ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் லால்சந்த் ராஜ்புத் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, எதிர்வரும் 3 ஆண்டுகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அவர் பணியாற்றவுள்ளார். இதுவரை காலமும் அந்த அணியின் இடைக்காலப் பயிற்சியாளராக முதஸ்ஸர் நசார் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே தன்னுடைய புதிய நியமனம் தொடர்பில் லால்சந்த் ராஜ்புத் கருத்து தெரிவிக்கையில், ‘ஐக்கிய அரபு இராச்சியம் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சிய
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய அணி 2-1 என தொடரில் முன்னிலைப்பெற்றுள்ளது. >>பயிற்சியின் போது உபாதைக்குள்ளான பங்களாதேஷ் பந்துவீச்சாளர்<< முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 80.5 ஓவர்கள் பந்துவீசியுள்ள ஜஸ்ப்ரிட் பும்ரா, 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேநேரம் தொ
இந்த ஆண்டு நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) ஐந்தாவது அத்தியாயத்தில் காலியினைப் பிரதிநிதித்துவம் செய்யும் அணிக்கு புதிய உரிமையாளர்கள் கிடைத்திருப்பதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. LPL தொடரின் ஐந்தாவது பருவத்திற்கான போட்டிகள் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், LPL தொடரின் முதல் மூன்று அத்தியாயங்களில், காலி அணி கோல் கிளெடியேட்டர்ஸ் என்றும், இறுதியாக கடந்த ஆண்டு நடைபெற்ற நான்காவது அத்தியாயத்தில் கோல் டைட்டன்ஸ் என்றும் விளையாடியிருந்தது.
விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது T20I போட்டியில் ஆப்கானிஸ்தான் 03 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளதோடு இலங்கை சுற்றுப்பயணத்தினையும் ஆறுதல் வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது. எனினும் இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரினை 2-1 எனக் கைப்பற்றிக் கொள்கின்றது. >>ஐசிசி வீரர்கள் தரவரிசையில் பெதும், ஹஸரங்கவுக்கு முன்னேற்றம்! முன்னதாக தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகிய இலங்கை – ஆப்கான் அணிகள் இடையிலான இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் தல
புதிய பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளர்களில் ஒருவராக லேன்ஸ் குளூஸ்னர் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது. ஆப்கான் ஒருநாள் அணியில் இணையும் 3 புதுமுக வீரர்கள் அந்தவகையில் தென்னாபிரிக்காவின் முன்னணி வீரர்களில் ஒருவரான லேன்ஸ் குளூஸ்னர் குஜராத் டைடன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக காணப்படும் ஜஸ்டின் லேங்கருடன் இணைந்து இந்தப் பருவத்தில் பணியாற்றவிருக்கின்றார். அண்மையில் நிறைவுக்கு வந்த SA20 லீக் தொடரில் டேர்பன் சுபர் ஜயன்ட்ஸ்
இலங்கையின் நட்சத்திர பெட்மிண்டன் வீரர்களில் ஒருவரான நிலூக கருணாரத்ன, இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு சர்வதே அரங்கில் வெல்வதற்கான உத்வேகத்தை வழங்கும் நோக்கில் ‘ஒலி நிலூக கருணாரத்ன அறக்கட்டளை’ (OLY Niluka Karunaratne Foundation) என்ற நலன்புரி நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். ஒலிம்பிக் இல்லத்தில் அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்த ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு தகுதி பெறும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோனுக்கு தனது முதல் நிதி உதவியை
இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் வீரர்களுக்கான ‘டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இதன்மூலம் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. எனவே, ஐந்து போட்டிகள் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த பின் எஞ்சியுள்ள நான்கு போட்டிகளையும் வென்று தொடரை 4-1 என்
