பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக முன்னாள் பெர்முடா வீரர் டேவிட் ஹேம்ப் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை வீரர் அன்ட்ரூ ஆடம்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு அந்தப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அத்துடன், அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள இலங்கை அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் இருந்து இருவரும் தமது கடமைகளை ஆரம்பிக்க உள்ளனர். பெர்முடா கிரிக்கெட
இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் சகீப் அல் ஹசன் விலக தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கை அணியுடன் அடுத்த மாத முற்பகுதியில் ஆரம்பமாகவுள்ள மூவகை கிரிக்கெட் தொடர்களில் இருந்து சகீப் அல் ஹசன் விலகியுள்ளார். சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 4ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தில் முதற்கட்
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதேபோல, 3ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய கேஎல் ராகுல் முழு உடற்தகுதியை எட்டாத நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் அவர் விலகியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. எனினும், அடுத்த இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2 – 1 என்ற அளவில
தனிப்பட்ட காரணங்களினால் இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் ஹெரி ப்ரூக் விலகியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 25ஆம் திகதி ஹைதராபாத்தில் ஆரம்பமாகவுள்ளது. மேலும் இத்தொடர் உலக டெஸ்ட் சம்பியஷிப் தொடரின் முக்கிய அங்கமாக இருக்கும் என்பதால் இத்தொடரின் மீதான எதிபார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக ஹேமந்த தேவப்பிரிய தொடர்ந்தும் செயற்படுவார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ஹேமந்த தேவப்பிரியவின் ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளதுடன், இவரின் தலைமையின் கீழ் முன்னாள் வீராங்கனைகளான ரசஞ்சலி அல்விஸ், ஸ்ரீபாலி வீரகொடி மற்றும் திலகா குணரத்ன ஆகியோர் தேர்வுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பொலன்னறுவை மாவட்ட மாணவர்களுக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்களின் உதவி புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்வுக்குழு தங்களுடைய முதல் பணியாக எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள
This is probably the only original offering in Tamil for the season and it’s by a name that’s slowly garnering attention – Dilan Lamb. He’s got freshers Jerby Israel & Jerushan Amos on the single too. Source
இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படுகின்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தையும் வெள்ளிக்கிழமை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படுகின்ற பிரதான கழகங்களுக்கிடையிலான மூன்று நாட்கள் கொண்ட போட்டித் தொடரில் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்வதற்கு விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதி கிடைக்காததையடுத்து, குறித்த போட்டித் தொடரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது. எவ்வாறாயினும், பிரதான கழகங்களுக்கிடையிலான
பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ காயம் காரணமாக ஆசிய கிண்ணத் தொடரிலிருந்து விலகியுள்ளார். ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், பாகிஸ்தான் – பங்களாதேஷ் அணிகள் இடையிலான மோதலுடன் புதன்கிழமை சுபர் 4 சுற்று ஆரம்பமாகியது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பங்களாதேஷ் அணிக்காக சதமடித்து அந்த அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்த நஜ்முல் ஹொசைன் ச
மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் புதன்கிழமை (30) ஆரம்பமாகியுள்ள நிலையில், இந்த தொடரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இணைந்து நடத்துகின்றன. இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ICC ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு முன்பாக நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர், உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் ஆசிய அணிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடராக அமையவுள்ளது. 1984ஆம் ஆண்டு 3 அணிகள் மட்டுமே விளையாடிய ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 1986ஆம் ஆண்டு பங்களாதேஷ் ...
LPL கிரிக்கெட் தொடரில் இன்று மாலை (12) நடைபெற்ற ஜப்னா கிங்ஸ் – பி-லவ் கண்டி அணிகளுக்கு இடையிலான பரபரப்பான போட்டியில் பி-லவ் கண்டி அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் பி-லவ் கண்டி அணி தங்களுடைய 4ஆவது வெற்றியை பதிவுசெய்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து பிளே-ஓப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. மறுபுறத்தில் ஜப்னா கிங்ஸ் அணி இம்முறை போட்டிகளில் தமது 4ஆவது தோல்வியை சந்தித்து புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்து பிளே-ஆப் வாய்ப்பை மேலும் ...
