மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், பெதும் நிசங்கவின் கன்னி சதம் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல, ஓசத பெர்னாண்டோ ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களின் உதவியுடன் இலங்கை அணி பலம் பெற்றுள்ளது. போட்டியின் நான்காவது நாளான இன்று 255 ஓட்டங்களுடன் களமிறங்கியிருந்த இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 476 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், ஆட்டநேர நிறைவில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 34 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஓசத, திரிமான்னவின் இணைப்பாட்டத்தால் முன்னிலைப்பெற்றுள்ள இலங்கை இலங்கை அணி திமுத் கரு
சொந்த மண்ணில் 10,000 ஓட்டங்களை அதிவேகமாகக் கடந்த முதல் வீரராகவும், இந்தியா சார்பாக அந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரராகவும் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, அந்த அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இந்த நிலையில், புனேயில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரர்களான குருணல் பாண்டியா துடுப்பாட்டத்திலும், பிராசித் கிருஷ்ணா பந்துவீச்சிலும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தியதன் பலனாக இந்தியா 66 ஓட்டங்களால
கவனக்குவிப்பு கட்டாயம் தேவை மனத்தை கவனக்குவிப்பு அடையச் செய்வது கடினம். பலதும் பலவாறு உங்களின் கவனத்தை பெறப் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த ஆதிக்கத்திலிருந்து தப்பித்து, உங்கள் கவனத்தை குவிக்கச் செய்வது சுலபமில்லை. புறக்கணித்தலில் தேர்ச்சி பெறுவதே கவனக்குவிப்பின் ஆதாரம். புறக்கணித்தலா? புறக்கணிப்பு என்பது கூடாத பண்பல்லவா? எதைப் புறக்கணிக்கிறோம் என்பதிலேயே அதன் நன்மை, தீமை பற்றிய விலாசம் கிடைக்கிறது. தேர்ந்து புறக்கணிப்பதில் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டும். உங்கள் நேரத்தை வீணாக்கும் செயல்களைப் புறக்கணி
பூமி, வாழ்க்கை, பூர்வகுடிகள் என அனைத்தையும் கொண்டாடுகிறது எஞ்சாய் எஞ்சாமி! அறிவின் வரிகளில் அடர்த்தியும் ஆழமும் உச்சமாக அமைந்துள்ளது. நாலடிகளில் நாகரிகம், பூமி வரலாறு, விவசாயிகளின் வாழ்வின் துயர் என பலதையும் விபரிக்கும் விதம் – கவிதை. அன்னக்கிளி அன்னக்கிளிஅடி ஆலமரக்கிளை வண்ணக்கிளிநல்லபடி வாழச்சொல்லி இந்தமண்ணைக் கொடுத்தானே பூர்வகுடி!கம்மங்கரை காணியெல்லாம்பாடி திரிஞ்சானே ஆதிக்குடிநாய் நரி பூனைக்கெல்லாம்இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி!நான் அஞ்சு மரம் வளர்த்தேன்அழகான தோட்டம் வெச்சேன்தோட்டம் செழிச்சாலும்என் தொண
நாளையுடன் பெப்ரவரி மாதம் நிறைவடைகிறது. 2021இன் இரண்டு மாதங்கள் நிறைவாகி, 10 மாதங்கள் எஞ்சியிருக்கின்றன. கடந்து முடிகின்ற இரண்டு மாதங்களில் எதையெல்லாம் உருவாக்கியுள்ளீர்கள்? எவற்றையெல்லாம் சாதித்துள்ளீர்கள்? புதிதாகக் எவற்றைப் பற்றியெல்லாம் கற்றுக் கொண்டீர்கள்? இலக்குகள் இருந்தாலும், அந்த இலக்குகளை அடைந்து கொள்வதற்கான பொறிமுறைகளை தயார் செய்தீர்களா? தயார் செய்த பொறிமுறைகளில் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றிய அறிதல் தோன்றியதா? முறைப்பட்டுக் கொண்டிருக்காமல், படைத்தலின் மூலம் பரவசம் அடைந்து கொள்ள
