அதிகாரம் 8 : கொண்டாட்டம் மக்காறியோ செய்யமுடியாததை தான் செய்து முடித்துவிட்டதாக தப்பட்டம் அடித்தான் ஜோசுவா. ஆனால் மக்காறியோ அதை நம்பத் தயாரில்லை. நிஜத்தில் ஒருநாள் காட்டுகின்றேன் எனச் சபதம் போட்டான் ஜோசுவா. ஒருநாள் டியர்பார்க் ஹோட்டலில் இரவைக் கழிப்பதென முடிவு செய்தார்கள் ஜோசுவாவும் புங்கும். இரண்டுபேரும் கார்த்தரிப்பிடத்தில், வேலை ஆரம்பித்து பதினைந்து நிமிடங்களுக்குள் சந்தித்துக் கொள்வதென்று முடிவு செய்திருந்தார்கள். வேலை ஆரம்பிப்பதற்கான மணி ஒலி கேட்டது. சற்று நேரத்தில் காரில் இருந்து இறங்கி சுற்றுமுற்றும்
அதிகாரம் 7 : பின் தொடருதல் தொழிற்சாலை நிர்வாகம், ஒவ்வொரு கிழமையும் வேலை செய்யும் நேரங்களில் இரண்டுமணித்தியாலங்களை சேகரித்து வைத்துக் கொள்வார்கள். இருபது நாட்களுக்கொருதடவை அப்படிச் சேரும் நேரத்தை வேலை செய்பவர்கள் வேண்டும்போது ஒரு லீவு நாளாக எடுத்துக் கொள்ளலாம். இந்த முறைமையை RDO- Roaster Day Off என்று சொல்வார்கள். இந்த RDO வை சாதகமாகப் பாவித்து காதல் சோடிகள் லீவு எடுத்துக் கொள்வார்கள். அன்றைய தினத்தை முழுவதும் கொண்டாடியே தீருவார்கள். அவர்கள் வேறு வேறு குறூப்பில் இருந்துவிட்டால் லீவு எடுப்பதில் ...
கிறிஸ்டி நல்லரெத்தினம் ஆஸ்திரேலியாவை வதிவிடமாய் கொண்ட ஈழத்து எழுத்தாளர் கே. எஸ். சுதாகரின் புதிய படைப்பு "பால்வண்ணம்" சிறுகதைத்தொகுப்பு. 1983ல் இருந்து சிறுகதை, குறுநாவல், ஆய்வுக்கட்டுரை, விமர்சனம் ஆகிய பல பாதைகளில் தடம் பதித்தவரின் மூன்றாவது சிறுகதை தொகுப்பு இது. இலக்கிய சஞ்சிகை, இணையதளம், பத்திரிகை என பல தளங்களில் அயராமல் எழுதிவரும் புலம்பெயர் எழுத்தாளர் கே.எஸ்.சுதாகருக்கு வேறு அறிமுக பாமாலை வேண்டியதில்லை. இச்சிறுகதைத்தொகுதியின் புகுமுகத்தையும் இன்ஜின் அறையையும் பற்றி அனேக நண்பர்கள் பல தளங்களில் ஏற்கனவே ச
அதிகாரம் 6 : புங் ஒரு புதிர் நந்தன் வேலை செய்யும் பகுதிக்கு முதல் பகுதியான BODY SHOP இல் சில தமிழ் இளைஞர்கள் வேலை செய்து வந்தார்கள். இந்த ‘பொடி ஷொப்பில்’ தயாரிக்கப்படும் காரின் முதுகெலும்பான பனல்கள், கதவுகள், உதிரிப்பாகங்கள் போன்ற இரும்பிலான பாகங்கள் வெல்டிங் மூலம் இணைக்கப்படுகின்றன. பின்னர் அந்த உடல்கள் கொன்வேயர் (conveyor) மூலம் PAINT SHOP இற்கு இழுத்து வரப்படுகின்றன.’பெயின்ற் ஷொப்பில்’ வேலை முடித்து நந்தன் வீடு திரும்பும்போது அந்தத் தமிழ் இளைஞர்கள் வெளியிலே இருக்கும் வாங்குகளில் ...
