இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடப் போவதில்லை என அந்த அணியின் முன்னாள் வீரர் சுனில் நரைன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிவரும் சுனில் நரைன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் T20i சதத்தையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் சிறப்பாக
அவுஸ்திரேலிய சகலதுறைவீரரான மிச்சல் மார்ஷ் தற்போது நடைபெற்று வருகின்ற இந்திய பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் எஞ்சிய போட்டிகளில் டெல்லி கெபிடல்ஸ் அணிக்காக ஆடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. >> IPL போட்டிகளில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களுக்கு அபராதம் மார்ஷ் இம்முறை IPL தொடரில் டெல்லி கெபிடல்ஸ் அணிக்காக நான்கு போட்டிகளில் ஆடியிருந்தார். எனினும் தசை உபாதையினை எதிர்கொண்ட அவர் கடந்த 7ஆம் திகதி அவுஸ்திரேலியாவிற்கு திரும்பியிருந்தார். விடயங்கள் இவ்வாறு காணப்பட்ட நிலையிலையே மிச்சல் மார்ஷ் IPL தொடரி
இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடி வரும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லிக்கு இந்திய கிரிக்கெட் சபை (BCCI) அபராதம் விதித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணிக்கு எதிரான போட்டியில் நடுவருடன் முரண்பட்ட காரணத்துக்கான விராட் கோஹ்லிக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. >> IPL போட்டிகளில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களுக்கு அபராதம் கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணிக்கு எதிரான போட்டியில் 7 பந்துகளில் 18 ஓட்டங்களை விளாசிய விராட் கோஹ்லி ஹர்ஷித் ரா
21ஆவது ஆசிய கனிஷ்ட (20 வயதுக்குட்பட்ட) மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை இளையோர் மெய்வல்லுனர் அணி இன்று (22) ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு புறப்பட்டுச் செல்கிறது. ஆசிய மெய்வல்லுனர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்தப் போட்டித் தொடரானது எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை டுபாயில் நடைபெறவுள்ளதுடன், இலங்கை அணியில் 17 வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர். 11 பேர் கொண்ட ஆண்கள் அணிக்கு கொழும்பு ஆனந்த கல்லூரியின் மெரோன் விஜேசிங்க தலைவராகவும், பிபில நன்னபுரவ மகா வித்தியாலயத்தின் மதுஷானி ஹேரத் த
இந்திய பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் நேற்று (22) பங்கேற்றிருந்த ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் தலைவர் பாப் டு பிளேசிஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவர் சேம் கர்ரன் ஆகியோருக்கு அபராதம் வழங்கப்பட்டிருக்கின்றது. டேவிட், பொலார்டிற்கு அபாரதம் வழங்கிய BCCI இந்திய பிரீமியர் லீக் தொடரில் நேற்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஒரு ஓட்டத்தினால் த்ரில்லர் வெற்றியினைப் பதிவு செய்திருந்தது. விடயங்கள் இவ்வாறிருக்க இந்தப் போட்
மும்பை இந்தியன்ஸ் அணியின் மத்திய வரிசை அதிரடி துடுப்பாட்டவீரரான டிம் டேவிட் மற்றும் அதன் பயிற்சியாளர் குழாத்தில் காணப்பட்ட கீய்ரோன் பொலார்ட் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) அபராதம் வழங்கியுள்ளது. LPL தொடரில் புதிய உரிமையாளர்களைப் பெறும் தம்புள்ளை அணி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே கடந்த வியாழன் (18) IPL தொடரின் குழுநிலை போட்டியொன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரான சூர்யகுமார் யாதவ் துடுப்பாடும் போது அவரிடம் மைதானத்திற்கு வெளியே அதா
