இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு தகுதி பெறும் நோக்கில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டுபாய் கிராண்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் தொடரில் இலங்கையைச் சேர்ந்த நான்கு வீரர்கள் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இம்முறை ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்ற தெற்காசியாவின் அதிவேக வீரரும், பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்றவருவமான யுபுன் அபேகோன் ஆண்களுக்கான 100 மீற்றர் போட்டியில் களமிறங்கவுள்ளார்
இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) விளையாடி வரும் அவுஸ்திரேலிய வீரர் மிச்சல் மார்ஷ் தசைப்பிடிப்பு உபாதை காரணமாக அடுத்து வரும் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிச்சல் மார்ஷிற்கு தற்போது ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பு உபாதை காரணமாக அவரால் குறைந்தது ஒரு வாரத்துக்கு போட்டிகளில் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. >> ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் வனிந்து ஹஸரங்க அதுமாத்திரமின்றி உடற்கூறு நிபுனரின் அறிக்கையை தொடர்ந்து அவர் இம்முறை தொடரில் முழுமையாக விளையாடுவாரா? இல்லையா என்பது தொடர
நியூசிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் ஆடவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக அஷார் மஹ்மூட் செயற்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. >> டெல்லி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட தென்னாபிரிக்கா வேகப் புயல் அடுத்த வாரம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணியானது அங்கே ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆடவிருக்கின்றது. இந்த T20I தொடரின் போட்டிகள் லாஹூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய மைதானங்களில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த T20I தொடரில
ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று (24) ஆரம்பமான 21ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கையின் நெத்மிகா மதுஷானி ஹேரத் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் பங்குகொண்ட அவர், 13.01 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அத்துடன், இது அவரது தனிப்பட்ட அதிசிறந்த தூரப் பெறுதியாகும். இம்முறை ஆகிய கனிஷ்ட மெய்வலலுனர் போட்டியில் இலங்கைக்கு கிடைத்த முதலாவது பதக்கம் இதுவாகும். 2014ஆம் ஆண்டு ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் ச
இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) இலங்கை அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைக்கப்பட்டுள்ளார். தமிழ்பேசும் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் இலங்கை அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரும், T20I அணியின் தலைவருமான வனிந்து ஹஸரங்கவுக்கு பதிலாக சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். தமிழ்பேசும் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் இலங்கை அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரும், T20I அணியின் தலைவருமான வனிந்து ஹஸரங்கவுக்கு பதிலாக சன்ரைஸர்ஸ்
பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணியின் துடுப்பாட்ட பிரகாசிப்பு மற்றும் குசல் மெண்ஸின் பிரகாசிப்பின்மை தொடர்பில் கூறும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட். The post WATCH – அசத்திய கமிந்து, தனன்ஜய; தொடர்ந்து ஏமாற்றும் மெண்டிஸ்! | Sports Field appeared first on ThePapare. ...
சென்னை சுபர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனி தாமதமாக துடுப்பெடுத்தாடுவதற்கான காரணத்தை அணியின் பயிற்றுவிப்பாளர் ஸ்டீபன் பிளெமிங் வெளியிட்டுள்ளார். டோனி இந்த ஆண்டு அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகியிருந்தாலும், இன்னிங்ஸின் இறுதி ஓவர்களில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி வருகின்றார். >> சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகும் முக்கிய வீரர் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் கடைசி ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசியிருந்தார். இறுதியாக லக்னோவ் சுபர் ஜயண
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை அணியானது குசல் மெண்டிஸ், நிஷான் மதுஷ்க மற்றும் திமுத் கருணாரட்ன ஆகியோரது அரைச்சதங்களோடு வலுப் பெற்றிருக்கின்றது. >>அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவு செய்த இலங்கை U19 மகளிர் கிரிக்கெட் அணி இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது முன்னதாக சட்டோக்ரமில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் தனன்ஞய டி சில்வா முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவ
விஷ்மி குணரத்ன மற்றும் கவிஷா தில்ஹாரியின் அபார ஆட்டத்தின் உதவியால் தென்னாபிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான 2ஆவது T20i போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டியது. போர்செப்ஸ்ட்ரூமில் நேற்று (28) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த தென்னாபிரிக்கா மகளிர் அணி 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை Anneke Bosch 32 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 50 ...