அதிகாரம் 5 : ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை. இப்போது நந்தனும் புங்கும் பெயின்ரின் தரத்தை நிர்ணயிக்கும் குவாலிற்றி கொன்ரோல் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஹெவின் என்னும் ஜெர்மன் நாட்டு மனிதர் குறூப்லீடராக இருந்தார். அறுபது வயதை நெருங்கும் நோமா என்ற நியூசிலாந்துப் பெண்மணியும், நட்டஷா என்ற கிறீக் நாட்டு இளம்பெண்ணும் ரீம்லீடர்களாக இருந்தார்கள். ஒருமுறை வேலை சற்று முன்னதாக எல்லாப்பகுதிகளிலும் முடிவடைந்துவிட்டது. இரவு ஒரு மணி இருக்கும். வேலை செய்யுமிடத்தை துப்பரவு செய்துவிட்டு, ஒவ்வொருவரும் அவரவர் வேலையில்
பால்வண்ணம் - சிறுகதைகள் - கே.எஸ்.சுதாகர் புலம்பெயர்வாழ்வின் துயர்கள், அபத்தங்கள் என்று அலைக்கழியும் வாழ்வில் அசைபோட மிஞ்சி இருபது ஊரின் நினைவுகள் தான். ஏதோவொரு வகையில் ஊர் ஒரு வார்த்தையாக வந்து விழுவதை தவிர்க்க முடிவதில்லை. எத்தனை நெருக்கடி இருந்தாலும் ஊர் பிரியாமல் இருந்திருக்கலாம் என்று சொல்லாத நபர்கள் குறைவுதான். எழுத்தாளர் கே.எஸ்.சுதாகரின் சிறுகதைகள் நிதானமானவை. காதலை கூட இவ்வளவு நிதானமாக கையாண்டா ஒரு தலைமுறையை இப்போது படிக்கும் போது துல்லியமாக புரிந்து கொள்வது கடினமாகத்தான் இருக்கும். அவருடைய எந்தச்சொ
அதிகாரம் 4 : தவறுகள் வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்கின்றன கணவனும் மனைவியும் தங்கள் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யாமல் இருக்கும்போது பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன. குடும்பத்தில் இருவரும் வேலை செய்யும் போது, குடும்பத்தை கொண்டு நடத்துவதில் சிக்கல் ஏற்படுகின்றது, அடுத்தவருடன் தம்மை, தம் பிள்ளைகளை ஒப்பிடுதல் சிக்கலுக்கு ஆரம்பம். மக்காறியோவின் மீதான விசாரணை புஸ்வாணமாகிப் போனது. அவனுக்கு எந்தவிதமான தண்டனையும் கிடைக்கவில்லை. ஆனால் அவன் மீதான ஒரு பதிவு ‘மனிதவள மேலாண்மை’ப் பகுதியில் (Human Resources) இருந்தது. ஆனால் என்ன
அதிகாரம் 3 : போரின் குழந்தை பிறைமருக்கு மாற்றலாகிப் போன முதல்நாள், அவளுடன் வேலை செய்வதற்கு நந்தனுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. மறுநாள் காரின் இரண்டு பக்கங்களிலும் நின்று வேலை செய்தார்கள். அவளின் பெயரைச் சொல்லி அவளை அசத்த வேண்டும் என விரும்பினான் நந்தன். ”உனது பெயர் லோம் தானே?” அவளிடமிருந்து பதில் வரவில்லை. மீண்டும் கேட்டான். “இல்லை!” அவளது முகம் சடுதியாக இருண்டது. ஆனாலும் அவள் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. “அப்ப உனது அப்பாவின் பெயரா அது?” “இல்லை என்னுடைய பெயர் புங். ...
மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் அதிகாரம் 2 : அழகான பெண் வான் மான் நூஜ்ஜின் ஒரு வியட்நாமியன். அவனால் ஆங்கிலம் கதைக்க முடியாதுவிடினும் எப்படியோ சுழியோடி தனது வாழ்க்கையைக் கொண்டு செல்கின்றான். குள்ள உருவம், சப்பை மூக்கு. மொட்டந்தலை. அவனைக் கோபப்படுத்த வேண்டுமாயின், மூக்கை சப்பையாக நசித்துக் காட்டினால் போதும். கோபம் உச்சிக்கு ஏறிவிடும். அப்படிச் செய்துதான் நந்தனும் அவனைக் கோபப்படுத்துவான். நந்தன் இலங்கை நாட்டைச் சேர்ந்தவன். அந்தக் கார்த் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்து நான்கு வருடங்கள் ஆகின்றன. வான் மான் ...
மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் அதிகாரம் 1 : புறப்பாடு மேல் மாடியில் தனது அறைக்குள் நின்றபடி ஜன்னலினூடாக வெளியே பார்வையை ஓடவிட்டாள் அவள். வானம் கருகருவென்று இருட்டி இருந்தது. ’மகளைப் பள்ளியில் இருந்து கூட்டி வரும்போது வானம் இப்படி இருக்கவில்லையே!’ திடீரென்று வானம் கோபம் கொண்டு மழை பொழியத் தொடங்கியது. வெப்பமாக வீசிய காற்று ஒடுங்கிவிட, மின்னல் ஒன்று வரிஞ்சு கட்டி வீட்டின் மேலால் ஓடி ஒளிந்தது. சடசடத்துப் பெய்த மழையினால் புழுதி அடங்க, மண் மணம் மூக்கைத் துளைத்தது. மூக்கை ...
பால் வண்ணம்கவிஞர், எழுத்தாளர், ஓவியர் எஸ்.வைத்தீஸ்வரன் இது ஒரு ஸ்வாரஸ்யமான, வாழ்க்கையின் பல்வேறு மனித அனுபவங்களின் இலக்கியப் பான்மையான சித்தரிப்புகளின் தொகுப்பு. சிறுகதையா... அல்லது சுய அனுபவங்களின் செறிவான நினைவு கூறலா என்கிற குழப்பம் அவ்வப்போது எழுந்தாலும் ஒரு தரமான படைப்பு என்பதில் ஐயமில்லை. சுமார் இருபது வருடங்களுக்கு முன் இலங்கைப் போர் முடிந்து அதன் புகைக்கங்குகள் மெல்ல அணைந்து அடங்கிப் புழுங்கிக் கொண்டிருந்த தருணம் ஏராளமான மக்கள் அவதியும் துக்கமுமாக புலம்பெயர்ந்து கொண்ட வருஷங்களில் இலக்கியம் திசையறிய
அடுத்த வாரம் முதல்....காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுத்த கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு பெற்றது - 2018வெளிநாட்டு வாழ்க்கை விசித்திரமானது. இயந்திரமயமான போக்கில் எதிலும் ஒரு தீவிரம். அடுத்தவரை நேசிக்கவோ, ஏன் குடும்பத்தைக் கவனிக்கவோ முடிவதில்லை. இந்த நாவல் பல்லினக்கலாசார மக்கள் வேலை செய்யும் கார் உற்பத்தித் தொழிற்சாலையொன்றில் நடைபெறுகின்றது. உலக சமுதாய கலாசாரம் எவ்வளவுக்கு உடலின்ப வெறியில் சீரழிகின்றது என்பதைக் கதை சொல்லும் அதே சமயம், தமிழ்ச்சமுதாயம் அந்தச் சாக்கடையில் தவிக்கவில்லை என்பதையு
கே.எஸ். சுதாகரின்'பால்வண்ணம்' சிறுகதைத் தொகுப்பு - ஒரு கண்ணோட்டம் - ரஞ்ஜனி சுப்ரமணியம் – 'நான் எழுதும் கதைகளை உடனே பிரசுரிப்பதில்லை. என்னுடனே இருந்து கொள்ளும் அந்தக் கதைகளை ஒரு சிற்பி செதுக்குவது போல் செதுக்குகிறேன்' என்று எழுத்தாளர் கே.எஸ். சுதாகர் சிறுகதைத் தொகுப்பொன்றில் கூறியிருக்கிறார். கருவொன்றை தாய் சுமந்து குழந்தையாக உருவாவதற்கும், கருவொன்றை கதாசிரியர் சுமந்து கதையாவதற்கும் அதிக வித்தியாசங்கள் இருக்காதென இவ்வசனங்கள் நிரூபிக்கின்றன. படைப்பாளியின் இயல்பான திறன், அழகியல் ரசனை என்பவற்றிற்கு ஏற்ப படைப்ப