September 18, 2011

வந்தான் வென்றான்


நேற்று முதல் உலகமெங்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், வியாழக்கிழமை இரவே திரையிடப்பட்ட விசேட காட்சிக்கு அழைப்புக் கிடைத்தும் களைப்போ, அலுப்போ போக விரும்பவில்லை.
நேற்று இரவுக் காட்சிக்கு அருகில் உள்ள ஈரோஸ் திரையரங்குக்கு வருமாறும் அழைப்பு வந்தது.
ஆனால் கொட்டாஞ்சேனையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள சினி வேர்ல்ட் உரிமையாளர் எனது நேயர் என்பதால் அவரது அழைப்பைத் தட்ட முடியவில்லை.

முன்னைய செல்லமகால் திரையரங்கு இருந்த இடத்துக்கு முன்னால் ஒடுங்கிய ஒரு கட்டடமாக ஆனால் ஏழு அடுக்கு மாடியாக உயர்ந்து நிற்கிறது இந்தப் புதிய Multiplex. மூன்று வெவ்வேறு திரையரங்குகள்.
சொகுசான இருக்கைகளும், குளிரான ஏசியும், நேர்த்தியான திரையும் மட்டுமல்ல.. இந்த சினி வேர்ல்டில் ஸ்பெஷல் அருமையான ஒலித்தெளிவு.. Digital Dolby sound system கலக்குகிறது.



ரௌத்திரத்துக்குப் பிறகு வருகிறது என்பதால் கொஞ்சம் சுமாராக இருந்தாலும் பரவாயில்லை என்பதே ஒரு எதிர்பார்ப்பாக இருந்தது.
கதாநாயகி டாப்சி என்பது பார்க்க முதலே கடுப்பாக்கி இருந்தது.. (பார்த்த பிறகு ஏற்பட்ட கடும் கடுப்புக்கு என்ன பெயர் வைப்பதென்று நான் இன்னும் முடிவு செய்யலைங்கோ)
தமனின் இசையில் மனம் கவர்ந்த பாடல்களும், இதற்கு முந்தைய தன் இரு படங்களிலும் (ஜெயம் கொண்டான், கண்டேன் காதல் ) இவரிடம் கொஞ்சமாவது எதோ விஷயம் இருக்கு என்று எதிர்பார்க்க வைத்த இயக்குனர் கண்ணனும் 'வந்தான் வென்றான்' பார்க்கக் கூடியதாக இருக்குமென்று எண்ண வைத்தது.

சகோதர பாசத்தின் மீது தாதாயிசமும் காதலும் மோதலும் சேர்த்துக் கலக்கப்பட்ட கதை. (மீதிக் கதைய படம் பார்த்தே அறிக)
தாதா என்று சொன்னால் மும்பாயும், மும்பாய் என்று தமிழ்ப் படங்களில் வந்தால் கொஞ்சம் ஹிந்தியும் நிறையத் தமிழும் பேசும் இடம் என்றும் காட்டுவது தமிழ் சினிமா ஆச்சே.இங்கேயும் அவ்வாறே.

ஈரம் படத்தில் வில்லனாகக் காட்டப்பட்ட பிறகு, அட இனி ஒரு வித்தியாச வலம் வருவார் என்று எதிர்பார்த்துக் காணாமல் போயிருந்த நந்தா கொஞ்சம் கலக்குகிறார்.
ஆனால் தாதாவுக்கான மிரட்டல் மிதப்பைத் தாண்டி ஒரு மென்மையான அழகு தெரிகிறது.

டாப்சி - கருமம். இதையெல்லாம் அழகு என்று சொல்லிக் கொண்டாடும் கூட்டத்தைக் கண்டால் கடுப்பாகிறது. மிதந்த பல்லும், மூன்றரை கிலோமீட்டர் நீண்ட மூக்கும், அவிச்ச ரால் மாதிரி ஒரு கலரும், எந்த நேரமும் இளிச்ச வாய் மாதிரி ஒரு கிழிந்துபோன உதடும் திரையில் இந்த வெள்ளைப் பிசாசு தோன்றும்போதெல்லாம் எரிச்சல் ஏற்படுகிறது.
பாவம் ஜீவா.

வெள்ளாவி வச்சு வெளுத்ததெல்லாம் சரி.. ஆனால் ஓவர் வெளுப்பு.
அதிலும் 'காக்க காக்கவில்' ஜோதிகாவுக்கு 'ஒரு ஊரில் அழகே உருவாய்' பாடல் போல இந்த வெள்ளைப் பிசாசுக்கும் ஒரு பாடல்.. இதையெல்லாம் கேட்க யாருமே இல்லையா?

