அடுத்த மாதம் ஆரம்பமாகவிருக்கும் T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கவிருக்ககும் ஐக்கிய அமெரிக்க (USA) அணி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. >>T20 உலகக்கிண்ணத்துக்கான மேற்கிந்திய தீவுகள் குழாம் அறிவிப்பு<< T20 உலகக் கிண்ணத் தொடர் இந்த ஆண்டு ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளில் நடைபெறுகின்றது. இந்த உலகக் கிண்ணத் தொடருக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் அடங்கிய ஐக்கிய அமெரிக்க குழாத்தில் நியூசிலாந்தின் முன்னாள் அதிரடி சகலதுறைவீரரான கோரி அன்டர்சன் இடம்பெற்றுள்ளார். கோரி அன்டர்சன
ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட மேற்கிந்திய தீவுகள் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் T20 உலகக்கிண்ண குழாத்தில் ஷெமார் ஜோசப் இணைக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடி வருவதுடன், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தார். எனினும் முதன்முறையாக மேற்கிந்திய தீவுகள் T20I அணியில் இடம்பிடித்துள்ளார். >>சிராஸ், சூரியபண்டார அதிரடியில் ஒருநாள் தொடரை வென்ற இலங்கை A அணி<< மேற்கிந்திய தீவுகள் அணியின
ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள நடுவர்கள் குழாத்தில் இலங்கையின் குமார் தர்மசேன கள நடுவராகவும், மற்றுமொரு இலங்கையரான ரஞ்சன் மடுகல்ல போட்டி மத்தியஸ்தராகவும் இடம்பெற்றுள்ளனர். அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத்துக்கான முதல் சுற்றுக்கான போட்டி நடுவர்களை ஐசிசி நேற்று (03) உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐசிசி பெயரிட்டுள்ள 20 பேர் கொண்ட அதிகாரிகளின் பட்டியலில், 20 கள நடுவர்கள் மற்றும் 6 போட்டி மத்த
2024ஆம் ஆண்டு மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரின் எஞ்சிய அணிகளை தெரிவு செய்ய நடைபெற்று வரும் தகுதிகாண் சுற்றுப் போட்டியில் நேற்று (03) ஐக்கிய அமெரிக்காவை எதிர்கொண்ட இலங்கை மகளிர் வீராங்கனைகள் 18 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வெற்றியுடன் மகளிர் T20 உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் குழு A இல் உள்ள இலங்கை அணியானது தமது குழுநிலைப் போட்டிகள் அனைத்தினையும் வெற்றியுடன் நிறைவு செய்து கொள்கின்றது. >>சிராஸ், சூரியபண்டார அதிரடியில் ஒருநாள் தொடரை வென்ற இலங்கை A ...
2024ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் வீரர்கள் ஏலம் நடைபெறும் திகதி குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. >>டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பெற்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி லங்கா பிரீமியர் லீக் தொடரானது இந்த ஆண்டு ஐந்தாவது முறையாக நடைபெறுகின்றது. அந்தவகையில் இந்த தொடரின் வீரர்கள் ஏலம் இம்மாதம் 21ஆம் திகதி கொழும்பு ஷங்ரீலா ஹோட்டலில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது. லங்கா பிரீமியர் லீக் தொடரில் வீரர்கள் ஏலம் நடைபெறுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் தொடருக்கான வீர
ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் நடப்புச் சம்பியனாக காணப்படும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசையில் மீண்டும் முதல் இடத்தினைப் பெற்றிருக்கின்றது. >>தேசிய சுபர் லீக்கின் சம்பியனாக மகுடம் சூடிய காலி அணி<< கடந்த ஆண்டு நடைபெற்றிருந்த ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி முதல் தடவையாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டத்தினை வென்றிருந்த பேட் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது 124 புள்ளிகளுடன் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிச
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவந்த தேசிய சுபர் லீக் நான்கு நாள் போட்டித்தொடரின் சம்பியனாக காலி அணி முடிசூடியுள்ளது. பல்லேகலையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கண்டி அணியை எதிர்த்தாடிய காலி அணி 7 விக்கடெ்டுகள் வித்தியாசத்தில் வெற்றியினை பதிவுசெய்திருந்தது. >>குசல் மெண்டிஸின் T20 சதத்துடன் SLC யெல்லோவ் அணிக்கு வெற்றி<< போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி முதல் இன்னிங்ஸில் 316 ஓட்டங்களை குவித்தது. கண்டி அணி சார்பாக சித்தார கிம்ஹான 90 ஓட்டங்களையும், சஹான் கோஷல 84 ஓட்டங்களையு
ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்கான தயார்படுத்தலுக்காக நடைபெற்று வரும் மூன்று அணிகளுக்கு இடையிலான பயிற்சிப் போட்டித் தொடரில் SLC டீம் யெல்லோவ் அணி 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவுசெய்தது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற SLC டீம் ப்ளூ அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட யெல்லோவ் அணி 225 ஓட்டங்களை குவித்தது. >>மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரருக்கு 5 ஆண்டுகள் தடை<< ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் அற்புதமாக துடுப்பெ
மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான டெவோன் தோமஸிற்கு கிரிக்கெட் சார்ந்த (All Cricket) அனைத்து வகை விடயங்களிலும் ஈடுபட ஐந்து ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) தடை வழங்கியுள்ளது. >>பாகிஸ்தான் T20I குழாத்தில் இடம்பிடித்த ஹஸன் அலி! 34 வயது நிரம்பிய டெவோன் தோமஸ் இலங்கை கிரிக்கெட் சபை (SLC), மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் கரீபியன் பிரீமியர் லீக் (CPL) மற்றும் அமீரக கிரிக்கெட் சபை (ECB) ஆகியவற்றின் ஒழுங்கு விதிமுறைகளை 7 பிரிவுகளில் மீறியதன் அடிப்படையில் குற்றவாளியாக
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள 7 T20I போட்டிகளுக்கான 18 பேர்கொண்ட பாகிஸ்தான் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் குழாத்தில் வேகப்பந்துவீச்சாளர் ஹஸன் அலி மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதுடன், சுழல் பந்துவீச்சு சகலதுறை சல்மான் அலி ஆகா முதன்முறையாக T20I குழாத்துக்குள் வரவழைக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட்டுடன் இணைந்து பணியாற்றவுள்ள வசீம் அக்ரம்! அதேநேரம் உபாதை காரணமாக நியூசிலாந்து தொடரை தவறவிட்ட ஹரிஸ் ரவூப் மற்றும் அஷாம் கான் ஆகியோர் மீண்டும் அ
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வசீம் அக்ரம் இலங்கை தேசிய அணியின் வீரர்கள், உயர் செயற்திறன் மைய பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் மேஜர் கழக பயிற்றுவிப்பாளர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் ஒன்றை வழங்கவுள்ளார். நேற்று (01) காலை இலங்கை வந்துள்ள இவர் இலங்கை தேசிய அணியின் வீரர்கள், உயர் செயற்திறன் மைய பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் மேஜர் கழக பயிற்றுவிப்பாளர்களுக்க ஐந்து கட்டமாக பயிற்சிகளை வழங்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிகளுடன் T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் இலங்கை மகளிர் அதேநேரம் T20 உலகக்கிண்ணத்துக
2024ஆம் ஆண்டுக்கான மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரின் எஞ்சிய அணிகளை தெரிவு செய்ய நடைபெற்று வரும் தகுதிகாண் தொடரில் உகண்டாவை எதிர்கொண்ட இலங்கை மகளிர் வீராங்கனைகள் 67 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளனர். >> T20 உலகக் கிண்ண அணியை அறிவித்த அவுஸ்திரேலியா மேலும் இந்த வெற்றியுடன் மகளிர் T20 உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் மூன்றாவது தொடர் வெற்றியை இலங்கை பதிவு செய்துள்ளது. உகண்டா – இலங்கை மகளிர் அணிகள் மோதிய போட்டி நேற்று (03) அபுதாபியில் நடைபெற்றது. போட்டியின் நாணய ...