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது உபாதைக்குள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. T20 தொடருக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) T20 தொடரில் கொமில்லா விக்டோரியன்ஸ் அணிக்காக ஆடி வரும் முஸ்தபிசுர் ரஹ்மான் பயிற்சிகளில் ஈடுபட்ட போது மெதிவ் போர்ட் அடித்த பந்து முஸ்தபிசுர் ரஹ்மானின் தலையில் அடிபட்டதன் காரணமாக உபாதை ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது. அதேநேரம் பந்து தலையில் அடிபட்டதன் பின்னர் முஸ்தபிசு
இலங்கை அணிக்கு எதிரான T20I தொடரிலிருந்து பங்களாதேஷ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் அலிஸ் இஸ்லாம் உபாதை காரணமாக நீக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷில் நடைபெற்று வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியிருந்ததன் காரணமாக அலிஸ் இஸ்லாம் இலங்கை அணிக்கு எதிரான T20I தொடரில் இணைக்கப்பட்டிருந்தார். ஆப்கான் ஒருநாள் அணியில் இணையும் 3 புதுமுக வீரர்கள் இளம் வீரராக 2019ம் ஆண்டு பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் தன்னுடைய முதல் போட்டியில் ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனினும் அதன் பின்னர் அவ
நாடளாவிய ரீதியில் இருந்து பலம் வாய்ந்த 8 விளையாட்டுக் கழகங்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற 2023-24க்கான முதல் தர கழகங்களுக்கு இடையிலான நிப்பொன் பெயின்ட் றக்பி லீக் போட்டியில் நடப்புச் சம்பியன் கண்டி கழகத்தை வீழ்த்தி சி.ஆர். அன்ட் எவ்.சி கழகம் (CR & FC) சம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் 26 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணி றக்பி லீக் சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இறுதியாக அந்த அணி 1998ஆம் ஆண்டு விராஜ் பிரசாந்த தலைமையில் றக்பி லீக் சம்பியனாகியமை ...
ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் பிரான்ஸின் நட்சத்திர கால்பந்து வீரர் போல் போக்பாவுக்கு கால்பந்து விளையாட 4 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் திகதி ஜுவென்டஸ் அணி 3 – 0 என்ற கோல்கள் கணக்கில் சீரி ஏ (Serie A) தொடரின் முதல் போட்டியில் வெற்றியீட்டியது. அந்தப் போட்டிக்கு பிறகு நடத்தப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில், போல் போக்பா உடலில் அதிக டெஸ்டோஸ்டிரோன் இருப்பது கண்டறியப்பட்டது. அந்தப் போட்டியில் அவர் விளையாடவே இல்லை. மாற்று வீரராக வெளியே அமர வைக்கப்பட்டு இருந்தார். ...
சர்வதேச கிரிக்கெட் வாரியம் புதிதாக வெளியிட்டுள்ள ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க 11வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் இரட்டைச்சதம் விளாசிய பெதும் நிஸ்ஸங்க, இரண்டாவது போட்டியில் 118 ஓட்டங்களை விளாசினார். குறித்த இந்த பிரகாசிப்புகளின் அடிப்படையில் 18வது இடத்திலிருந்து 7 இடங்கள் முன்னேறி 11வது இடத்தை பிடித்துள்ளார். மதீஷ பதிரணவின் பந்துவீச்சை புகழும் அஞ்செலோ மெதிவ்ஸ்! பெதும் நிஸ்ஸங்கவை தவி
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் மணிக்கட்டு சுழல்பந்துவீச்சாளரான நூர் அஹ்மட்டிற்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் ILT20 தொடரின் ஒழுக்காற்று குழு 12 மாத தடையினை வழங்கியிருக்கின்றது. >>மதீஷ பதிரணவின் பந்துவீச்சை புகழும் அஞ்செலோ மெதிவ்ஸ்! அந்தவகையில் ILT20 தொடரில் இம்முறை ஷார்ஜா வோரியர்ஸ் அணிக்காக தக்க வைக்கப்பட்டிருந்த 19 வயது நிரம்பிய நூர் அஹ்மட் குறிப்பிட்ட அணியின் வீரர் ஒப்பந்த விதிமுறைகளை மீறி நடந்த குற்றச்சாட்டு ஒன்றின் அடிப்படையிலையே தற்போது தடையினைப் பெற்றிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது. நூர் அஹ
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான T20I தொடரின் இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருப்பதோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் 1-1 என சமநிலைப்படுத்தியிருக்கின்றது. >>The Hundred வீரர்கள் ஏலத்தில் இடம்பிடித்த வியாஸ்காந்த் இன்று (06) பங்களாதேஷின் சில்லேட் நகரில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணியானது முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை அணிக்கு வழங்கியது. அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணியினர் 20 ஓவர்