பங்களாதேஷ் தொழிலதிபர்களான தமீம் ரஹ்மான் மற்றும் கோலம் ரகீப் ஆகியோரினது Imperial Sports Group, புதிய பருவத்திற்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரில் தம்புள்ளை அணியின் உரிமையாளர்களாக மாறியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. டோனியை தாமதமாக களமிறக்குவதற்கான காரணம் என்ன? கூறும் பயிற்றுவிப்பாளர்! அந்தவகையில் புதிய LPL T20 தொடரில் தம்புள்ளை அணியானது புதிய உரிமையாளர்களின் கீழ் தம்புள்ள தண்டர்ஸ் (Dambulla Thunders) என்னும் பெயரில் போட்டிகளில் பங்கேற்கும் எனக் கூறப்பட்டிருக்கின்றது. Imperial Sports Group நிறுவனம
இலங்கை 19 வயதின் கீழ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் கருக சங்கெத் IPL தொடருக்கான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் வலைப்பந்துவீச்சாளராக இணைக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத் தொடரில் 18 வயதான இளம் வேகப்பந்துவீச்சாளர் கருக சங்கெத் விளையாடி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்திருந்தார். >>இலங்கைக்கு முதல் தங்கம் பெற்ற நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் மறைவு லைசியம் சர்வதேச பாடசாலையை சேர்ந்த கருக சங்கெத் லசித் மாலிங்க பாணியில் பந்துவீசியதுன், விக்கெட்டுகளையும் வீழ்த்தி பிரகாசித்
அபு தாபியில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ண தகுதிகாண் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டு அணிகள் பங்களாதேஷில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ணத்துக்கு தகுதிபெறவுள்ளது. மகளிர் T20 உலகக்கிண்ண தகுதிகாண் தொடரில் மொத்தமாக 10 அணிகள் இரண்டு குழுக்களின் கீழ் விளையாடவுள்ளன. இதில் இரண்டு குழுக்களிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி அதிலிருந்து இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். >>பங்களாதேஷ் அணியின் சுழல்பந்து வீச்சு பயிற்சியாளராகும் முஷ்டாக் அஹ்மட்
மேற்கிந்திய தீவுகளின் அதிரடி சகலதுறை துடுப்பாட்டவீரரான சுனீல் நரைன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் ஆடுவதற்கான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஐபிஎல் இல் புது வரலாறு படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 35 வயது நிரம்பிய சுனீல் நரைன் கடந்த ஆண்டின் நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வினை அறிவித்திருந்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்ற போதிலும் உள்ளூர் T20 லீக்குகளில் தொடர்ந்து ஆடி வந்த அவர் தற்போது நடைபெற்று வருகின்ற இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக து
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பிக் பேஷ் லீக்கின் அடுத்த பருவகாலத்தில் ஆப்கானிஸ்தானின் முன்னணி வீரர் ரஷீட் கான் பங்கேற்பது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவிருந்த மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரை ஒத்திவைப்பதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது. ஐபிஎல் இல் புது வரலாறு படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் அரசு அமைக்கப்பட்ட பின்னர் மகளிருக்கான அனைத்து வகை விளையாட்டுகளும் நிறுத்தப்பட்டன. ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியும் இதனால் பாதிக்கப்பட்டது.
