இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக அவிஷ்க குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள ஐசிசியின் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டிகள் வரை அவிஷ்க குணவர்தன இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளராக கடமையாற்றவுள்ளார். அவிஷ்க குணவர்தனவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீக்கிய ICC அவிஷ்க குணவர்தனவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த இரண்டு வெவ்வேறான ஊழல் குற்றச்சாட்டுகளை, ஐசிச
இலங்கையின் பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை இலங்கை கிரிக்கெட்டின் புதிய பணிப்பாளர் டொம் மூடியுடன் இணைந்து மிக விரைவில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சு ஜாம்பவானும், கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான முத்தையா முரளிதரன் தெரிவித்தார். இதுதொடர்பில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் வெளியிட்ட கருத்தை இந்தக் காணொளியில் பார்க்கலாம். The post video – “Tom Moody இன் வழிகாட்டலுடன் பாடசாலை கிர
இலங்கையின் பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை மிக விரைவில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சு ஜாம்பவானும், கிரிக்கெட் ஆலொசனைக் குழுவின் உறுப்பினருமான முத்தையா முரளிதரன் தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய பணிப்பாளராக மூன்று ஆண்டுகால ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டுள்ள டொம் மூடி மற்றும் அரவிந்த டி சில்வா தலைமையிலான கிரிக்கெட் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினர்களுடனான முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு கடந்த வாரம் கொழ
பாடசாலை கிரிக்கெட்டினை மேம்படுத்தும் நோக்கில், கல்முனை வெஸ்லி கல்லூரி மற்றும் மட்டக்களப்பின் EPP அணி ஆகியவற்றின் 15 வயதுக்குட்பட்ட அணிகள் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கல்முனை வெஸ்லி கல்லூரி அணி 149 ஓட்ட வித்தியாசத்தில் அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. >> EPP கிரிக்கெட் தொடரின் வெற்றியாளரான சிவானந்தா கல்லூரி அணிக்கு 35 ஓவர்கள் கொண்டதாக நடைபெற்ற இந்தப் போட்டி சனிக்கிழமை (13) கல்முனை வெஸ்லி கல்லூரியினது சொந்த மைதானத்தில் ஆரம்பமாகியது. தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற
யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு எதிராக இடம்பெற்ற வணக்கத்திற்குரிய AJC செல்வரத்தினம் ஞாபகார்த்த நினைவுக் கேடயத்திற்கான 10ஆவது கிரிக்கெட் போட்டியில் கல்கிசை புனித தோமையர் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 35 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் புனித தோமையர் கல்லூரி AJC செல்வரத்தினம் ஞாபகார்த்த நினைவுக் கேடயத்தினை 6ஆவது தடவையாக வெற்றி கொண்டுள்ளது. நேற்று (08) புனித தோமையர் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சொந்த மைதான அணியின் தலைவர் சலின் ...
அனைத்து வயதுப் பிரிவையும் உள்ளடக்கியதாக நாடு பூராகவும் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காணும் நோக்கில் 12 மாகாண ஒருங்கிணைப்பாளர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நியமித்துள்ளது. இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம், மாவட்ட மற்றும் மாகாணங்களை உள்ளடக்கிய அனைத்து வயதுப் பிரிவினர்களையும் அடையாளம் காண்பதே இந்த ஒருங்கிணைப்பாளர்களின் முக்கிய பொறுப்பாகும். >> Video – Dimuth, Dasun இன் கேப்டன்சியில் சாதிக்குமா இலங்கை அணி? | Sports RoundUp – Epi 150 இதன்படி, மாவட்ட மற்றும் மாகாண கிரிக்கெட் சங்கங்கள், பாட
பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கு என பிரத்தியேகமாக கொரோனா வைரஸ் தொடர்பில் முகாமையாளர் ஒருவரை நியமித்து வருடாந்த பெரும் சமர் கிரிக்கெட் போட்டிகளை (Big Match) நடத்துவதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. எனினும், போட்டிகள் நடைபெறுகின்ற மைதானத்தில் போட்டிகளை நடத்துவதற்கு சுகாதார அதிகாரிகளின் அனுமதியினைப் பெற்றுக்கொள்வதும், பார்வையாளர்கள் இன்றி போட்டியை நடத்துவது கட்டாயம் எனவும் கல்வி அமைச்சின் உடற்தகுதி மற்றும் விளையாட்டு பணிப்பாளருமான தயா பண்டார, தினமின பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கொவிட் – 19 வைரஸ் காரணமாக தடைப்பட்டுள்ள அனைத்து விளையாட்டுகளுக்குமான பயிற்சிகளை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மீண்டும் ஆரம்பிப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, , கிராமப்புற மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுத்துறை அமைச்சர் தேனுக விதானகமகே மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆரச்சிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று சுகாதார அமைச்சில் நேற்று (05) இடம்பெற்றது. 2021இல் வடக்கின் விளையாட
