கொண்டாடவா புது வருடம்? (புதுவருட சிந்தனை )
கனவுகளின் உலகம்ஏன் புது வருஷம்? எல்லாமே புதுசா மாறுமா அப்பா? இல்லடா கண்ணா... வருஷம் மட்டும் தான் மாறும். காலைல கடைக்கு சாப்பிட போன எனக்கு, காதில் விழுந்த மகன் அப்பா சம்பாஷனை. பையன் படு உசார் போல.. இப்பவே இப்படி யோசிக்கிறான் எண்டு நினச்சிட்டு வந்து, இத வச்சே நம்ம ஒரு மெசேஜ் சொன்ன என்ன எண்டு யோசிச்சன். விடுங்க பாஸ் நம்ம சுட்டது பையனுக்கு தெரியவா போகுது. நானும் மாறப் போறது இல்ல, நீங்களும் மாறப் போறது இல்ல, வருஷம் மட்டும் மாறிக்கிட்டே ...
மரணித்து விட்டது மனிதம்
கனவுகளின் உலகம்காலத்தின் கட்டளைக்குள் கட்டுண்டு போன நாம், அக் காலத்தை விட வேகமாய் ஓடுகின்றோம். எதற்காய் ஓடுகின்றோம்? எதுவுமே நிலையில்லா இவ்வுலகில்எதை நிலையாக ஓடுகின்றோம்?நான்?நீங்கள்?நம் குடும்பம்?மனித உயிர்?பணம்?பாசம்?ஆசை?காதல்?இதில் எது நிலையானது?வானம்?அதில் தோன்றும் நிலவு?கடலை பிழக்கும் சூரியன்?ஓயாமல் அடிக்கும் அலை?அந்த அலை தந்த நுரை?இதில் எதை சொல்ல முடியும்நிலையானது என்று?பணத்தை நோக்கி ஒரு கூட்டம், பாசத்தை நோக்கி ஒரு கூட்டம், அறிவை தேடி ஒரு கூட்டம், ஆகாரத்தை தேடி ஒரு கூட்டம்.. இப்படி ஓடிக்கொண்டே இருக்கிறதுநம் வாழ்வும்
நான் கவிஞனாய்..
கனவுகளின் உலகம்நான் கவிஞனாய்..நிஜங்களை சொல்லி விட ஆசைதான் நிதர்சனம் தொகுத்துவிட ஆசைதான் மனிதனை நேசிக்க ஆசைதான் - அவன் மனங்களை வாசிக்க ஆசைதான்.நான் கவிஞனாய்..கல்லறைக்குள் வாழ்ந்திட ஆசைதான் கனாவினுள் கண்மூடிட ஆசைதான்மௌனத்தின் மொழி எழுத ஆசைதான்- முதல் மோகத்தில் ஊமையாக ஆசைதான்.நான் கவிஞனாய்..ஊனங்களை உசுப்பிவிட ஆசைதான் ஊழல்களை ஒழித்துவிட ஆசைதான் காதலுக்கு கண் செதுக்க ஆசைதான் - இந்த காலத்துக்கும் கற்றுக் கொடுக்க ஆசைதான்.நான் கவிஞனாய்..எண்ணங்களை எடுத்தியம்ப ஆசைதான் எளிமையில் ஏழை போல் என் கவியிருக்க ஆசைதான் குழந்தைக் கோபம் கொள்ள
புரண்டு போன பூமி.
கனவுகளின் உலகம்அன்று, உழைப்பவனின் உழைப்பை மதிப்பிடத்தான் பணம். இன்று, உறவுகளின் பாச அளவீட்டுக் கருவியை மாறிப் போனது இந்தப் பிணம்.முயற்சிக்கு முன்னுரிமை இருந்தது அன்று.அதிஷ்டத்துக்குள் பூமிமூழ்கிப்போனதால்,முயற்சிப்பவன் எல்லாம் மூச்சடைகிறான் இன்று.உறவுகளுக்கும், உயிரோட்டமில்லை.முயற்சிக்கும்,முன்னுரிமையில்லை.உறவுகளில்உயிரோட்டம் இருந்தால், (இன்று)தாயை தள்ளிவைக்கமாட்டான் பிள்ளை. முயற்சியே முதல் என்றால், என்றோ முன்னேரியிருப்பான். மீனவனுடன் விவசாயி??அசாத்தியத்தை சாத்தியமாக்கி விட்ட உலகம், சாத்தியத்தை இன்று அசாத்தியம் என்கிறது. த
கருவி ஒன்றை கண்டுபிடி!
