மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுடன் விளையாடவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் மேற்கிந்திய தீவுகளின் தலைவராக பிரண்டன் கிங் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். >>நட்சத்திர வீரர்களை ஒப்பந்தம் செய்த கொழும்பு ஸ்ரைக்கர்ஸ்! மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரர்கள் பலர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகின்ற IPL தொடரில் பங்கேற்று வருகின்ற இந்த சந்தர்ப்பத்திலேயே புதிய தலைவர் ஒருவரின் நியமனம் இடம்பெற்றிருக்கின்றது. இந்தப் பருவத்திற்கான IPL தொடரின் பிளே ஒப் சுற்று மற்றும் இறுதிப் போட்
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ஹார்திக் பாண்டியா அடுத்த பருவதற்கான ஐ.பி.எல் தொடரில் தனக்கான முதல் போட்டியில் ஆட தடை வழங்கப்பட்டிருக்கின்றது. 2024 LPL வீரர்கள் ஏலம் குறித்த புதிய அறிவிப்பு ஹார்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணி இந்த பருவத்திற்காக விளையாடிய கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மந்த கதியில் ஓவர்களை வீசிய குற்றத்திற்காகவே (Slow over rate) அடுத்த ஆண்டுக்கான (அதாவது 2025 ஆம் ஆண்டுக்கான) ஐ.பி.எல் தொடரில் தான் ஆடவிருக்கும் முதல் போட்டியில் பங்கேற்கும் சந்தர்ப்பத்தினை இழக்கின்றார். மும்பை .
ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாத்தின் துடுப்பாட்ட வரிசை தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட். The post WATCH – T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை துடுப்பாட்ட வரிசை எப்படி? | Sports Field appeared first on ThePapare. ...
இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் விரைவில் அமெரிக்க வீசாவை பெற்றுக்கொள்வார் என கிரிக்கெட் சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாம் கடந்த 14ம் திகதி அமெரிக்கா நோக்கி புறப்பட்ட போதிலும், வீசா கிடைக்காத காரணத்தால் குசல் மெண்டிஸ் அணியுடன் பயணிக்கவில்லை. இவருடன் மேலதிக வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த அசித பெர்னாண்டோ மற்றும் ஜனித் லியனகே ஆகியோரும் அணியுடன் பயணிக்கவில்லை. >> இலங்கை வரும் மே.தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணி! இந்த நிலையில் குசல் மெண்டி
இந்த ஆண்டு (2024) T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் அணிகளுக்கான பயிற்சிப் போட்டிகளுக்குரிய அட்டவணை ஐ.சி.சி. (ICC) மூலம் வெளியிடப்பட்டிருக்கின்றது. >>இலங்கை வரும் மே.தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணி!<< அந்தவகையில் தொடரில் பங்கெடுக்கும் அணிகள் இம்மாதம் 27ஆம் திகதி தொடக்கம் ஜூன் 1 வரை T20 உலகக் கிண்ணத் தொடரிற்கான பயிற்சிகளில் ஈடுபடும் வகையில் பயிற்சிப் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மொத்தமாக 16 பயிற்சிப் போட்டிகள் T20 உலகக் கிண்ணத் தொடருக்காக ஒழுங்கு செய்யப்ப
மேற்கிந்திய தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. குறிப்பிட்ட இந்த தொடரானது அடுத்த மாதம் 15ம் திகதி ஒருநாள் தொடருடன் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. T20I தரவரிசையில் முதலிடம் பிடித்த வனிந்து ஹஸரங்க! ஒருநாள் போட்டிகள் 15, 18 மற்றும் 21ம் திகதிகளில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், T20I போட்டிகள் 24, 26 மற்றும் 28ம் திகதிகளில் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்
நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர சுழல்பந்துவீச்சாளருமான சந்தீப் லமிச்சேனாவினை அந்த நாட்டின் நீதிமன்றம் குற்றவாளி இல்லை என தீர்ப்பளித்துள்ளது. T20I தரவரிசையில் முதலிடம் பிடித்த வனிந்து ஹஸரங்க! சந்தீப் லமிச்சானே சிறுமி ஒன்றை கடந்த 2022ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு நேபாள நாட்டின் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இனம் காணப்பட்டிருந்தார். இதற்கு அவருக்கு அந்த நாட்டின் நீதிமன்றம் எட்டு வருட சிறை தண்டனை வழங்கியிருந்ததுடன் ஐந்து லட்ச ரூபாய் அபராதமாகவும் செலுத்த நிர்ப்ப
மத்திய ஆசிய கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் ஆரம்ப சுற்றுப் போட்டியில், பலம் வாய்ந்த ஈரானுக்கு எதிராக நேற்று (15) நடைபெற்ற போட்டியில் 3-0 என்ற நேர் செட்கள் அடிப்படையில் இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சர்வதேச கரப்பந்hhட்டப் போட்டிகள் வரலாற்றில் இலங்கை அணி முதல் தடவையாக ஈரான் அணியை வீழ்த்தியமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். போட்டியின் ஆரம்பம் முதலே எதிரணியான ஈரான் அணிக்கு பலத்த போட்டியைக் கொடுத்த இலங்கை வீரர்கள், போட்டியின் முதல் செட்டில் 25-22 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. ...
சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள புதிய T20 சகலதுறை வீரர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் தலைவர் வனிந்து ஹஸரங்க முதலிடம் பிடித்துள்ளார். ஐசிசி T20 உலகக்கிண்ணம் நெருங்கிவரும் நிலையில், 228 மதிப்பீட்டு புள்ளிகளை பெற்று பங்களாதேஷின் சகீப் அல் ஹஸனுடன் முதலிடத்தை வனிந்து ஹஸரங்க பகிர்ந்துக்கொண்டுள்ளார். கோல் மார்வல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள முன்னணி வீரர்கள்! ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் பங்களாதேஷின் அனுபவ சகலதுறை வீரர் சகீப் அல் ஹஸன் விளையாடாத காரணத்தால், அவருடைய மதிப்பீட்டு புள்ளிகள் குற
தென்னாபிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ககிஸோ றபாடா தற்போது நடைபெற்று வருகின்ற IPL T20 தொடரில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. கோல் மார்வல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள முன்னணி வீரர்கள்! IPL T20 தொடரில் இம்முறை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்த ககிஸோ அவ்வணிக்காக 11 போட்டிகளில் ஆடி 11 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். இந்த நிலையில் றபாடாவிற்கு தசையிழைய தொற்று ஏற்பட்டிருப்பதன் காரணமாகவே IPL தொடரில் இருந்து தீடிரென விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ககிஸோ
இம்முறை டி20 உலகக் கிண்ணத்துக்கு தான் எதிர்பார்த்த அணி வீரர்கள் தனக்கு கிடைத்துள்ளதாக இலங்கை T20 அணியின் தலைவர் வனிந்து ஹஸரங்க தெரிவித்துள்ளார். அதேபோல, இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி நிச்சயம் சாதிக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவின் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டனர். இந்த நிலை
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோருக்கு ஐக்கிய அமெரிக்காவுக்கான வீசா கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்காக இலங்கை அணியின் 25 வீரர்களுக்கு அமெரிக்க வீசா விண்ணப்பிக்கப்பட்டிருந்தன. >> புதிய பயிற்றுவிப்பாளருக்கான விண்ணப்பங்களை கோரும் இந்திய கிரிக்கெட் சபை! இதில் ஏனைய வீரர்களுக்கு அமெரிக்க வீசா கிடைக்கப்பெற்ற போதும், குசல் மெண்டிஸ் மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோருக்கு வீசா வழ
2024ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் பங்களாதேஷின் 15 பேர் அடங்கிய வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. புதிய பயிற்றுவிப்பாளருக்கான விண்ணப்பங்களை கோரும் இந்திய கிரிக்கெட் சபை! அறிவிக்கப்பட்டிருக்கும் பங்களாதேஷ் குழாத்தில் கடைசியாக நடைபெற்ற 2022ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடரில் உள்ளடக்கப்படாது போன அனுபவ சகலதுறைவீரரான மஹ்மதுல்லா உள்ளடக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம் பங்களாதேஷ் குழாத்தின் தலைவராக நஜ்முல் ஹொசைன் ஷன்டோ நியமனம் செய்யப்பட்டிருப்பதோடு, பிரதி தலைவர
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளருக்கான விண்ணப்பங்கள் இந்திய கிரிக்கெட் கோரியுள்ளது. அதன்படி தற்போது தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்படும் ராஹுல் டிராவிட்டின் இடத்துக்கான விண்ணப்பங்களை இம்மாதம் 27ம் திகதிக்கு (மாலை 06.00 மணி) முன்னர் அனுப்பிவைக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. T20 உலகக் கிண்ணத்திற்கான நெதர்லாந்து குழாம் அறிவிப்பு ராஹுல் டிராவிட் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக்கிண்ண நிறைவுவரை இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார். இந்தநிலையில் புதிதாக நியம