After a hot minute Stefan Packianathan is back with this all new collaboration that features Krishan J (lyricist). Laid back and packed with some amazing feels, this one is made for those romantic Tamil music playlists. Source
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் பிரதான உள்ளூர் கிரிக்கெட் கழகங்களுக்காக ஏற்பாடு செய்திருக்கும் மேஜர் லீக் T20 தொடரில் நேற்று (05) இரண்டு போட்டிகள் நிறைவடைந்தன. இதில் கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம், பதுரெலிய அணியினை எதிர் கொண்டது. மழையின் காரணமாக இந்தப் போட்டி அணிக்கு 11 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக மட்டுப்படுத்தப்பட்டதோடு, இப்போட்டியில் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகமானது 7 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருந்தது. குருநாகல் அணியின
எதிர்வரும் ஜூலை மாதம் ஒருநாள் கிரிக்கெட் தொடரொன்றை நடத்துவதற்கான இலங்கையின் யோசனையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நிராகரித்துள்ளது. இந்த ஆண்டு ஆசிய கிண்ணத் தொடரை நடத்துவதற்கு இலங்கை முன்வந்த காரணத்தால் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கையை அந்நாட்டு கிரிக்கெட் சபை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள 2023-2025 பருவகாலத்துக்கான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் கீழ் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணி இலங்கை வரவுள்ளதுடன், அதன் போது ஒருநாள் உலகக் கிண்ண
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வுபெற போவதாக அறிவித்துள்ளார். இதன்படி, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய சுற்றுப் பயணத்தின்போது மோசமான போர்மில் விளையாடிய டேவிட் வோர்னர், மூன்று இன்னிங்ஸ்களில் வெறும் 26 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். அதன்பிறகு, இந்தியாவில் நடைபெற்ற IPL தொடரில் பங்கேற்றார். இந்த ஆண்டு IPL சீ
ஓய்வு குறித்து முடிவு செய்ய இன்னும் 8-9 மாதங்கள் கால அவகாசம் இருப்பதாக சென்னை சுபர் கிங்ஸ் அணியின் தலைவர் எம்எஸ் டோனி தெரிவித்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரின் பிளே ஒப் சுற்றில் நேற்று முன்தினம் (23) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது தகுதிகாண் சுற்று ஆட்டத்தில் சென்னை சுபர் கிங்ஸ் அணி, நடப்பு சம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 10ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது அதுமட்டுமல்லாமல் குஜராத் அணியை முதன்முறையாக ...
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் விராட் கோஹ்லி படைத்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற கடைசி லீக் பேட்டியில் 61 பந்துகளில் 101 ஓட்டங்களைக் குவித்து விராட் கோஹ்லி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது IPL போட்டிகளில் விராட் கோஹ்லி அடித்த 7ஆவது சதமாகும். இதன்மூலம் IPL போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயிலை பின்தள்ளி விராட் கோஹ்லி முதலிடத்தைப் ...
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்கு எதிரான போட்டியின் போது தொடைப் பகுதியில் காயத்துக்குள்ளாகிய லக்னோ சுபர் ஜயண்ட்ஸ் அணியின் தலைவர் கேஎல் ராகுல், IPL தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். மேலும், ஜுன் மாதம் அவுஸ்திரேலியா அணியுடன் நடைபெறவுள்ள ICC இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியிலிருந்தும் அவர் விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. IPL தொடரில் கடந்த முதலாம் திகதி நடைபெற்ற 43ஆவது லீக் போட்டியில் லக்னோ சுபர் ஜயண்ட்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. குறைந்தபட்ச ஓட்ட எண்ண
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிராக நேற்று (04) நடைபெற்ற விறுவிறுப்பாபான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. IPL தொடரில் நேற்று நடைபெற்ற 47ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதாராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீர
இந்தியாவில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், 17ஆவது லீக் போட்டி முதல் 24ஆவது லீக் போட்டி வரை நடைபெற்ற முக்கிய சாதனைகள் உள்ளிட்ட தருணங்கள் மற்றும் இலங்கை வீரர்கள் வெளிப்படுத்;திய திறமைகள் குறித்த விசேட தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம். The post WATCH – IPL தொடரில் கலக்க தொடங்கியிருக்கும் இலங்கை வீரர்கள்! | 2023 IPL Roundup-03 appeared first on ThePapare.com. ...
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான விராட் கோஹ்லி 186 ஓட்டங்கள் விளாசி அசத்தினார். இரட்டைச் சதமடிக்கின்ற வாய்ப்பை அவர் தவறவிட்டாலும், அவரது அந்த இமாலய இன்னிங்ஸ் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸுக்காக 571 ஓட்டங்களைக் குவித்தது. உடல்நலக்குறைவையும் மீறி விராட் கோஹ்லி சிறப்பாக விளையாடியதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையில் அகமதாபாத்தில் நடைபெற்ற 4ஆவதும், கடைசியுமான டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவு