபிரிக்க மகளிர் அணி ஆகியவை இடையே நடைபெற்று முடிந்த மகளிர் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. T20I உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான இலங்கை மகளிர் குழாம் அறிவிப்பு தென்னாபிரிக்கா சென்றிருக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அங்கே T20I தொடரினை அடுத்து தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றது. ஐ.சி.சி. சம்பியன்ஷிப்பிற்காக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி கைவிடப்பட இரண்டாவது ஒருநாள் ப
பங்களாதேஷ் அணிக்கு எதிராக வேகப்பந்துவீச்சாளர்கள் வெளிப்படுத்திய பிரகாசிப்பு தொடர்பில் கூறும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட். The post இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு பிரகாசிப்பு எப்படி? | Sports Field appeared first on ThePapare. ...
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களான கமிந்து மெண்டிஸ் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் சர்வதேச டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முன்னேற்றங்களை கண்டுள்ளனர். பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 192 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியினை பதிவுசெய்திருந்தது. >>IPL தொடரில் விளையாட வியாஸ்காந்திற்கு வாய்ப்பு!<< இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கமிந்து மெண்டிஸ் 92 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தார். இதன்மூலம் 18 இடங்கள் முன்னேறியுள்ள இவர் 46வது இடத்தை பிடித
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் இமாத் வசீம் தனது முடிவை மாற்றிக்கொண்டு, ஐசிசி T20 உலகக் கிண்ணத்தில் விளையாடத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அண்மையில் முடிவடைந்த பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் சம்பியன் பட்டம் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக ஆடிய இமாத் வசீம் சிறப்பாக செயல்பட்டதுடன், முதல்தான் சுல்தான்ஸ்; அணியுடனான இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவானா
இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் மையத்துக்கான (High Performance Center) புதிய பயிற்றுவிப்பு நியமனங்களை இலங்கை கிரிக்கெட் சபை வழங்கியுள்ளது. புதிய பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனங்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகக் குழு அனுமதியை வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. >> ஐபில் தொடரை தவறவிடும் நான்கு இலங்கை வீரர்கள்? அதன்படி இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் மையத்தின் வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக அனுஷ சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இலங்கை தேசிய அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்
பங்களாதேஷ் அணிக்கு எதிரான T20i தொடரில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர்களான ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் ரிஷாட். The post WATCH – பொறுப்பான ஆட்டங்களை வெளிப்படுத்த தவறும் துடுப்பாட்ட வீரர்கள்! | Sports Field appeared first on ThePapare. ...
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநிறைவில் இலங்கை நிர்ணயம் செய்த போட்டியின் இமாலய வெற்றி இலக்கை (511) நோக்கி இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடும் பங்களாதேஷ் சரிவை எதிர் நோக்கியுள்ளது >>சவாலான இலக்கை நோக்கி முன்னேறும் இலங்கை கிரிக்கெட் அணி<< சில்லேட் நகரில் நடைபெறும் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர நிறைவில் தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வந்த இலங்கை அணி 119 ஓட்டங்களுக்கு ...
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னணி சகலதுறை வீரர் கிளேன் மெக்ஸ்வல் உடல் மற்றும் உளவியல் ரீதியில் தயாராகுவதற்காக IPL போட்டியொன்றிலிருந்து விலகியுள்ளார். கிளேன் மெக்ஸ்வெல் பெருவிரலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன. முஸ்தபிசுர் ரஹ்மானிற்கு சிறு அவகாசம் வழங்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் எனினும் அவருடைய பிரகாசிப்பின்மை காரணமாக அணியிலிருந்து சற்று ஓய்வை பெற்றுக்கொண்டதாக கிளேன் மெக்ஸ்வெல் கருத்து தெரிவித்துள்ளார். “தன
ஐபிஎல் தொடரில் நேற்று (15) நடைபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் ஐபிஎல் போட்டிகள் வரலாற்றில் அதிகபட்ச ஓட்டங்களைக் குவித்த அணி எனும் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 30ஆவது லீக் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 20 ஓவர்கள் முடிவில்