சந்தானம் - கண்டேன் படம் போலவே இங்கேயும் இந்தக் குருவி தான் பனங்காயை என்ன, பனை மரத்தையே தாங்குகிறது. சிரிக்க வைப்பதுடன் படத்தில் திருப்பம் ஏற்படுத்தவும் பயன்படுகிறார்.
டிரேயிலரைப் பார்த்து படம் நல்லா இருக்கும் என்று நம்பிட்டீங்களா என்று ஆரம்பத்தில் அவர் சொல்லும்போதே கொஞ்சம் அலெர்ட் ஆயிருக்கலாம்.
சந்தானம் தான் படத்தின் ஹீரோ என்று சொன்னாலும் நல்லாவே இருக்கும்.

ஜீவா - பாவம். நம்பி நடித்திருப்பார். ஆனால் எதுவுமே இல்லையே. பாடல்கள், கொஞ்சம் காதல் காட்சிகள், ஒரு சில அக்ஷன் காட்சிகள் மட்டும் போதுமா? கோ தந்த வெற்றியைக் கோட்டை விட்டிருக்கிறார் அடுத்து வந்த இரு படங்களிலும்..

நந்தாவுடன் மோதும் காட்சிகள் ரசிக்கக் கூடியவை.
கேரளா காட்சிகள் + குத்துச் சண்டைப் பயிற்றுவிப்பாளராக வரும் ஜோன் விஜயுடன் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கக் கூடியவை.
ஆனால் கதாநாயகன் புத்தி சாதுரியத்துடன் எதிரியைக் கட்டம் கட்டி மடக்குவதை இதை விட ரசனையாக வேறு இயக்குனர்கள் காட்டிவிட்டதால் இயக்குனர் மீது மட்டுமல்லாமல், ஜீவா மீதும் கடுப்பாகிறது.

அழகம்பெருமாள், ரகுமான்(இன்னும் அப்படியே இருக்கிறாரே.. எப்படி?), நிழல்கள் ரவி போன்றோருக்கெல்லாம் சிறிய வேடங்கள்.

கண்ணன் இன்னும் தான் முதல் இரு படங்களில் விட்ட தவறுகளைத் திருத்தவில்லை.

ஜெயம் கொண்டான், கண்டேன் காதல் இரண்டிலும் ரசனையான பெயர்கள், ரசிக்கத் தக்க கதையோட்டம், திடீர் திருப்பங்கள் என்றிருந்தபோதும், சொல்லிய விதம், வேகம் போன்றவற்றில் விட்ட குளறுபடிகள் காரணமாக சொதப்பி இருந்தன.

Flashback, கற்பனை, மாற்றாந்தாய் / தகப்பன் சகோதரப் போராட்டம், எதிர்பாராத திருப்பங்கள் (என்று இயக்குனர் நம்புகின்ற விஷயங்கள்) அனைத்தையும் நேர்த்தியாக வைத்து நல்லபடியாகத் தராமல் மூன்றாவது தடவையாகக் குழம்பி இருக்கிறார்.
கண்ணனின் காதல் Flashback மீது தானோ? வந்தான் வென்றானிலும் நிறைந்தே இருக்கிறது.



பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனங்கள் நச் என்று இருக்கின்றன. சில இடங்களில் கொஞ்சம் ஓவரோ என்றும் தோன்றுகின்றன..
காதல் பற்றி எதிர்மறையாக டாப்சியும், காதலின் மகத்துவம் பற்றி ஜீவாவும் சொல்லும் இடங்கள் ஒலிப்பதிவின் குளுமையோடும் சேர்ந்து அழகாயிருக்கின்றன.

ஒளிப்பதிவு: பி.ஜி முத்தையா. கேரளாக் காட்சிகளும், மும்பையின் சில முக்கியமான இடங்களையும் அழகாக காட்டுகிறார்.
பாடல் காட்சிகளில் முடியுமானளவு முயன்றிருக்கிறார்.
காட்சிகள் அழகாயிருந்து என்ன பயன்?
டாப்சியும், பொருத்தமற்ற இடங்களும் சேர்ந்து கேட்கையில் ரசித்த பாடல்களைக் கொத்தி ரணமாக்குகின்றன.

அதிலும் வரிகளுக்காக ரசித்த 'முடிவில்லா மழையோடு' படத்தில் தேவையே அற்ற இடத்தில் வந்து செத்துப் போகிறது.

