மீண்டும் ஒரு IPL காலம்..... எங்கள் மாலைப் பொழுதுகள் எல்லாம் IPL உடன் மூழ்கிக் கிடக்கின்றன. Twitter, Facebook Timeline எல்லாம் IPL இனால் நிறைந்து கிடக்கின்றன.. விலைவாசி முதல் தலைபோகும் அரசியல் பிரச்சினைகளும், வாழ்க்கையின் வேதனைகளும் தற்காலிமாக மறக்கவும் IPL தான் துணை.... இந்த நேரத்தில் தான் முன்னைய இடுகையொன்று ஞாபம் வந்தது... இதோ ரிப்பீட்டு... பரீட்சைகள் என்றாலே கசப்பு மருந்தாக, ...
"டேய் என்ன மச்சி சௌண்ட காணோம்?" "இல்லடா எப்படி இருந்த நம்ம இப்படி ஆகிட்டோமே எண்டு யோசிச்சிட்டு இருந்தன் மச்சான்""சரி சரி விடு அதெல்லாம் ஒரு காலம் நீ ஆபீஸ் போக டைம் ஆகுது எண்டு சொன்னியே கிளம்பு அப்புறம் பேசலாம்" "யா மச்சி மறந்தே போச்சு ஐல்கால் யு பக்டா பாய்""பாய் டா டேக்கேர்" எண்டு வச்சிட்டு என் மொனிடேர்ரையே பாத்துக்கிட்டு இருந்தேன். அவன் சொன்ன வார்த்தை மட்டும் என்னை ஏதோ செய்வது போன்று இருந்தது. "எப்படி இருந்த நம்ம இப்படி ஆகிட்டோமே" ...
"உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....."அழகான மௌனத்துக்குள் அலாரமாய் மாறி விட்டது அந்த சத்தம். இரவின் திடீர் விழிப்பு எவ்வளவு கொடுமை என்பதை உணர்ந்து கொண்டேன். என் அறை திறந்து வெளியே வந்தேன். நடந்தது என்னவென்று தெரியாமல் என் மொத்த குடும்பமும் விழி பிதுங்கி நின்றது. ஒருவரை ஒருவர் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டே வீட்டு வாசல் கதவைத் திறந்தோம். ஒரே ஆச்சரியம்!!! ஊரே ஒன்று கூடி என்ன மாநாடு நடத்துகிறது இந்த நடு இரவில்?? எல்லாரும் எங்களை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே அவர்கள் பேச்சோடு பிஸியாகிவிட்டார்கள். அம்மா பெண