ஐபிஎல் தொடரில் நேற்று (15) நடைபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் ஐபிஎல் போட்டிகள் வரலாற்றில் அதிகபட்ச ஓட்டங்களைக் குவித்த அணி எனும் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 30ஆவது லீக் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 20 ஓவர்கள் முடிவில்
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னணி சகலதுறை வீரர் கிளேன் மெக்ஸ்வல் உடல் மற்றும் உளவியல் ரீதியில் தயாராகுவதற்காக IPL போட்டியொன்றிலிருந்து விலகியுள்ளார். கிளேன் மெக்ஸ்வெல் பெருவிரலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன. முஸ்தபிசுர் ரஹ்மானிற்கு சிறு அவகாசம் வழங்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் எனினும் அவருடைய பிரகாசிப்பின்மை காரணமாக அணியிலிருந்து சற்று ஓய்வை பெற்றுக்கொண்டதாக கிளேன் மெக்ஸ்வெல் கருத்து தெரிவித்துள்ளார். “தன
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் மே மாதம் 01ஆம் திகதி வரை இந்திய பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் ஆட முடியும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. >> உபாதை காரணமாக வெளியேறும் சிகர் தவான்! மே மாத ஆரம்பத்தில் ஜிம்பாப்வே-பங்களாதேஷ் அணிகள் பங்கெடுக்கும் T20 தொடர் நடைபெறுகின்றது. இதனால் பங்களாதேஷ் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் அந்த நாட்டு கிரிக்கெட் சபை மூலம் ஏப்ரல் 30ஆம் திகதி வரை IPL போட்டிகளில் ஆட ஆட்சேபனையின்றிய சான்றிதழை (NOC) பெற்றி
IPL தொடரில் பஞ்சாப் அணியின் தலைவராக செயற்பட்டு வரும் சிகர் தவான் தோற்பட்டை உபாதைக்கு முகங்கொடுத்துள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. உபாதை காரணமாக ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலிருந்து விலகியிருந்த சிகர் தவான், குறைந்தது 7 நாட்களுக்கு போட்டிகளில் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கு இலகு வெற்றி எனவே அடுத்து வரும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாட மாட்டார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிகர் தவான் அ
சுற்றுலா இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் தென்னாபிரிக்க மகளிர் அணி ஆகியவை இடையே நடைபெற்று முடிந்த மகளிர் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. T20I உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான இலங்கை மகளிர் குழாம் அறிவிப்பு தென்னாபிரிக்கா சென்றிருக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அங்கே T20I தொடரினை அடுத்து தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றது. ஐ.சி.சி. சம்பியன்ஷிப்பிற்காக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி கைவிடப்பட இரண்டாவது ஒருநாள் ப
ACC பிரீமியர் கிண்ண T20I தொடரின் கட்டார் அணிக்கு எதிரான போட்டியில் நேபாள வீரர் திபெந்ர சிங் ஐரீ 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார். சர்வதேச T20I கிரிக்கெட்டில் இந்திய வீரர் யுவராஜ் சிங் மற்றும் மேற்கிந்திய தீவுகள் வீரர் கீரன் பொல்லார்ட் ஆகியோருக்கு அடுத்தப்படியாக 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்களை விளாசிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார். மகளிர் T20I உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடருக்கான ஆடும் இலங்கை இன்னிங்ஸின் கடைசி ஓவர் ஆரம்பத்தில் 15 பந்துகளுக்கு ...
இந்த ஆண்டுக்கான மகளிர் T20I உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் பங்கெடுக்கும் 15 பேர் அடங்கிய இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. LPL தொடருக்கான வீரர்கள் பதிவு ஆரம்பம்! 2024ஆம் ஆண்டுக்கான மகளிர் T20I உலகக் கிண்ணத் தொடர் ஒக்டோபர் மாதம் பங்களாதேஷில் நடைபெறவிருக்கின்றது. இந்த T20I உலகக் கிண்ணத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கெடுக்கும் நிலையில் 8 அணிகள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. எனவே உலகக் கிண்ணத் தொடரின் எஞ்சிய 2 அணிகளையும் தெரிவு செய்ய தகுதிகாண் தொடர் இம்மாதம் ...
லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் விளையாடவுள்ள வெளிநாட்டு வீரர்கள் தங்களுடைய பெயர்களை விண்ணப்பிக்க முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை கிரிக்கெட் சபையின் https://srilankacricket.lk/lpl-player-registration-portal/ இணையத்தளத்தின் ஊடாக வீரர்கள் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. >>IPL தொடரில் விளையாட வியாஸ்காந்திற்கு வாய்ப்பு!<< வெளிநாட்டு வீரர்கள் இரண்டு பிரிவுகளின் கீழ் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்துக்கொள்ள முடியும
இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) இலங்கை அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைக்கப்பட்டுள்ளார். தமிழ்பேசும் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் இலங்கை அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரும், T20I அணியின் தலைவருமான வனிந்து ஹஸரங்கவுக்கு பதிலாக சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். தமிழ்பேசும் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் இலங்கை அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரும், T20I அணியின் தலைவருமான வனிந்து ஹஸரங்கவுக்கு பதிலாக சன்ரைஸர்ஸ்