த்ரில்லராக நடைபெற்று முடிந்திருக்கும் ஜப்னா கிங்ஸ் மற்றும் கண்டி பல்கோன்ஸ் இடையிலான லங்கா பிரீமியர் லீக் (LPL T20) 2024ஆம் ஆண்டு தொடரின் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் ஜப்னா கிங்ஸ் 01 ஓட்டத்தினால் வெற்றி பெற்றுள்ளது. >> மேலும் இந்த அசத்தல் வெற்றியோடு ஜப்னா கிங்ஸ் LPL T20 தொடரின் இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (21) கோல் மார்வல்ஸை எதிர்த்தாடும் வாய்ப்பினையும் பெற்றிருக்கின்றது. அதேநேரம் இப்போட்டியில் தோல்வியடைந்த LPL T20 தொடரின் நடப்புச் சம்பியன்களான கண்டி பல்கோன்ஸ் தொடரில் இருந்து வெளியேறுகின்றது
பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான மகளிருக்கான ஆசியக் கிண்ணப் போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. உதேஷிக்கா ப்ரபோதனி, இனோஷி ப்ரியதர்ஷனி ஆகியோரின் அபார பந்துவீச்சுகளும், இளம் வீராங்கனை விஷ்மி குணரட்னவின் அரைச் சதமும் இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. எட்டு அணிகள் பங்குபற்றுகின்ற 9ஆவது மகளிருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரானது இலங்கையில் நேற்று ஆரம்பமாகியது. ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இத்தொடரில் இன்று (20) இரவ
சமரி அத்தபத்துவின் சாதனை சதத்தின் உதவியுடன் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (22) நடைபெற்ற மகளிருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 7ஆவது போட்டியில், மலேசியா அணியை 114 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி புதிய சாதனை படைத்தது. இதன் மூலம். மகளிருக்கான சர்வதேச T20i போட்டியில் இலங்கை மகளிர் அணி அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய போட்டியாக இது வரலாற்றில் இடம்பிடித்தது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 4
பங்களாதேஷில் தற்போது நிலவி வருகின்ற கலவர நிலைமைகள் தொடர்பில் கொழும்பில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி.) இன் கூட்டத் தொடரின் போது கருத்திற் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. >>இலங்கை வரும் இந்திய அணிக்கு புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளர் பங்களாதேஷில் இந்த ஆண்டு மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடர் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த தொடர் தற்போது அங்கே நிலவி வருகின்ற போராட்டங்கள் காரணமாக இடம்பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட முடியும் எனக் கூறப்பட்டிருக்கும் நிலையிலேயே, ஐ.சி.சி. இன
தாய்லாந்து மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்ற மகளிருக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் கடைசி லீக் போட்டியில் இலங்கை மகளிர் அணி 10 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றதுடன், அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில நேற்று (24) நடைபெற்ற B குழுவுக்கான கடைசி லீக் போட்டியில் இலங்கை, தாய்லாந்து அணிகள் மோதின. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தாய்லாந்து மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றது.
லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) ஜப்னா கிங்ஸ் மற்றும் கோல் மார்வல்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி தொடர்பில் கூறும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப். The post WATCH – மெண்டிஸ், ரூஷோவின் அதிரடியுடன் சம்பியனாக மகுடம் சூடிய ஜப்னா கிங்ஸ்!| LPL 2024 appeared first on ThePapare. ...
Packed with a ton of feels and based on a true story, this all new production by Stefan Packianathan who features Nipuni Herath sure is one of those must watch short movies / music videos. ‘Rajawe’ also has been on the trend (Spotify) in Chennai. Source
இலங்கை A கிரிக்கெட் அணியானது எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடர் போன்ற இரு தொடர்களில் பாகிஸ்தான் A கிரிக்கெட் அணியுடன் மோதவுள்ளது. அதன்படி நவம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை 2 போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25, 27 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது. எவ்வாறாயினும், குறித்த 2 தொடர்களும் நடைபெறுகின்ற இடம் மற்றும் மைதானங
லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) கண்டி பல்கோன்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது குவாலிபையர் போட்டி தொடர்பில் கூறும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப். The post WATCH – திரில் வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஜப்னா கிங்ஸ் | LPL 2024 appeared first on ThePapare. ...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் கனடாவின் குளோபல் லீக் T20 (GLT20) தொடரில் விளையாட அந்த நாட்டு கிரிக்கெட் சபை ஆட்சேபனையற்ற சான்றிதழ் (NOC) வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளது. >>இன்னிங்ஸ் தோல்வியுடன் டெஸ்ட் தொடரினை இழந்த இலங்கை இளம் கிரிக்கெட் அணி இதன் காரணமாக குளோபல் லீக் T20 தொடரின் புதிய பருவத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட பாகிஸ்தான் வீரர்களான பாபர் அசாம், மொஹமட் ரிஸ்வான் மற்றும் சஹீன் அப்ரிடி ஆகிய வீரர்களுக்கு குறிப்பிட்ட தொடரில் ஆட முடியாத நிலை உருவாகியிருக்கின்றது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ..
சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான டிக்கெட் விலைகள் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த மூன்று போட்டிகளுக்கான டிக்கெட் விலைகள் 500 ரூபா முதல் 10,000 ரூபா வரை விற்பனை செய்யப்படவுள்ளன. தினேஷ் சந்திமாலின் வருகையோடு முக்கிய மாற்றங்களுடன் இலங்கை T20I அணி ரசிகர்கள் டிக்கெட்டுகளை இலங்கை கிரிக்கெட் சபையின் https://mycricket.com.lk/slcb-ticketing-frontend-ticketing-platform-ui/
சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான T20I தொடரிற்கான இலங்கை குழாத்தில் வேகப்பந்துவீச்சாளரான அசித பெர்னாண்டோ உள்வாங்கப்பட்டிருக்கின்றார். இந்திய அணிக்கு எதிரான தொடரிலிருந்து சமீர நீக்கம்! அசித பெர்னாண்டோ இந்திய தொடரிலிருந்து உபாதை காரணமாக நீங்கிய வேகப்பந்துவீச்சாளரான துஷ்மன்த சமீரவின் பிரதியீடாகவே, இலங்கை T20I குழாத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அசித பெர்னாண்டோ அண்மையில் நிறைவடைந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) T20I தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்காக ஆடியிருந்ததோடு, ஜப்னா கிங்ஸ் LPL
இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான நுவான் துஷார இந்திய அணிக்கு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. >>பாகிஸ்தான் செல்லும் இலங்கை A அணி; போட்டி அட்டவணை வெளியானது<< நுவான் துஷார இந்திய அணிக்கு எதிராக இவ்வாரம் ஆரம்பமாகும் T20I போட்டிகளுக்கான இலங்கை குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பயிற்சிகளை மேற்கொண்ட போது விரல் உபாதைக்கு முகம் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் குறிப்பிட்ட விரல் உபாதையின் காரணமாகவே நுவான் துஷார இந்திய அண
சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் T20i நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. மார்பு நோய் (chest infection) தொற்றுக்குள்ளாகிய அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அதன்படி நாளை (27) நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான முதல் T20i போட்டிக்கான தேர்வுக்கு அவர் பரிசீலிக்கப்பட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பினுர பெர்ணா
இந்தியாவின் முன்னணி தொலைபேசி வியாபார நாமங்களில் ஒன்றான லாவா நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது நடைபெறும் போட்டிகளில், இலங்கை அணியின் அனுசரணையாளர்களாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. >>இந்திய கிரிக்கெட் தொடரிலிருந்து விலகும் நுவான் துஷார அந்தவகையில் லாவா நிறுவனம் இலங்கை அணியின் அனுசரணையாளர்களாக மாறியிருக்கும் நிலையில், லாவா நிறுவனத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய ஜேர்சி அறிமுக நிகழ்வு இன்று (26) இடம்பெற்றிருக்கின்றது. குறித்த நிகழ்வில் Unive
விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த 2024ஆம் ஆண்டுக்கான 48ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள கடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது. இம்முறை தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்டின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரருக்கான விருதை சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த 100 மீற்றர் ஓட்ட வீரர் (10.42 செக்.) சமோத் யோதசிங்க தட்டிச் செல்ல, ஆண்டின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீராங்கனைக்கான விருதை மத்திய மாகாணத்தைச் சேர்ந்த 400
லங்கா பிரீமியர் லீக் (LPL T20) 2024ஆம் ஆண்டு தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி கோல் மார்வல்ஸ் அணியினை 9 விக்கெட்டுக்களால் வீழ்த்தியுள்ளது. மேலும் இந்த வெற்றியோடு ஜப்னா கிங்ஸ் LPL T20 தொடரில் நான்காவது முறையாக சம்பியன் பட்டம் வென்று தொடரினை நிறைவு செய்து கொள்கின்றது. >> த்ரில் வெற்றியோடு இறுதிப் போட்டிக்கு தெரிவான ஜப்னா கிங்ஸ் LPL T20 தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச அரங்கில் நடைபெற்றிருந்தது. முன்னதாக போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ...
லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் பிரகாசித்துவரும் முன்னணி வீரர்கள் தொடர்பில் கலந்துரையாடும் எமது இணையத்தள ஊடகவியலாளர்களான ஆறுமுகம் பிரதாப் மற்றும் கஜாணன். The post WATCH – இந்திய அணிக்கு எதிரான தொடரில் சந்திமால், அவிஷ்கவுக்கு வாய்ப்பு! | Sports Field appeared first on ThePapare. ...
இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்கான இலங்கை குழாத்திலிருந்து துஷ்மந்த சமீர நீக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்திருந்த T20I குழாத்தில் துஷ்மந்த சமீர இணைக்கப்பட்டிருந்த போதும், அவருக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக சமீர இந்திய தொடர் முழுவதும் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இலங்கை – இந்திய தொடருக்கான டிக்கெட் விலைகள் அறிவிப்பு துஷ்மந்த சமீர நடைபெற்றுமுடிந்த LPL தொடரின் போது உபாதைக்கு முகங்கொடுத்திருந்ததாகவும், குறித்த உபாதையின் வ