Sunday 15 October 2023

`பால்வண்ணம்’ சிறுகதைத்தொகுப்பு அறிமுகம்


எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் அவர்கள் எழுதிய 'பால்வண்ணம்' சிறுகதைத் தொகுப்பானது 2023.10.22 அன்று பிற்பகல் 03.00 மணிக்கு நமது வவுனியா நகரசபைப் பொது நூலக கேட்போர்கூடத்தில் அறிமுக நிகழ்வாக இடம்பெறவுள்ளது. இலக்கிய விரும்பிகளை அன்போடு அழைக்கிறோம்.
சென்றிடுவீர் எட்டுத்திக்கும்,எங்கே போகிறோம்,மெல்பேர்ண் வெதர்,கார்காலம்,ஏன் பெண்ணென்று,வளர் காதல் இன்பம் ஆகியன இவரது பிற நூல்களாகும். தொடர்ந்து இலக்கியங்களோடு செயற்பட்டுவரும் இவரது எழுத்துகளின் வாசனையை நுகர்ந்துகொள்ள நமது எழுத்தாளர்கள் பற்றி அறிந்துகொள்ள வாருங்கள்.

புத்கங்களோடு இயங்குதலொன்றையே பெருங்கனவாகக்கொண்டு இயங்கிவரும் பண்டாரவன்னியன் புத்தகசாலையின் ஒன்பதாவது நூல் அறிமுகமும் உரையாடலும் நிகழ்வுக்கு அனைவரும் வாருங்கள். திரையரங்கு செல்கையில் பிள்ளைகளை எவ்வாறு ஆர்வமாகவும் சந்தோசமாகவும் அழைத்துச் செல்கின்றீர்களோ அதுபோல இவ்வாறான நிகழ்வுகளுக்கும் உங்கள் பிள்ளைகளை அழைத்து வாருங்கள்.
சிந்திப்பவர்கள் சிறப்படைவார்கள். வாங்க மக்கா!

பண்டாரவன்னியன் புத்தகசாலை / 0772244616

No comments:

Post a Comment