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கல்வி அமைச்சினால் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கிய சகல விளையாட்டு நிகழ்ச்சிகளையும் நடத்துவதற்கு தடை விதிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, இவ்வருடம் நிறைவடையும் வரை பாடசாலை மட்டத்திலான எந்தவொரு விளையாட்டுப் போட்டியும் இடம்பெறமாட்டாது என அனைத்து பாடசாலைகளுக்கும், விளையாட்டு சங்கங்களுக்கும் கடிதம் மூலம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் விளையாட்டுப் பணிப்பாளர் தயா பண்டார தெரிவித்துள்ளார். கொரோனாவினால
இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்ற 48ஆவது சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இரண்டாவது நாளான இன்று (09) நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ்.மிதுன் ராஜ் புதிய போட்டி சாதனை படைத்தார். இப்போட்டித் தொடரின் முதல் நாளான நேற்று நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில் கலந்துகொண்ட மிதுன் ராஜ், வெண்கலப் பதக்கம் வென்று அக்கல
பதுளை, வின்சன்ட் டயஸ் அரங்கில் நடைபெற்ற 2017ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் பேராதனை பல்கலைக்கழகத்தை வீழ்த்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கிண்ணத்தை சுவீகரித்தது. இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற யாழ் பல்கலைக்கழகம், 19 தடவைகள் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 13 ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். யாழ் பல்கலைக்கழகம் 1979, 1980, 1992, 1995, 1998, 2001, 2005, 2009,
ரக்பி விளையாட்டினை இலங்கையில் அபிவிருத்தி செய்யும் நோக்கில் இலங்கை ரக்பி சம்மேளனம், உலக ரக்பி சம்மேளனத்துடன் இணைந்து நடாத்தும் “ரக்பிக்குள் நுழைவோம்” (GET INTO RUGBY) செயற்திட்டத்தின் முதலாவது பயிற்சி முகாம் இன்று (21) பொலன்னறுவை தேசிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மஹேல ஜயவர்தன நியுசிலாந்து ரக்பி அணியின் ரசிகரானது எவ்வாறு? மஹேல ஜெயவர்தன நவீன கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவர். ஜெட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் அனுசரணையில் நடாத்தப்படும் பயிற்சி முகாம் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் நடாத்தப்பட
அகில இலங்கை பாடசாலைகள் அஞ்சலோட்டப் போட்டிகளின் இரண்டாவது நாள் போட்டிகள் நிறைவில் வளல ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம் பெண்கள் பிரிவிலும், கலப்பு பிரிவிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4×800m அஞ்சலோட்டம் மற்றும் 20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கலப்பு அஞ்சலோட்டம் என அனைத்திலும் தங்கப் பதக்கங்களை அள்ளிக் குவித்தது. யாழ் மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் மேல் மாகாண பாடசாலைகள் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் மைலோ அனுசரணையுடன் 2 ஆவது தடவையாக ஏற்பாடு.. நெஸ்லே லங்கா நிறுவனத்தின் மைலோ அனுசரணையுடன் 2ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்ப
இலங்கை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும், பின்னடைவை எதிர்நோக்கியுள்ள பாடசாலை கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்காகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கு அமைய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவினால் பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் முன்வைக்கப்படுகின்ற முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளுக்கமைய கல்வி அமைச்சும், பாடசாலை கிரிக்கெட் சங்கமும் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கவுள்ள வேலைத் திட்டத்துக்கு க
நெஸ்லே லங்கா நிறுவனத்தின் மைலோ அனுசரணையுடன் 2ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை பாடசாலைகள் அஞ்சலோட்டப் போட்டிகள் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை முதற்தடவையாக யாழ். துரையப்பா மைதானத்தில் நடைபெறவுள்ளது. கல்வி அமைச்சும், இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனமும் இணைந்து நடாத்துகின்ற இம்முறைப் போட்டித் தொடரில் நாடளாவிய ரீதியிலிருந்து 164 ஆண்கள் பாடசாலைகளும், 138 பெண்கள் பாடசாலைகளும் (302 பாடசாலைகள்) கலந்துகொள்ளவுள்ளன. முதல் இடத்தைப் பறிகொடுத்த அஷ்ரப் : நிமாலிக்கு அதிர்ச்சித் தோல்வி மு
இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான முதலாம் பிரிவு (டிவிஷன் I) பாடசாலைகள் கால்பந்து சம்பின்ஷிப் போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. சுகததாச அரங்கில் நடைபெறும் இதன் முதல் போட்டியில் நடப்பு சம்பியனான புனித ஜோசப் கல்லூரி மற்றும் புனித பெனடிக்ட் கல்லூரி அணிகள் மோதவுள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் புனித ஜோசப் கல்லூரி அணி, திருச்சிலுவை கல்லூரியை 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 21 ஆண்டுகளின் பின் சம்பியன் ...
ரெட்புல் நிறுவனத்தின் அனுசரணையோடு, கல்வி நிலையங்களுக்கு இடையில் நடைபெற்றிருந்த T-20 கிரிக்கெட் தொடரின் (Red Bull Campus Cricket Tournament) 2017 ஆம் ஆண்டிற்கான சம்பியனாக, சேஜிஸ் பல்கலைக்கழகத்தினை (Saegis Campus) 9 விக்கெட்டுக்களால் வீழ்த்திய பி.எம்.எஸ் (BMS) கல்வி நிலையம் தெரிவாகியுள்ளது. ஜூலை மாத ஆரம்பத்தில் தொடங்கியிருந்த இந்த கிரிக்கெட் தொடரில், நாட்டில் கல்விச்சேவை வழங்குவதில் முன்னோடிகளாக திகழும் பல கல்வி நிறுவனங்கள் கலந்துகொண்டிருந்தன. நேற்று (21), இடம்பெற்றிருந்த தொடரின் அரையிறுதிப்போட்டியொன்றில் கொ
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 10ஆவது விளையாட்டுப் போட்டியில் அம்பாரை கல்வி வலயம் 208 புள்ளிகளைப் பெற்று சம்பியனாகத் தெரிவானது. கிழக்கு மாகாண பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டி முதல் இரண்டு நாள் முடிவுகள் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 10வது விளையாட்டு விழாவின்… 203 புள்ளிகளைப் பெற்று பட்டிருப்பு கல்வி வலயம் இரண்டாமிடத்தையும், மட்டக்களப்பு கல்வி வலயம் 118 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டது. இறுதிநாள் பரிசளிப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண மேலதிகக் கல்விப் பண
பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்கு உட்பட்ட அணிக்கு எழுவர் கொண்ட ரக்பி சுற்றுப் போட்டியின் முதல் நாள் போட்டிகள் நேற்று ரேஸ் கோர்ஸ் சர்வதேச மைதானம் மற்றும் றோயல் கல்லூரி மைதானங்களில் இடம்பெற்றன. முதல் நாள் நிறைவில் ஒரு போட்டியிலேனும் தோல்வியைத் தழுவாத எட்டு அணிகள் கோப்பைக்கான (Cup) காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. 31 பாடசாலைகள் பங்குபற்றிய இத்தொடர் நேற்று காலை 8.20 மணிக்கு ஆரம்பமானதுடன் அணிகள் 8 குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. A, B, C மற்றும் D குழுக்களுக்கான போட்டிகள் றோயல் ...
கல்வி திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு, தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற 2017ஆம் ஆண்டுக்கான மேல் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் நேற்றைய தினம் நிறைவு பெற்றன. கிர்கிஸ்தான் பகிரங்க மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கு 7 பதக்கங்கள் கடந்த வார இறுதியில் கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் இடம்பெ ற்ற.. கடந்த 19ஆம் திகதியில் இருந்து (திங்கட்கிழமை) தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைபெற்ற இந்தப் போட்டிகளில், ஏற்கனவே இடம்பெற்று முடிந்த போட்டிகளில் வெற்றி பெற்று மாகாண மட்டப் போட