இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்கான 25 பேர்கொண்ட முதற்கட்ட குழாம் ஒன்றை தேர்வுசெய்துள்ளதாக Daily FT இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த இந்த குழாத்தில் கடந்த 15 மாதங்களுக்கு முன்னால் T20I போட்டிகளில் விளையாடிய பானுக ராஜபக்ஷ மற்றும் 2021ம் ஆண்டு T20I போட்டிகளில் விளையாடிய விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
ஒருநாள் தரவரிசையில் உலகின் முதலிடத்தில் சமரி
அதேநேரம் நுவான் துஷார, துஷ்மந்த சமீர, விஜயகாந்த் வியாஸ்காந்த், மதீஷ பதிரண மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் IPL தொடரில் விளையாடி வருகின்ற நிலையில், ஏனைய வீரர்கள் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.
அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் யாழ். வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் முதன்முறையாக இலங்கை தேசிய அணியின் முதற்கட்ட குழாத்தில் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இலங்கை அணிக்கு T20 உலகக்கிண்ணத்துக்கு முன்னர் சர்வதேச தொடர்கள் இல்லாத காரணத்தால், எதிர்வரும் 2ம் திகதி முதல் குழாத்துக்குள்ளான பயிற்சிப்போட்டிகளில் விளையாடவுள்ளது. குறித்த இந்தப் பயிற்சிப்போட்டிகளின் அடிப்படையில் இறுதி குழாம் தேர்வுசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முதற்கட்ட குழாம்
பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, அஞ்செலோ மெதிவ்ஸ், தசுன் ஷானக, குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, பானுக ராஜபக்ஷ, தனன்ஜய டி சில்வா, வனிந்து ஹஸரங்க, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, ஜெப்ரி வெண்டர்சே, விஜயகாந்த் வியாஸ்காந்த், அகில தனன்ஜய, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுசங்க, மதீஷ பதிரண, நுவான் துஷார, பிரமோத் மதுசான், பினுர பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<