இலங்கையின் மிகவும் பழைமைவாய்ந்த கிரிக்கெட் கழகங்களில் ஒன்றான 1899ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சின்ஹலீஸ் விளையாட்டுக் கழகத்தின் (SSC) பிரதான அனுசரணையாளராக அக்பர் பிரதர்ஸ் நிறுவனம் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இதன்படி, 2021 முதல் 2023 வரையான மூன்று வருடங்களுக்கு SSC கழகத்தின் சகலவிதமான கிரிக்கெட் போட்டிகள் (முதல் தர மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்) மற்றும் அந்தக் கழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் அக்பர் பிரதர்ஸ் நிறுவனம் ஒத்துழைப்பு வழங்க
என்னதான் நடக்கிறது? வீடியோ விளையாட்டுக்களை டீவீடீயாக விற்பனை செய்து வந்த நிறுவனம்தான் GameStop. இணையத்தின் ஆதிக்கம் இருக்கும் இக்காலத்தில் டீவீடீகளை விற்பனை செய்தால் இலாபம் கிடைக்குமா என்ன? பெருந்தொற்றுக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி GameStop மிகப்பெரும் நட்டத்தில் இயங்கியது. ஆனால், இந்த வாரம் இந்த நிறுவனத்தின் பங்குகளின் அதீத விலையுயர்ச்சியால் நியுயோர்க்கின் வோல் ஸ்ட்ரீட் பங்குசந்தை கதிகலங்கியுள்ளது. நட்டத்தில் இயங்கிய இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை அதியுச்சமானது எப்படிச் சாத்தியமாகியது? இந்தச் சம்பவம
நீங்கள் புதிய மொழியொன்றில் பிழையில்லாமல் எழுதுவதற்கு பயிற்சி எடுக்க முடிவுசெய்துள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம். எழுதுவதற்கு ஒரு குறிப்புப் புத்தகம் தேவைப்படுகிறது. புத்தகக் கடைக்கு செல்கிறீர்கள். புது வகையான அழகழகான குறிப்பபுப் புத்தகங்களைக் காண்கிறீர்கள். அவற்றில் சிவப்பு மற்றும் நீலம் ஆகிய நிறக் குறிப்புப் புத்தகங்கள் உங்களைக் கவர்ந்துள்ளன. இதில் எதைத் தெரிவு செய்வது என்று உங்களுக்குள்ளேயே விவாவதம் செய்கிறீர்கள். அப்போது, எதிரே கண்ணுக்கு அழகான பேனாவொன்று தெரிகிறது. இறுதியில் பேனாவை வாங்கிக் கொண்டு வீட்
உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில், உலக சனத்தொகையில், தீவிர வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களின் தொகையின் விகிதம் எந்தளவு மாறியுள்ளது? உங்களுக்கான தெரிவுகள் இவைதாம். மாறவில்லை.அரைவாசியாகக் குறைந்துள்ளதுஇரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இவற்றுள், உங்கள் தெரிவு என்ன? இலகுவானதுதான். இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்பதை தெரிவு செய்திருப்பீர்கள் என நம்புகின்றேன். இந்தக் கேள்வி, உலகின் பல இடங்களிலும் பல்வேறுபட்ட மக்கள் குழுக்களிடமும் கேட்ட போது, இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதையே அவர்களும
என் கருத்துகளோடு எல்லோரும் உடன்படுகிறார்கள். யாரும் என்னோடு விவாதிக்க எண்ணவில்லை. ஏன், என் கருத்துக்களையே ஊடகங்களில் வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. இப்படி யாருக்கும் தோன்றமுடியுமா? முடியும். இன்று இணையத்தில் இணைந்து இருக்கின்ற அனைவரினதும் எண்ணவோட்டமும் இதுதான். இது எப்படிச் சாத்தியமாகிறது? சமூக ஊடகங்களில் நாம் சொல்கின்ற கருத்துகள், போடுகின்ற லைக்குகள், பகிர்கின்ற பதிவுகள் ஆகியன நாம் யார் என்பதை இயந்திரங்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றன. இதனைக் கொண்டு இயந்திரமோ, நீங்கள் யாரென்பதை உணர்ந்து நீங்கள் விரும்