கனவுகளின் உலகம்(சூரியன் fm இன் ரீங்காரம் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட தலைப்புக்கு எழுதப்பட்டு 23 /11 /2011 அன்று வாசிக்கப்பட்ட கவிதை) கரைந்து விட்டது நேற்றைய பொழுதுகள்.கருகிக்கொண்டிருக்கிறது இன்றைய நிஜங்கள்.முன்நோக்கி நகர்கிறது நாளைய நிகழ்வுகள். உலகம் இயங்கும் வேகத்திற்கு, ராகட் கூட இரண்டாம் பட்சம்தான். உலகின் சுழலுக்கு ஈடுகொடுத்து, பசுமை நினைவுகளை எனக்குப் படம் போட்டுக் காட்ட, கண்டுபிடி ஒரு கருவி. இழந்தது எனக்கு வேண்டும், மீண்டும்...என் காதோரம் கதை சொல்லும் பாட்டி, நான் தூங்கிய தாய்மடி,பசுமையான பாடசாலை நாட்கள், பழகிப் பிர
சரியாகச் செல்கிறாளா இன்றய பெண்? IV
கனவுகளின் உலகம்(இதன் முதற் பகுதியை வாசிக்காத வாசகர்கள் இங்கு கிளிக் செய்யவும்)பகுதி-Iபகுதி-IIபகுதி-IIIபெண்களைப் பற்றி பேச ஆரம்பித்தாலே முடியாது என்பது சரியாகத்தான் இருக்கிறது. இத் தொடரை இதனுடன் முடிக்க வேண்டிய கட்டாயமும் எனக்கிருக்கிறது. அதை கவனத்தில் கொண்டு இந்த பகுதியை எழுதுகின்றேன். பெண்கள் பற்றிய நிறைய விடயங்களை எமது முதல் பதிவுகளில் அலசிவிட்டடதால் நேரடியாக விடயத்துக்கு வருவோம்.பெண்கள் விடும் தவறுகள் எவ்வாறு அந்த சமூகத்தை பாதிக்கிறது?முதலில் பெண்களும், ஆண்களும் புரிந்து கொள்ள வேண்டிய விடயம், பெண்களுக்கு இருக்கும் தாய்
நான் ஒரு உரிமைப் போராளி.
கனவுகளின் உலகம்இருளின் ஒளிக்குள் இரவின் உயிருக்குள் ஒரு உரிமைக் குரலின் ஒலிப் பிரளயம் வாழ்வின் வலிக்குல் அடக்கு முறைக்குள் இந்த கவிதைப் பிரியனின் கவி முழக்கம் உவமைகள் துறந்து,உரிமைகள் இழந்து ஓரமாய் ஒடுங்கி ஒலிக்கிறது என் கானம்..தன்னை தொலைத்து தன்மானம் களைந்து தரம் கேட்டுக் கிடக்கிறது இப் பூகோளம்..என் வாழ்கைச் சுவர்களை வலிக் கற்கள் கொண்டு வடிமைத்திருக்கிறது காலம்..மூச்சு முட்டும் இருளிலும் அதை விட மிஞ்சியதாய் பிழிந்தெடுக்கிறது ஒரு சோகம்..நம்பிக்கை இறுக்கிப் பிடித்து முயற்சியை மூச்சாக்கி ஓராயிரம் சுவரையும் தகர்த்து விடுவேன்
விதியை வெல்ல எந்த கொம்பனாலும் முடியாது. (என் டயரி)
கனவுகளின் உலகம்இது ஒரு புதிய பகுதி. சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை கமெண்ட் பெட்டியில் பதிவு செய்யவும். நீங்க யோசிக்கிற மாதிரி பெரிய ஒரு விடயமும் நான் சொல்ல போறதில்லைங்க. அப்புறம் எதுக்கு அவ்வளவு பெரிய பில்ட்அப்? என்று யோசிக்கிறது தெரியுது கய்ஸ். நேத்து பேஞ்ச மழைல முளைச்ச காளான்கள் எல்லாம்( ஐயோ உங்கள சொல்லலபா ) பெரிசு பெரிசா பில்ட்அப் கொடுக்கும் போது நானும் கொஞ்சம் ட்ரை பண்ணிட்டு போறேன், மன்னிச்சு விட்டுடுங்கப்பா. ஓ! நான் இன்னும் என்ன விஷயம் எண்டு ...
