Monday 21 August 2023

இராம.செ.சுப்பையா நினைவு சிறுகதை போட்டி முடிவுகள்


இதனால் சகலமானவர்க்கும் அறிவிப்பது யாதெனில்..********************************************************************

என் தம்பியும் துபாயில் வசிக்கும் எழுத்தாளருமான தேவா சுப்பையா , தமது தகப்பனாரின் நினைவில் இராம செ.சுப்பையா நினைவு அறக்கட்டளை என்று தொடங்கி எனது கருமாண்டி ஜங்ஷன் யூ டியூப் சேனல் ஒருங்கிணைப்பில் கடந்த வருடம் ஒரு சிறுகதை போட்டி நடத்தி 60,000 ரூபாய் பரிசு தந்தார். கதைகளை சுவடு பதிப்பகம் மூலம் நூலாக கொண்டுவந்தார்.விழாவும் நடந்தேறியது .அறிவீர்கள்.

இந்த ஆண்டும் இராம.செ.சுப்பையா நினைவு சிறுகதை போட்டி அறிவித்தோம். சரியாக..264 சிறுகதைகள் வந்து சேர்ந்தது. மூன்று நடுவர்களாக அனுபவம் மிக்க ..எழுத்தாளர் சுப்ரபாலன் அவர்களும் எழுத்தாளர் ரிஷபன் அவர்களும் எழுத்தாளர் கணேஷ்பாலா அவர்களும் பொறுப்பேற்று முதல் கட்ட தேர்வாக ஒவ்வொருவரும் பத்து கதைகளை தேர்வு செய்து தந்தனர்.

ஆக 30 கதைகளிலிருந்து அறிவித்தபடி பத்து கதைகளை தேர்வு செய்தோம் ஆனால் சில கதைகளை விட முடியாத படி அமைந்ததால் இன்னும் இருவர்க்கு பரிசு கொடுக்க தீர்மானித்தோம்

அதன் படி அமிர்தம் சூர்யாவாகிய நானும் அறக்கட்டளை நிறுவனர் தேவா சுப்பையாவும் சுவடு பதிப்பக நல்லு ஆர் லிங்கமும் 12 சிறந்த சிறுகதைகளை தேர்வு செய்தோம்.

12 எழுத்தாளர்களும் அவர்களின் சிறுகதை தலைப்புக்களும்
***********************************************************************
1-சேது – பெண்டுளம்
2-வானவன் - யப்பா
3-நெய்வேலி பாரதிகுமார்- 44
4-சாரா – பய
5-விஜி முருகநாதன் – முத்து பெரிப்பா
6-பிரபாதேவி – முள் முத்தம்
7-டேனியல் ராஜா –மூன்றாம் நாள் உயித்தெழும் விதை
8-கே.எஸ் சுதாகர் – வளரி
9-பாலஜோதி – அரிமாச்சி
10-சுப்ரா – காரண காரியங்கள்
11-லதானந்த் – கிரால்
12-இரா. சாரதி – பொது வழிச் சாலை

நல்லு ஆர் லிங்கம் தமது சுவடு பதிப்பகம் மூலம் சிறந்த முறையில் நூலாக அச்சிட்டு தருவார்.

தேவா சுப்பையா தமது அறக்கட்டளை ,மூலம் சென்னையில் டிசம்பர் முதல் வாரம் சிறந்த ஆளுமைகளை கொண்டு விழா நடத்தி வெளியிடுவார்.

அதில் வெற்றிப்பெற்ற எழுத்தாளர்கள் கெளரவிக்கப்படுவார்கள்.

வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் பத்து நாள்களுக்குள் ஜி பே மூலம் பரிசு தொகை 5000 ரூபாய் அனுப்பி வைக்கப்படும்

இப்படிக்கு….
இராம செ. சுப்பையா நினைவு அறக்கட்டளை சார்பாக ஒருங்கிணைப்பாளர் ..அமிர்தம் சூர்யா

No comments:

Post a Comment