உங்கள் நண்பர்கள் பகிரும் நிழற்படங்கள், செய்திகள், மகிழ்ச்சிகள் என பலதையும் சமூக ஊடகங்களில் நாளாந்தம் காண்கிறீர்கள். அவர்களோடு, உங்களை ஒப்பிடத் தொடங்கும் போது, உங்கள் மகிழ்ச்சியை நீங்களே தொலைக்க தொடங்குகிறீர்கள். நீங்கள் காண்பதெல்லாம், அவர்களின் ஒரு கணத்தின் வெளிப்பாடு மட்டுந்தான். அந்த இடத்தை அவர்கள் அடையச் செய்த விடாமுயற்சி, உழைப்பு என எதுவுமே பார்வைக்கு வராது. உங்களின் ஆரம்பத்தை இன்னொருவரின் நிறைவான சாதனையில் நின்று ஒப்பிடுவது எந்த வகையில் முறையாகும்? அப்படி நீங்கள் ஒப்பிட்டுத்தான் ஆக வேண்டுமென்றால், நேற்
இலக்குகள் என்பவை மாயைகள் என்றே எண்ணுகிறேன். நீங்கள் இலக்கை நோக்கி பயணிக்கின்ற பாதைதான் இலக்குக்கு முகவரி கொடுக்கிறது. இலக்கை அடைந்தேனா, அதை நோக்கி நகர்ந்தேனா, அதை விலக்கி நடந்தேனா என்பதை உங்கள் பயணமே தீர்மானிக்கிறது. ஒவ்வொரு நாளும் இலக்கை நோக்கிச் செய்கின்ற சின்னச் சின்ன செயல்கள், நாளடைவில் பிரமாண்டமாய் உருவாவதே உண்மை. இலக்குகளை நீங்கள் உருவாக்கத் தேவையில்லை. இலக்குகளை அடைந்து கொள்வதற்கான முறைமையே உங்களுக்கு தேவைப்படுகிறது. நீங்கள் ஒவ்வொரு நாளும் செய்பவைதான் உங்களுக்கு முகவரி தருகிறது. செல்வத்தைத் தருகிறது.
(இந்தப் பதிவை வாசிக்க 2 நிமிடங்களும் 43 செக்கன்களும் தேவைப்படும்) 2006 ஆம் ஆண்டு தொடக்கம் நிறம் வலைப்பதிவில் பதிவுகளை எழுதி வருகிறேன். இருந்தாலும், பதிவுகளின் நீளத்தைக் கண்டு நண்பர்கள் வாசிக்காமல் கடந்து செல்கிறார்களோ என்ற கேள்வி எனக்குள் எப்போதும் ஓடிக் கொண்டிருந்தது. வலைப்பதிவுகளில் எழுதப்படும் பதிவுகளை Scroll செய்து பார்த்துவிட்டே பலரும் வாசிக்கவே தொடங்குகின்றனர். பதிவின் நீளம் கொஞ்சம் அதிகமாகத் தோன்றினால், “ஐயகோ, என்னைக் காப்பாற்றுங்கள்” என்றவாறு வலைப்பக்கத்தை விட்டு, வேறு பக்கமாகிச் செல்கின
யாழ் மாவட்ட விளையாட்டுத்துறை அபிவிருத்தி திட்டங்கள் விரைவாகவும் தூர நோக்குடனும் செயற்படுத்தப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்னா ஸ்டலியன்ஸ் மூலம் மாற்றம் பெறவுள்ள வட மாகாண கிரிக்கெட் யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, மீன் பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிராமிய மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணை
நாளும் மதிநுட்பம் மேலோங்க “புதுநுட்பம்” என்கின்ற YouTube Channelஐ 2013இல் தொடங்கியிருந்தேன். புதிய காணொளிகளை தொடர்ச்சியாக வழங்க வேண்மென்ற தேட்டம், ஒரு சில வருடங்களாகத் தொடர்ந்தது. வேறு பல காரியங்கள் எனது கவனத்தை வேண்டி நின்றதால், புதுநுட்பத்தில் புதிய காணொளிகளை தொடர்ச்சியாக உருவாக்கிச் சேர்ப்பதற்கான அவகாசம் எட்டவில்லை. ஆனாலும், நான் ஏற்கனவே உருவாக்கிப் பதிவேற்றிய காணொளிகளை நாளாந்தம் அன்பர்கள் பார்த்து, அதற்கு நன்றி சொல்லி, கருத்துச் சொல்லி அனுப்புகின்ற செய்திகளை வாசிக்கும் போது புளகாங்கிதம் அடைவ