உன்னைக் காதலிப்பதால்....
கனவுகளின் உலகம்அருக்கப்பட்ட தொப்புள் கொடிக்குள்ளயேஅடங்கிவிடுகிறதா தாயின் பாசம்?மறக்கப்பட்ட உன் நினைவுக்குள்மங்கிவிடுமா என் காதல்??உருகி உருகி மெழுகாவேன்,அதிலும் உனக்கே உயிராவேன்.உனக்காய் நானும் இருளாவேன்,அதல் நீ காணும் கனவும் நானாவேன்.இன்று என் நினைவில்....நீ சிரித்துச் செல்லும் நொடிகளில்என்னை சீரழித்துச் செல்கிறாய்.நீ உதிர்த்துச் செல்லும் மௌனங்களில்ஆயிரம் கவி சொல்லிச் செல்கிறாய்.நீ பிரிந்த நிமிடம் எனக்கு சுடவில்லை.காரணம் நீ வாழ்ந்த நிமிடம் எனக்குள் குளிர்வதால்...உன் நினைவுகள் இன்று எனக்கு கசப்பாயில்லை.காரணம் இன்றும் அது
அவன் இல்லையென்றால்
கனவுகளின் உலகம்தரணியில் வீடுகள் எங்குமேயில்லைவானமே கூரை, பூமியே வாசல்ஏனெனில் அவனில்லை.உடலை மறைக்க உடையில்லைநிர்வாணமே நிதர்சனம்ஏனெனில் அவனில்லை.நடையைத் தவிர வேறு வழியில்லைபயணம் பல மைல் தொலைவானாலும்ஏனெனில் அவனில்லை.புழுதி படிந்த மரங்கள்,இலை மேல் அமரும் உணவுகள்,காய்ந்து, நனைந்து கிடக்கும் கழிவுகள்,ஏட்டுச் சுரக்காய் போன்ற பூமி,ஏனெனில் அவனில்லை.வாங்குபவன் இல்லை,விற்பவன் இல்லை,முதலாளிகள் யாருமில்லை,காரணம் தொழிளாலியவனில்லை.முயற்சிக்கே முகவரி கொடுத்தவன்'அவன் இல்லையென்றால்'என்ற என் கற்பனையின் கிருக்கலே அவை.அசரவைக்கும் கடல் கூடஓயாம
அனுபவமே வாழ்கையா?
கனவுகளின் உலகம்வாழ்கை விசித்திரமான ஒன்றுதான். யாராலும் அவ்வளவு சீக்கிரமாக இதை புரிந்து கொள்ள முடியாது. இதுவரைக்கும் எனக்கும் புரியவில்லை, ஆனால் புரிந்து கொள்ள முயற்சிகள் மட்டும் நடந்து கொண்டிருக்கின்றன. அப்படி நான் செய்த முயற்சியின் பலனாக ஒரு விடயத்தை நான் புரிந்து கொண்டேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதுதான் எனது இக் கட்டுரையின் நோக்கம்.பெரியவர்கள் சில நேரம் பேசிக் கேட்டிருப்பீர்கள்... அதாவது 'அவனுக்கு அனுபவம் போதாது, அதனால் அவன் செய்தால் சரியாக வராது' என்றெல்லாம் பேசுவார்கள். அப்பொழுது நாம் அதை பெரிதாக அலட்டிக் கொள்வதி
'இல்லாமல் நீ'
கனவுகளின் உலகம்சுகங்கள் தொலைந்த நிமிடங்களைசுகமாய் சுவாசிக்கிறேன்.இரவுகளில் கசியும் கண்ணீரில்என் இதயம் வாசிக்கிறேன்.கவலையற்ற நிமிடங்கள் கடந்துவிட்டன,சுவாசமும் தீயாய் எரிகின்றன,விழிகளில் அருவிகள் வழிகின்றன,என் இரவுகள் தனிமையில் விடிகின்றன.உன் நினைவுகள் என்னை துளைக்கின்றன,விழும் குருதியும் உன் பெயர் உரைகின்றன.கனவுகள் கனவாகவே கலைகின்றன,காலமும் வேகமாய் நகர்கின்றன.உணரவில்லை என் காதலை நீ...இனி உயிருமில்லை,எனக்கு இல்லாமல் நீ.இஷ்டம் போல் உன் சிறகை விரித்திடு பறவையேநாம் பறக்க நீல வானம் இருக்குது பறவையே...ஒழிக்காமல் உன் மழையை பொழிந்
உணரவில்லை உன் காதலை...
கனவுகளின் உலகம்கல்லரைக்குள் நான் இருந்து,என் காதலியின் கரம் பிடித்த,கணவனுக்காய் நான் எழுதும்,காலம் கடந்த கடைசி மடல் இது.என் உணர்வுகளை கவியாக்கி,வரைகிறேன் ஒரு வாழ்த்து மடல்,உங்கள் வாழ்கை மலர வாழ்த்துச் சொல்லி.உணரவில்லை உன் காதலைஎன்று சொன்னவளே!!!!!நலமா நீ???நான் நலம் இக் கல்லரைக்குள்இன்றும் உன் அழகிய நினைவுகளுடன்....என்னவளின் கரம் தொட்டவனேஎன்ன தவம் செய்தாய் நீ???எதற்காக உனக்கிந்த வரம்???அழகுக்கே சவால் விடும் அழகியைமணக்கும் பாக்கியம்!!!60 மாதமாய் என்னால் முடியாத ஒன்றுஉன்னால் எப்படி???வியக்கிறேன் சில விநாடிகள்....உன்னவள் பற்ற
விடையை தேடுங்கள் உறவுகளே!
கனவுகளின் உலகம்சோகமாய் சொல்லிச் செல்லும் கவிகளில் கூட, சில சுவாரஸ்யம் இருக்கும். ஏழை என்று பிறந்தவன்,வாழ்வு பற்றி சொல்லும் போதுஎன்னதான் இருக்கும்?வறுமையின் வலைக்குள் வசப்பட்டவர்கள்தான், வாழ்கையில் நிர்பந்திக்கப்பட்டவர்கள். ஆற்றுக்குள் எறியப்பட்ட கற்கள் போல், மூச்சுத்திணறி மூழ்கிப் போனார்கள், காலத்தின் கல்லறைக்குள்.நெருப்போடு விளையாடும் கைக்குழந்தை போல், நிஜத்தோடு போராடும் அவர்கள், என்றும் காயப்பட்டவர்களே!. அரசியல் மேடையில் தீனியாய் மாற்றப்பட்டுவிட்டது, இந்த ஏழையின் வறுமை வாழ்க்கை. அவை கேட்டு கைகொட்டிச் சிரித்தே, பழகி விட்
இது ஒரு போதைதான்.....!!!
கனவுகளின் உலகம்அற்புத நீரோட்டம்,மாலையின் மங்காத மஞ்சல்,மங்கயே மயங்கும் அழகின் தோற்றம்,மயங்கிய என் இரு விழிகள்.இயற்கையின் வனப்புக்குள் நான்,அவ்விடத்தை விட்டு அகலவே முடியவில்லை.மாலைத் தென்றல் அள்ளி சொறிந்தது;அந்த அற்றின் அமுத நீரை.ஒரு கனம் கண் மூடி மறுகனம் திறக்க,ஆற்றில் இருந்த நானோ!!!!அபூதாபியில் என் அறையில்????புரிந்து கொண்டேன்!!!என் கண்கள் கட்டுண்டு கிடந்தது,கனவுக்குள் என்று.ஆம் என் கிராமத்தின்மாலைக் காட்சிகள் அவை.என் விடியலின் காலைக் காட்சிகளாய்,தினமும் என் கனவுக்குள்.விழிக்கவே பிடிக்கவில்லை,தொடர்ந்து உறங்கவும் தெரியவில
இணைந்த இமயங்கள்!
