அமைதியைத் தத்தெடுத்து
ஆதரிக்கிறது இரவு.
மூடப்படாத இமைகளோடு,
பின்னிரவில்..
தனிமையாய் நான்.
இனிமையான இரவில்,
இதமாய் ஓர் ராகம்
தூரத்திலிருந்து,
என்னை தொட்டுச் செல்கிறது.
காற்றுக்கு வசப்பட்ட அவ்விசை,
என் காதுக்கு வந்து போகும் நேரம்...
என் மூளையில் புதைந்த
உன் நினைவோடு முட்டிச் செல்கிறது.
என்றோ தொலைத்த உன்னை
இன்று அருகாமையில் தேடுகிறது,
என் இதயம்.
என்னை மோதும் மழைச் சாரலாய்,
என்னை அணைக்கும் குளிர்த் தென்றலாய்,
என்னை வருடும் இதமான இசையாய்,
இன்றும் என்னுள் வசிப்பவள் நீதான்.
அழ நினைக்கும் கண்களிடம்
இதயம் சொல்கிறது.
"வேண்டாம் கண்ணீராய்
கரைத்துவிடாதே.
எனக்கு வேண்டும்,
என்றும் அவள் நினைவு...
நான் ஓய்வின்றி இயங்க."
No comments:
Post a Comment