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை கிரிக்கெட் அணியானது தினேஷ் சந்திமால், தனன்ஞய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோரது அரைச்சதங்களோடு முதல் இன்னிங்ஸில் இமாலய ஓட்டங்களை குவித்திருக்கின்றது. IPL தொடரினை முழுமையாக தவறவிடும் வனிந்து ஹஸரங்க சட்டோக்ரமில் நடைபெற்று வரும் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநிறைவில் இலங்கை அணியானது 314 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தத
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநிறைவில் இலங்கை நிர்ணயம் செய்த கடின வெற்றி இலக்கை (511) நோக்கி இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடும் பங்களாதேஷ் அணியானது தடுமாற்றமான நிலையில் காணப்படுகின்றது. சவாலான வெற்றி இலக்கை நிர்ணயிக்க போராடும் இலங்கை அணி சட்டோக்ரம் நகரில் இலங்கை – பங்களாதேஷ் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நிறைவுக்கு வந்த போது தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வந்த ...
2024ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் T20 போட்டிகளாக இந்த ஆண்டும் நடைபெறவுள்ள மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரானது ஜூலை மாதம் 17ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷ் குழாத்தில் இணையும் முன்னணி வீரர்! ஆசிய கிரிக்கெட் வாரியம் (ACC) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இம்முறை தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கெடுக்கவிருப்பதோடு, 8 அணிகளும் இரண்டு குழுக்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு இந்துக்கல்லூரி அணிகள் இடையே நடைபெற்ற இந்துக்களின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டி | Highlights The post HIGHLIGHTS – 13ஆவது இந்துக்களின் சமர் appeared first on ThePapare. ...
பூட்டான் அணிக்கு எதிரான இலங்கை கால்பந்து அணியின் வெற்றி மற்றும் மொஹமட் பஸாலின் ஓய்வு தொடர்பில் கூறும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட். The post WATCH – அபார ஆட்டத்துடன் பூட்டானை வீழ்த்திய இலங்கை கால்பந்து அணி | Sports Field appeared first on ThePapare. ...
தென்னாபிரிக்காவினைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் போட்டி நடுவரான மரைஸ் எரஸ்மஸ் 2019ஆம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நடைபெற்ற இரண்டு தவறுகள் குறித்து மனம் திறந்திருக்கின்றார். இரத்தினரபுரியில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் திறந்து வைப்பு 2019ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியிருந்தன. இந்த உலகக் கிண்ண இறுதிப் போட்டியானது சமநிலையில் நிறைவுக்கு வர பௌண்டரிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் இங்கிலாந்து சம்பியன் பட்
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் யாழ்ப்பாண கல்லூரி அணிகள் இடையே நடைபெற்ற பொன் அணிகளின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டி | Highlights The post WATCH – 107ஆவது பொன் அணிகளின் சமர் appeared first on ThePapare. ...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான தலைவராக பாபர் அஷாம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பாபர் அஷாம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அனைத்துவகை போட்டிகளினதும் தலைவராக செயற்பட்டுவந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக்கிண்ணத்தின் பின்னர் தலைவர் பதவியிலிருந்து விலகினார். >> 2ஆவது T20i போட்டியில் வென்றது இலங்கை மகளிர் அணி T20 உலகக்கிண்ணத்தின் போது பாகிஸ்தான் அணி வெளிப்படுத்திய மோசமான பிரகாசிப்புகளின் காரணமாக தன்னுடைய பதவியிலிருந்து விலகியிருந்தார்.
தென்னாபிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக Potchefstroom, சென்வஸ் பாக் விளையாட்டரங்கில் நேற்று (17) நடைபெற்ற 3ஆவதும், கடைசியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சமரி அத்தபத்துவின் அதிரடி சதம் மற்றும் நிலக்ஷிகா சில்வாவின் அரைச் சதத்தின் உதவியுடன் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 6 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் இவ்விரு அணிகளுக்கும் இiயிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1க்கு 1 என்ற கணக்கில் சமநிலையில் முடித்தது. இந்தப் போட்டியில் தென்னாபிரிக்கா மகளிர் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 302 ஓட
தென்னாபிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக ஈஸ்ட் லண்டன், Buffalo Park விளையாட்டரங்கில் நேற்று (03) நடைபெற்ற 3ஆவதும், கடைசியுமான கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 2க்கு 1 என்ற கணக்கில் T20i தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இதன்மூலம் தென்னாபிரிக்காவிற்;கு எதிராக அனைத்து வகையான மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை ஈட்டிய முதலாவது தொடர் வெற்றி இதுவாகும். இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி முதலில் களத்த