IPL தொடரிலிருந்து ஓய்வுபெறுகிறார் அம்பத்தி ராயுடு

131

சென்னை சுபர் கிங்ஸ் அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர் அம்பத்தி ராயுடு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரிலிருந்து ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

IPL தொடரின் இறுதிப் போட்டியில் இன்றைய தினம் (29) சென்னை சுபர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அஹமதாபத்தில் மோதவுள்ளன. இந்தப் போட்டியுடன் அம்பத்தி ராயுடு IPL தொடரிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவுசெய்துள்ளார்.

தென்னாபிரிக்காவிற்கு எதிரான இலங்கை A குழாம் அறிவிப்பு

மும்பை மற்றும் சென்னை என்ற இரண்டு மிகச்சிறந்த அணிகள். 14 பருவகாலங்களில் 204 போட்டிகளில் விளையாடியுள்ளேன். 11 பிளேஓஃப், 8 இறுதிப் போட்டிகள் மற்றும் 5 கிண்ணங்கள் கிடைத்துள்ளன. இது ஒரு நல்ல பயணமாக அமைந்திருந்தது. இந்த இறுதிப் போட்டி IPL தொடரில் என்னுடைய இறுதிப் போட்டி. நான் உண்மையில் இந்த சிறந்த தொடரில் விளையாடி மகிழ்ச்சியடைந்துள்ளேன். அனைவருக்கும் நன்றி. மீண்டும் ஓய்விலிருந்து திரும்ப மாட்டேன்என பதிவிட்டுள்ளார்.

அம்பத்தி ராயுடு தன்னுடைய IPL பயணத்தை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஆரம்பித்ததுடன், சென்னை சுபர் கிங்ஸ் அணியுடன் நிறைவுசெய்யவுள்ளார். கடந்த வருடம் ஓய்வை அறிவித்திருந்த போதும் சென்னை நிர்வாகத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் மீண்டும் விளையாடினார்.

இவர் மொத்தமாக 200 இற்கும் அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் ஒரு சதம் அடங்கலாக 4000 இற்கும் அதிகமான ஓட்டங்களை குவித்துள்ளார். இவருடைய சிறந்த பருவகாலமாக 2018ஆம் ஆண்டு 602 ஓட்டங்களை குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<