கனவுகளின் உலகம்நன்றி:தமிழ் சீ.என்.என்மொபைல் போன் தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் இயங்கும் நோக்கியா நிறுவனமும், கம்ப்யூட்டர் உலகில் தனக்கிணை தானே என வலம் வரும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் அண்மையில் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன. இதன்படி நோக்கியாவின் ஸ்மார்ட் போன்களில் விண்டோஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படும். இதன் பிங் சர்ச் இஞ்சின் நோக்கியாவின் மொபைல் தேடுதளமாக இயங்கும். அதே போல நோக்கியா மேப்ஸ் சேவையை மைக்ரோசாப்ட் பயன்படுத்தும். 20 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் நோக்கியா ஸ்மார்ட் போன்கள் உலகில் பயன்ப
சரியாகச் செல்கிறாளா இன்றய பெண்?- III
கனவுகளின் உலகம்(இதன் முதற் பகுதியை வாசிக்காத வாசகர்கள் இங்கு கிளிக் செய்யவும்)பகுதி-Iபகுதி-IIஅதாவது பெண்களுக்கு இச் சமூகம் அன்று பெற்றுக்கொடுத்த சுதந்திரம் இன்று அவர்களால் தவறான முறையில் பாவிக்கப்படுகிறதா?இது பற்றி நான் சிறிய ஒரு ஆய்வு ஒன்றை செய்திருந்தேன். அதன் விளைவுகள் பற்றி இன்றைய பகிர்வு சுமந்து வருகிறது . அதாவது பெண்களிடம் இது பற்றி கேட்டதற்கு அவர்களில் 62%மானவர்கள் ஆம் என்ற பதிலையும், 24%மானவர்கள் இல்லை என்ற பதிலையும், குறிப்பிட்ட வேலை மிகுதி 14%மானவர்கள் பதில் கூறவில்லை. ஆண்களிடம் கேட்டதர்கினங்க 93%மானவர்கள் ஆம் எ
"படிப்பினை கொண்டு....."
கனவுகளின் உலகம்மனித மாமிசங்கள் விலையாய்க் கொடுத்து,பதவி வாங்கும் காலம் இது!இருளுக்குள் இருக்கும் உலகின்,இறுதி நேரம் இது!அடக்குமுறை, ஜனநாயகம் அனைத்திலும்நீதி பறிபோன காலம் இது.நீதி கேட்பவருக்கெல்லாம், நிதி பதில் சொல்லும் நேரம் இது.வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன,வான் பொழியும் அடை மழை போன்று...நல்ல மாற்றங்கள் நடக்கின்றன,பாலைவன நிழல் மரம் போன்று....ஏமாற்றியே பலகி விட்டான் பதவி உள்ளவன்.ஏமாந்தே நொந்து போனான் அதைக் கொடுத்தவன்.உண்மையைச் சொல்ல எவருமில்லை.சொன்னவன் இன்று உயிரோடும் இல்லை.காகிதத்தில் கவி எழுதி பலனுமில்லை.அதை வாசிப்
காதலியுங்கள்......
கனவுகளின் உலகம்வர்ணங்களின் வடிவால் ஈரக்கப்படும்கைக்குழந்தைப் போல, வாழ்வின் வண்ணங்களில் ஒன்றான காதலால் கவரப்பட்ட இளம் குழந்தைகள் ஆயிரம்.வெற்றி,தோல்வி இரண்டிலும் தான் உலகமே.காதல் மட்டும் என்ன விதி விலக்கா?எத்தனை தடை இந்தக் காதலில்?எத்தனை நிலை இந்தக் காதலில்?கடந்த நாட்களின் நினைவுகள்,வரும் காலத்தின் கனவுகள்,இவை உருவாக்கப் போகும் விளைவுகள்,இது தான் காதலர் தினம்.கண்களால் மட்டும் ஜாடைக் கவிபாடியவர்கள் எல்லாம்,தமக்குத் தாமே இட்டிருந்த தயக்கச் சிறையை தகர்க்க, காலம் இயற்றிய ஒரு கருணைத் தினம்.ஓராண்டை ஒரு தலைக் காதலுடன்நடமாடிய ஒரு க
நீண்டதொரு பயணம்.
கனவுகளின் உலகம்பனி விழும் இரவு,மேகமெனும் ஆடை உடுத்திருந்தால் நிலவு,நீண்டதொரு பயணம்.மனதில் அவள் நினைவுகளுடன்.... பேரூந்தின் ஜன்னல் திறந்தேன்.முகத்தை வருடியது சில்லென்ற பனிக் காற்று.கண்களை மூடிக் கொண்டேன்,கனவில் அவளோடு கைகோர்த்தவனாக.... பேரூந்து முன்நோக்கி நகர,கனவோடு நிஜம் சற்றுக் கலக்க,நகர்ந்தது என் நினைவுகள்,வாழ்வின் மூன்றாண்டு பின்நோக்கி. ஒரு இதமான மாலை நேரம்,சூரியன் மறைந்து விட்ட சோகத்தில் அழத் தொடங்கியிருந்தது வானம்,கடைத்தெருவில் ஒதுங்கிய கூட்டத்தோடு... நானும் இணைந்தேன். "கொஞ்சம் வழிவிடுங்க" என்றதுஒரு கெஞ்சும் இசைக