நிலவோ நெருப்போ? - எனக்குப் பிடித்த சிறுகதை
சுருதி நா.சோமகாந்தன் புகையிலைக் கன்றுகள் கொய்யா இலைக் கூட்டை உடைத்துக் கொண்டு கூவத்தொடங்குகிற சேவல் அளவுக்கு வளர்ந்து, தலையை வெளியே எட்டிப் பார்க்கிற காலம். நெல்லியடிச் சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் றோட் டில் அரைக் கட்டை தூரத்தில் தெருவோரமாக கிளை பரப்பில் சடைத்து வளர்ந்திருக்கிறது, ஒரு சொத்திப் பூவரச மரம். அதனடியில் மாலை தோறும் குழைக்கடை கூடுவது வழக்கம். புகையிலை பயிராகும் போகத்தில் இந்தக் குழைக் கடையில் வடமராட்சித் தமிழ் வழக்கு பிறந்த மேனியாகக் காட்சி தரும்! சனசந்தடியும், சரளமான விரசப் பேச்சும் இரைச்சலும்