Sunday 19 April 2020

தொழில்நுட்பம் கடத்தப்போகும் புரட்டுக்கள் - கங்காருப் பாய்ச்சல்கள் (31)


முந்தைய காலங்களில் எழுதப்பட்ட (சங்ககாலம் உட்பட) படைப்புகளில் `சிலவற்றை’ கறையான்கள் செல்லரித்தும், கவனிப்பாரற்றுத் தொலைந்தும் போய்விட்டதாக அறிகின்றோம் அல்லவா? உண்மையில் அவை தொலைந்துதான் போயினவா? வேண்டுமென்றே திட்டமிட்டு அழித்தும் தீயிலிட்டுக் கொழுத்தியும் இருக்கலாம் அல்லவா?

ஏனென்றால்

இக்காலத்திலும் பொய்யும் புரட்டும் புரளியும் இட்டுக்கட்டியும் படைப்புகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. தமது அமைப்புக்குச் சார்பாகவும், மற்றவர்களை மறுத்து ஒதுக்கியும் எழுதுகின்றார்கள். எழுதியவர்களுக்கு வேண்டப்பட்ட ஒரு சிலர் அவற்றை ஓகோவென்று புகழ்ந்தவண்ணமும் உள்ளனர். துர் அதிஸ்டவசமாக தொழில்நுட்ப வசதிகள் இருப்பதால் அவை காலம் கடந்தும் நிற்கப் போகின்றன. ஒரு நீண்ட காலத்தின் பின்னர், வரும் சந்ததியினர், எது சரி பிழை எனத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கப் போகின்றார்கள்.

சிலர் புனைவுகள் என்றவுடன் எதையும் எப்படியும் எழுதிவிடலாம் என நினைக்கின்றார்கள். தகவல் பிழைகள், தவறான செய்திகள், தொழில்நுட்ப பிழைகள் தலைகாட்டுகின்றன. புனைவிற்கும் ஒரு வரையறை உண்டு. புனைவுகளில் வரும் தரவுகள் சரியாக இருக்கவேண்டும்.
இப்போது சொல்லுங்கள் – நான் மேற்சொன்ன `சிலவற்றை’ என்பது அக்காலத்தில் வந்த பொய்யும் புரளியும் தகவல் பிழை சார்ந்த படைப்புகளுமாக இருந்திருக்கலாம் அல்லவா? அப்போது அவற்றைக் கூட்டித்தள்ளி எரித்திருக்கலாம் அல்லவா?


No comments:

Post a Comment