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி சற்று முன்னர் சட்டோக்ரம் நகரில் ஆரம்பமாகியுள்ளது. >> மார்ஷ் தலைமையில் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் அவுஸ்திரேலிய T20 அணி போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றிருக்கின்றார். இப்போட்டிக்கான இலங்கை குழாம் வேகப்பந்துவீச்சாளரான அசித பெர்னாண்டோவிற்குப் பதிலாக லஹிரு குமாரவிற்கு வாய்ப்பு வழங்கியிருக்கின்றது. இதேவேளை உபாதை காரணமாக பங்களாதே
நாளைய விளையாட்டு நட்சத்திரங்களை உருவாக்குவதில் தன் அயராத அர்ப்பணிப்பை காட்டி வரும் இலங்கையின் முன்னணி இணைய வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, மதிப்புமிக்க இரு கத்தோலிக்க கல்லூரிகளான சென். ஜோசப் கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரிகளுக்கிடையிலான 90வது புனிதர்களின் சமருக்கு இம்முறையும் பிரதான அனுசரணை வழங்குகிறது. அருட்தந்தை மொரிஸ் ஜே. லி கொக் ஞாபகார்த்த கிண்ணத்திற்கான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியானது கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இம்மாதம் 22ம் மற்றும் 23ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. >> இ
2024ஆம் ஆண்டின் பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) T20 தொடர் ஆரம்பமாகும் திகதி குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. ஆறுதல் வெற்றியுடன் இலங்கை தொடரை நிறைவு செய்த ஆப்கான் இந்த ஆண்டு IPL T20 தொடரின் 17ஆவது பருவத்திற்கான போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் தொடர் ஆரம்பமாகும் திகதியாக மார்ச் 22 அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 2024ஆம் ஆண்டுக்கான IPL T20 தொடர் சென்னையில் நடைபெறும் என IPL தொடர் நிர்வாக தலைவர் அருண் சிங் துமால் இந்தியச் செய்திச் சேவையான Cricbuzz இடம் குறிப்பிட்டிருக்கின்றார். இதேவேளை ...
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான T20I கிரிக்கெட் தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளுக்குமான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அதன்படி, தம்புள்ளை மற்றும் கொழும்பில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள டிக்கெட் கரும பீடங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக டிக்கெட் கரும பீடங்களுக்கு ரசிகர்கள் செல்வதை தவிர்க்குமாறு இலங்கை கிரிக்கெட் சபை இன்று (18) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக முன்னாள் பெர்முடா வீரர் டேவிட் ஹேம்ப் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை வீரர் அன்ட்ரூ ஆடம்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு அந்தப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அத்துடன், அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள இலங்கை அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் இருந்து இருவரும் தமது கடமைகளை ஆரம்பிக்க உள்ளனர். பெர்முடா கிரிக்கெட
நியூசிலாந்தின் விக்கெட்காப்பு அதிரடி துடுப்பாட்டவீரரான டெவோன் கொன்வேய் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20I தொடரின் இறுதிப் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சுற்றுத்தொடரின் நடுவில் நாடு திரும்பும் இளம் சுழல்பந்துவீச்சாளர் நியூசிலாந்து சென்றிருக்கும் அவுஸ்திரேலிய அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆடுகின்றது. இந்த நிலையில் தொடரின் இரண்டாவது போட்டியில் விரல் உபாதைக்கு முகம் கொடுத்த டெவோன் கொன்வேய் இதன் காரணமாகவே மூன்றாவது T20 போட்டியில் இருந்து விலகியிருக்கின்றார். அதேநேரம் ட