இந்துனேஷிய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனையான ரொஹ்மாலியா மகளிர் T20 சர்வதேசப் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சுப் பிரதியினைப் பதிவு செய்து புதிய உலக சாதனையினை நிலைநாட்டியுள்ளார். உகண்டா தொடருக்கான இலங்கை அபிவிருத்தி குழாம் அறிவிப்பு அந்தவகையில் ஓட்டங்கள் எதுவும் கொடுக்காமல் மகளிர் T20I சர்வதேசப் போட்டியொன்றில் 7 விக்கெட்டுக்கள் (அதாவது 0-7) என்கிற பந்துவீச்சுப்பிரதியினைப் பதிவு செய்தே ரொஹ்மாலியா புதிய சாதனையினை நிலைநாட்டியிருக்கின்றார். அத்துடன் சுழல்பந்துவீச்சு வீராங்கனையான இவர் தனது அறிமுக சர்வதேச கி
உகண்டா அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை அபிவிருத்தி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அபிவிருத்தி குழாத்தின் தலைவராக 23 வயதான நிபுன் தனன்ஜய நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் கடைசியாக நடைபெற்ற ஐசிசி 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத்தில் விளையாடிய தினுர கலுபான, மல்ஷ தருபதி மற்றும் கருக சங்கெத் ஆகியோரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். >> T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை மகளிர் அணி இவர்களுடன் மொஹமட் சமாஸ், கிரிஷான
T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை முதற்கட்ட குழாத்தில் இடம்பெற்றுள்ள விஜயகாந்த் வியாஸ்காந்த் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட். The post WATCH – T20 உலகக்கிண்ணத்துக்கான சுழல் பந்துவீச்சு குழாத்தில் வியாஸ்காந்த்? | Sports Field appeared first on ThePapare. ...
காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகிய அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் குல்படின் நைப்பை டெல்லி கெபிடல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் 17ஆவது ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இம்முறை ஐபிஎல் தொடரில் ஆடிய பல முன்னணி வெளிநாட்டு வீரர்கள் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி வருவது அணிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து வில
மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான அணிகளை தெரிவு செய்யும் தகுதிகாண் தொடரில் இன்று (25) தாய்லாந்தை எதிர்கொண்ட இலங்கை மகளிர் அணியானது 67 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது. >>பாகிஸ்தான் T20I அணியிலிருந்து வெளியேறிய ரிஸ்வான்<< ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான அணிகளை தெரிவு செய்யும் போட்டித் தொடர் இன்று (25) ஆரம்பமாகியது. தொடரின் முதல் போட்டியில் குழு A அணிகளான இலங்கை மற்றும் தாய்லாந்து என்பவை மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ...
ஐசிசி T20 உலகக்கிண்ண தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள முதற்கட்ட இலங்கை குழாம் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட். The post WATCH – T20 உலகக்கிண்ண குழாத்தில் யாருக்கு வாய்ப்பு? | Sports Field appeared first on ThePapare. ...
நியூசிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது T20i போட்டி இன்று (25) நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரரும், விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரருமான மொஹமட் ரிஸ்வான் மற்றும் இளம் துடுப்பாட்ட வீரர் முஹம்மத் இர்பான் கான் ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளனர். பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட T20i தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் T20i போட்டி மழையால் தடைபட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும், மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணியும
ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று (24) ஆரம்பமான 21ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கையின் நெத்மிகா மதுஷானி ஹேரத் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் பங்குகொண்ட அவர், 13.01 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அத்துடன், இது அவரது தனிப்பட்ட அதிசிறந்த தூரப் பெறுதியாகும். இம்முறை ஆகிய கனிஷ்ட மெய்வலலுனர் போட்டியில் இலங்கைக்கு கிடைத்த முதலாவது பதக்கம் இதுவாகும். 2014ஆம் ஆண்டு ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் ச
உலகின் முன்னணி குறுந்தூர ஓட்ட வீரரான ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட் T20 உலகக்கிண்ணத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. எட்டு தடவைகள் ஒலிம்பிக் தங்கம் வென்றுள்ள உசைன் போல்ட் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4X100 அஞ்சலோட்டம் என மெய்வல்லுனர் போட்டிகளில் உலக சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார். >> T20 உலகக்கிண்ணத்துக்கான முதற்கட்ட இலங்கை குழாத்தில் வியாஸ்காந்த்! இவர் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள ஆடவருக்கான T20 உலகக்கிண்ணத் தொடரின
ஜிம்பாப்வே அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் போது நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் சகீப் அல் ஹசன் ஆடுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே அணி மே மாதம் 03ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆடவிருக்கின்றது. ஒருநாள் தரவரிசையில் உலகின் முதலிடத்தில் சமரி இந்த T20I தொடருக்கான பங்களாதேஷ் குழாம் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் பயிற்சி பெறுகின்ற குழாத்தில் பங்களாதேஷ் அணியின் சிரேஷ்ட சகலதுறைவீரர் சகீ