மிச்சல் மார்ஷ் தலைமையில் T20 உலகக் கிண்ணத்திற்கான 15 பேர் அடங்கிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. T20 உலகக்கிண்ணத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாம் அறிவிப்பு ஜூன் மாதம் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடருக்கான வீரர்களை தெரிவு செய்ய இறுதி தினமாக மே 02ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொடரில் பங்கெடுக்கும் ஒவ்வொரு அணிகளும் தமது வீரர் குழாம்களை வெளியிட்டு வருகின்றன. அதன் அடிப்படையிலேயே அவுஸ்திரேலியாவும் மிச்சல் மார்ஷ் தலைமையில் T20 உலகக் கிண்ணத்திற்கான தமது அணிக்குழாத்தினை வெளியிட்டுள்ளத
ஆசிய றக்பி முதலாம் பிரிவு நொக் அவுட் போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை 45 – 10 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி ஆசிய றக்பி முதலாம் பிரிவு இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நேற்று (30) இரவு மின்னொளியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியின் முடிவில் இலங்கை அணி 21-3 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்திலும் அபாரமாக ஆடிய இலங்கை அணி மேலும் ...
ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட ஆப்கானிஸ்தான் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்கா மற்றும் மே.தீவகளில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் குழாத்தின் தலைவராக ரஷீட் கான் பெயரிடப்பட்டுள்ளார். T20 உலகக்கிண்ணத் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு கடந்த 2022ம் ஆண்டு T20 உலகக்கிண்ணத் தொடருக்காக அறிவிக்கப்பட்டிருந்த குழாத்திலிருந்து கரீம் ஜனாட், மொஹமட் இசாக் மற்றும் நூர் அஹ்மட் ஆகியோர் புதிதாக குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் 202
ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட இந்திய குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 29ஆம் திகதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே முதலாம் திகதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் பேரவை) அறிவித்து இருந்தது ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் தங்களது ...
இந்தியாவில் நடைபெற்றுவரும் IPL தொடரின் பிளே-ஓஃப் சுற்றுப் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாட மாட்டார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட T20I தொடர் எதிர்வரும் 22ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், உலகக்கிண்ண குழாத்தில் உள்ள வீரர்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. T20 உலகக் கிண்ணத்திற்குரிய முதற்கட்ட இங்கிலாந்து குழாம் அறிவிப்பு அதன்படி பிளே– ஓஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஜூன் மாத ஆரம்பத்தில் நடைபெறவிருக்கும் ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான தமது முதற்கட்ட குழாத்தினை அறிவித்துள்ளது. T20 உலகக் கிண்ணத்திற்கு தயாராக பயிற்சி தொடரில் ஆடும் இலங்கை T20 உலகக் கிண்ணத் தொடர் இம்முறை மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெறுகின்றது. இந்த தொடருக்காக தற்போது பல்வேறு நாடுகள் தமது அணிக்குழாம்களை வெளியிட்டு வரும் நிலையில் தொடரின் நடப்புச் சம்பியனாக காணப்படும் இங்கிலாந்து அணியும் 15 பேர் அடங்கிய தமது முதற்கட்ட அணிக்குழாத்தை வெளியிட்டு
ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட தென்னாபிரிக்க குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எய்டன் மர்க்ரம் தென்னாபிரிக்க அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், முதன்முறையாக ஐசிசி தொடரொன்றில் இவர் தலைவராக செயற்படவுள்ளார். T20 உலகக் கிண்ணத்திற்கு தயாராக பயிற்சி தொடரில் ஆடும் இலங்கை மர்க்ரம் தலைமையில் களமிறங்கவுள்ள தென்னாபிரிக்க அணியில், வருடாந்த ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டிருந்த குயிண்டன் டி கொக் மற்றும் அன்ரிச் நோக்கியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதுமாத்திரமின்றி SAT20 தொடரில் பிரகாச
ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடர் ஜூன் மாதம் ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளில் ஆரம்பமாகவிருக்கும் நிலையில் இந்த தொடரில் பங்கெடுக்கும் அணிகள் தீவிரமான தயார்படுத்தல்களில் ஈடுபட்டு வருகின்றன. LPL தொடருக்காக 500 இற்கும் அதிகமான வீரர்கள் பதிவு இந்த நிலையில் தொடரில் பங்கெடுக்கும் அணிகளில் ஒன்றான இலங்கை அணியும் தொடருக்கு தயாராகும் விதத்தில் பயிற்சி T20 தொடர் ஒன்றினை தமது வீரர்களுக்காக ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயிற்சி T20 தொடரில் மொத்தம் 03 அணிகள் பங்கேற்பதோடு குறிப்பிட்ட தொடருக்கான ...