நெதர்லாந்து கிரிக்கட் அணி T20 உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர் கொண்ட தமது வீரர்கள் குழாத்தினை அறிவித்துள்ளது. >> T20i கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஷோன் வில்லியம்ஸ் விக்கெட்காப்புத் துடுப்பாட்டவீரரான ஸ்கொட் எட்வார்ட்ஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கும் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான நெதர்லாந்து அணி, கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் ஆடிய வீரர்களினை பெரும்பாலும் கொண்டிருக்கின்றது. அதேநேரம் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான நெதர்லாந்து அணியில் முன்வரிசைத் துடுப்பாட்டவீரரான கொலின் ஏக்கர்மனு
சர்வதேச T20i போட்டிகளில் இருந்து ஜிம்பாப்வே அணியின் முன்னணி சகலதுறை வீரரான சீன் வில்லியம்ஸ் ஓய்வை அறிவித்துள்ளார். ஜிம்பாப்வே அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட T20i தொடரில் விளையாடியது. இத்தொடரை பங்களாதேஷ் அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அந்தவகையில், பங்களாதேஷ் அணியுடன் நேற்று (12) நடைபெற்ற ஐந்தாவதும், கடைசியுமான T20i போட்டியுடன் ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வீரர் மற்றும் முன்னாள் தலைவர் சீன் வில்லியம்ஸ் T20i கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். ஜிம்பாப்வே
ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ்பேசும் சுழல் பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைக்கப்பட்டமைக்கான காரணத்தை தேர்வுக்குழு வெளியிட்டுள்ளது. T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாம் தேர்வு தொடர்பில் அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று திங்கட்கிழமை (13) இலங்கை கிரிக்கெட் சபையில் நடைபெற்றது. >> ஓய்வு முடிவை அறிவித்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த ஊடக சந்திப்பின் போது ஜெப்ரி வெண்டர்சே மற்றும் அகில தனன்ஜய ஆகிய அனுபவ சுழல் பந்துவீச்சாளர்கள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக வி
உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (11) உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். எதிர்வரும் ஜுலை மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் கேட்டுகொண்டதால், ஆண்டர்சன் ஓய்வை அறிவித்துள்ளார். இதனால் 188 டெஸ்ட் போ
ஆப்கானிஸ்தான் A அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய மொஹமட் சிராஸ் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர்களான ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் சிராஸ் The post WATCH – ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பந்துவீச்சில் அசத்திய மொஹமட் சிராஸ்! | Sports Field appeared first on ThePapare. ...
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்கான பயிற்சிப் போட்டித் தொடரில் இன்று (11) நடைபெற்ற போட்டியில் SLC டீம் கிரீன் அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. SLC டீம் கிரீன் அணி இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. கமில் மிஷார சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்ததுடன், பின்வரிசையில் ரவிந்து பெர்னாண்டோ சிறப்பாக இன்னிங்ஸை நிறைவு செய்ய உதவினார். டிக்வெல்ல, அவிஷ்கவின் பிரகாசிப்புடன் SLC டீம் ரெட் அணிக்கு வெற்றி கமில் மிஷார 23 பந்துகளில் 2 சிக