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்கான 25 பேர்கொண்ட முதற்கட்ட குழாம் ஒன்றை தேர்வுசெய்துள்ளதாக Daily FT இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த இந்த குழாத்தில் கடந்த 15 மாதங்களுக்கு முன்னால் T20I போட்டிகளில் விளையாடிய பானுக ராஜபக்ஷ மற்றும் 2021ம் ஆண்டு T20I போட்டிகளில் விளையாடிய விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் தரவரிசையில் உலகின் முதலிடத்தில் சமரி அதேநேரம் நுவான் துஷார, துஷ்மந்த சமீர, விஜயகாந்த் வியாஸ்காந்த், மதீஷ
இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடப் போவதில்லை என அந்த அணியின் முன்னாள் வீரர் சுனில் நரைன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிவரும் சுனில் நரைன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் T20i சதத்தையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் சிறப்பாக
அவுஸ்திரேலிய சகலதுறைவீரரான மிச்சல் மார்ஷ் தற்போது நடைபெற்று வருகின்ற இந்திய பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் எஞ்சிய போட்டிகளில் டெல்லி கெபிடல்ஸ் அணிக்காக ஆடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. >> IPL போட்டிகளில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களுக்கு அபராதம் மார்ஷ் இம்முறை IPL தொடரில் டெல்லி கெபிடல்ஸ் அணிக்காக நான்கு போட்டிகளில் ஆடியிருந்தார். எனினும் தசை உபாதையினை எதிர்கொண்ட அவர் கடந்த 7ஆம் திகதி அவுஸ்திரேலியாவிற்கு திரும்பியிருந்தார். விடயங்கள் இவ்வாறு காணப்பட்ட நிலையிலையே மிச்சல் மார்ஷ் IPL தொடரி
இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடி வரும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லிக்கு இந்திய கிரிக்கெட் சபை (BCCI) அபராதம் விதித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணிக்கு எதிரான போட்டியில் நடுவருடன் முரண்பட்ட காரணத்துக்கான விராட் கோஹ்லிக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. >> IPL போட்டிகளில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களுக்கு அபராதம் கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணிக்கு எதிரான போட்டியில் 7 பந்துகளில் 18 ஓட்டங்களை விளாசிய விராட் கோஹ்லி ஹர்ஷித் ரா
21ஆவது ஆசிய கனிஷ்ட (20 வயதுக்குட்பட்ட) மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை இளையோர் மெய்வல்லுனர் அணி இன்று (22) ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு புறப்பட்டுச் செல்கிறது. ஆசிய மெய்வல்லுனர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்தப் போட்டித் தொடரானது எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை டுபாயில் நடைபெறவுள்ளதுடன், இலங்கை அணியில் 17 வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர். 11 பேர் கொண்ட ஆண்கள் அணிக்கு கொழும்பு ஆனந்த கல்லூரியின் மெரோன் விஜேசிங்க தலைவராகவும், பிபில நன்னபுரவ மகா வித்தியாலயத்தின் மதுஷானி ஹேரத் த
இந்திய பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் நேற்று (22) பங்கேற்றிருந்த ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் தலைவர் பாப் டு பிளேசிஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவர் சேம் கர்ரன் ஆகியோருக்கு அபராதம் வழங்கப்பட்டிருக்கின்றது. டேவிட், பொலார்டிற்கு அபாரதம் வழங்கிய BCCI இந்திய பிரீமியர் லீக் தொடரில் நேற்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஒரு ஓட்டத்தினால் த்ரில்லர் வெற்றியினைப் பதிவு செய்திருந்தது. விடயங்கள் இவ்வாறிருக்க இந்தப் போட்
மும்பை இந்தியன்ஸ் அணியின் மத்திய வரிசை அதிரடி துடுப்பாட்டவீரரான டிம் டேவிட் மற்றும் அதன் பயிற்சியாளர் குழாத்தில் காணப்பட்ட கீய்ரோன் பொலார்ட் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) அபராதம் வழங்கியுள்ளது. LPL தொடரில் புதிய உரிமையாளர்களைப் பெறும் தம்புள்ளை அணி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே கடந்த வியாழன் (18) IPL தொடரின் குழுநிலை போட்டியொன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரான சூர்யகுமார் யாதவ் துடுப்பாடும் போது அவரிடம் மைதானத்திற்கு வெளியே அதா
பங்களாதேஷ் தொழிலதிபர்களான தமீம் ரஹ்மான் மற்றும் கோலம் ரகீப் ஆகியோரினது Imperial Sports Group, புதிய பருவத்திற்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரில் தம்புள்ளை அணியின் உரிமையாளர்களாக மாறியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. டோனியை தாமதமாக களமிறக்குவதற்கான காரணம் என்ன? கூறும் பயிற்றுவிப்பாளர்! அந்தவகையில் புதிய LPL T20 தொடரில் தம்புள்ளை அணியானது புதிய உரிமையாளர்களின் கீழ் தம்புள்ள தண்டர்ஸ் (Dambulla Thunders) என்னும் பெயரில் போட்டிகளில் பங்கேற்கும் எனக் கூறப்பட்டிருக்கின்றது. Imperial Sports Group நிறுவனம
இலங்கை 19 வயதின் கீழ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் கருக சங்கெத் IPL தொடருக்கான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் வலைப்பந்துவீச்சாளராக இணைக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத் தொடரில் 18 வயதான இளம் வேகப்பந்துவீச்சாளர் கருக சங்கெத் விளையாடி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்திருந்தார். >>இலங்கைக்கு முதல் தங்கம் பெற்ற நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் மறைவு லைசியம் சர்வதேச பாடசாலையை சேர்ந்த கருக சங்கெத் லசித் மாலிங்க பாணியில் பந்துவீசியதுன், விக்கெட்டுகளையும் வீழ்த்தி பிரகாசித்
அபு தாபியில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ண தகுதிகாண் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டு அணிகள் பங்களாதேஷில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ணத்துக்கு தகுதிபெறவுள்ளது. மகளிர் T20 உலகக்கிண்ண தகுதிகாண் தொடரில் மொத்தமாக 10 அணிகள் இரண்டு குழுக்களின் கீழ் விளையாடவுள்ளன. இதில் இரண்டு குழுக்களிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி அதிலிருந்து இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். >>பங்களாதேஷ் அணியின் சுழல்பந்து வீச்சு பயிற்சியாளராகும் முஷ்டாக் அஹ்மட்