இலங்கை ரக்பி விளையாட்டில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில், ரக்பி சம்மேளனத்தின் புதிய தலைவராக ரிஸ்லி இல்யாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை ரக்பி சம்மேளனத்தின் வருடாந்த பொதுச்சபை கூட்டம் கடந்த சனிக்கிழமை கொழும்பு ரமாடா ஹோட்டலில் இடம்பெற்றது. இலங்கை விளையாட்டில் நாமல் ராஜபக்ஷ எனும் புது அவதாரம் இதில் நாடாளாவிய ரீதியில் இருந்து சுமார் 300 பேரைக் கொண்ட மாவட்ட, மாகாண, முப்படை, பாடசாலை மற்றும் ரக்பி கழகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் இன்னாள், முன்னாள் வீரர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதன்போது ரக்பி சம்மே
சதங்களால் அலங்கரிக்கப்பட்ட மேஜர் லீக் தொடரின் முதலிரண்டு வாரங்கள், இலங்கையின் இளம் வயது விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நாமல் ராஜபக்ஷ, மழையால் கழுவிப் போன இங்கிலாந்து – பாகிஸ்தான் 2ஆவது டெஸ்ட், 15 வருடகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு இன்ஸ்ட்ரகிராமில் விடைகொடுத்த மகேந்தி சிங் டோனி உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன. மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட The post Video – உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய Anjelo & Bhanuka |Sports
வேகப் பந்துவீச்சு என்பது கிரிக்கெட்டில் ஒரு கலையாகும். அது ஒரு சிலருக்கு மட்டுமே உள்ளது. அந்தக் கலையை கற்க மன உறுதி மட்டும் இருந்தால் போதாது. உடல் வாகு, தேவையான அர்ப்பணிப்பு என பல நுணுக்கங்கள் தேவைப்படும். இந்தக் கலையில் தேர்ச்சி பெற பந்துவீச்சாளர்கள் முயற்சி செய்ய வேண்டும். மேலும், வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படும். வேகம் ஒப்பீட்டளவில் குறைந்தாலும், பந்துவீச்சாளர்கள் நிலையான அடிப்படையில் 150 கிலோ மீற்றர் வேகத்தைப் பேணுவதற்கு முயற்சிக்க வேண்டும். உலகின் உயரமான கிரிக்கெட் வீரர்கள் இவை அன
“உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் மீண்டும் அமரமுடியாத சிம்மாசனம், தாயின் கருவறை” பத்து மாதங்கள் சுமந்து, உயிர்பிரியும் வேதனையை அனுபவித்தும், தன் சிசுவின் அழுகையை கேட்டு புன்னகைக்கும் ஒரே ஜீவன், தாய். பிறந்ததுடன் நிறுத்திவிடாமல் வாழ் நாள் முழுவதும் தன் குழந்தைக்காக வாழும் வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்து விடுகிறாள். அதன் முதற்கட்டமே தாய்ப்பாலூட்டல். தன் குருதியை பாலாக்கி அதனை தன் தேகத்தில் இருந்து இன்னோர் தேகத்திற்கு அனுப்பி, அக்குழந்தையின் உடல், உள வளர்ச்சியை மிகைப்படுத்துகிறாள். தாய்ப்பாலூட்டல்
இந்த வருடத்தின் ஆரம்பம் தனித்துவமான ஆரம்பமாக அமைந்தது. தனித்துவமான, புதிய திட்டமொன்றின் பயணமும் இந்த புதிய வருடத்துடன் ஆரம்பமானது. CodeGen Internationalஇன் நிறைவேற்று அதிகாரி, டாக்டர். ஹர்ஷா சுபசிங்க துணை அமைச்சர் ஹர்ஷா டி சில்வா உடன் இணைந்து ஸ்ரீ ஜெயவர்த்தனபுற மஹா வித்யாலயத்தில் XOLO எனும் புதிய திட்டமொன்றை கொண்டுவந்தனர். இது இலங்கையின் கல்வியமைச்சால் ஆதரிக்கப்பட்டு வரும் புதிய ஸ்மார்ட் வகுப்பறையாகும். XOLO Cloud Smart ClassroomImage Credits: Daily FT. XOLO Cloud Smart Classroomஇன் பயணம். கடந்த வாரம் கல்