ஆரம்ப கட்ட சகோதர மோதல்கள் வந்தபோதே இடைவேளையின் போது கதை புரிந்துவிடுகிறதே..
அதற்கும் பிறகு சில இழுவைகளா? சப்பா..
அதிலும் ஒரு பரபர, பயங்கர (!) தாதா யாரோ ஒருவனின் காதல் flashbackஐப் பொறுமையாக இருந்து கேட்கிறாராம்.
ஹய்யோ..
கேரளாவில் பஸ் பயணத்தில் கதாநாயகனின் மடியில் அவரைக் காதலிக்க ஆரம்பிக்காத நாயகியாம்.. இவருக்குப் பாட்டு..
ஹய்யோ 2

இப்படி நிறையக் கண்ணைக் கட்டும் காட்சிகள் நிறைந்த கலர்புல் திரைப்படம்..
கண்ணன் வாழ்க.

சந்தானத்தால் கொஞ்சம் தப்பிச்சுது...

வந்தான் வென்றான் - வழுக்கி விழுந்தான் 


16 comments:

M (Real Santhanam Fanz) said...

தலைவர் பற்றி உண்மையாகவும் நேர்மையாகவும் எழுதியதற்கு நன்றி. நேரம் கிடைக்கும் போது தலைவருக்காக பார்க்கிறோம்.

K.s.s.Rajh said...

///டாப்சி - கருமம். இதையெல்லாம் அழகு என்று சொல்லிக் கொண்டாடும் கூட்டத்தைக் கண்டால் கடுப்பாகிறது. மிதந்த பல்லும், மூன்றரை கிலோமீட்டர் நீண்ட மூக்கும், அவிச்ச ரால் மாதிரி ஒரு கலரும், எந்த நேரமும் இளிச்ச வாய் மாதிரி ஒரு கிழிந்துபோன உதடும் திரையில் இந்த வெள்ளைப் பிசாசு தோன்றும்போதெல்லாம் எரிச்சல் ஏற்படுகிறது.///
சரியாச்சொன்னீங்க அண்ணே.........இந்த பொண்ணை எல்லாம் அழகுனு ஒரு குரூப் சொல்லித்திரியுது.........அப்பறம் விமர்சணம் சூப்பர்.

Anonymous said...

மொக்கை தான் படம் உங்க ரீவிவ் சூப்பர்

அம்பாளடியாள் said...

அருமையா விமர்சனம் செய்துள்ளீர்கள் .வாழ்த்துக்கள் தொடர்ந்தும் கலக்குங்க .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .....

அம்பாளடியாள் said...

மூன்று ஓட்டுகளும் போட்டாச்சு சகோ ...

Unknown said...

சந்தானத்தால் தப்பித்தது.
படம் பார்க்க தேவையில்லன்னு நினைக்கிறேன்.

Vidharshanam said...

நம்பிக்கையோட படம் பார்க்க போனால் எஞ்சியது எதோ ஏமாற்றம் மட்டுமே.. படத்தில் முன்னைய படங்களின் தளுவல் தெளிவாக தெரிந்தது .. ஒரு சில காட்சிகளை தவிர...

"டிரேயிலரைப் பார்த்து படம் நல்லா இருக்கும் என்று நம்பிட்டீங்களா என்று ஆரம்பத்தில் அவர் சொல்லும்போதே கொஞ்சம் அலெர்ட் ஆயிருக்கலாம்."
100% உண்மை.......

"டாப்சி - கருமம். இதையெல்லாம் அழகு என்று சொல்லிக் கொண்டாடும் கூட்டத்தைக் கண்டால் கடுப்பாகிறது. மிதந்த பல்லும், மூன்றரை கிலோமீட்டர் நீண்ட மூக்கும், அவிச்ச ரால் மாதிரி ஒரு கலரும், எந்த நேரமும் இளிச்ச வாய் மாதிரி ஒரு கிழிந்துபோன உதடும் திரையில் இந்த வெள்ளைப் பிசாசு தோன்றும்போதெல்லாம் எரிச்சல் ஏற்படுகிறது."
எதோ ஆடுகளத்தில் வெள்ளாவி வச்சு வெளுத்த முகத்துக்கு ஏதோ ஒத்துப்போனாலும் .....இதில் எரிச்சல் தான் வருகிறது.... அதிலும் இடையில் வரும் சில காட்சிகள் மனுசன டென்ஷன் படுத்துது .......

Anjana Mackeen said...

தங்கள் விமர்சனத்தின் ஆரம்ப பகுதி ரசிக்கத்தக்கது.அனைத்து நடிகர்களினதும் திறமை / திறன் குறைவு பற்றி எடுத்துக்காட்டி இருந்தும் , கதாநாயகி விடயத்தில் மட்டும் அவர் புற அழகை/ அழகின்மையை மட்டும், அதுவும் சற்று காரமான வார்த்தைகளால் ( அவிச்ச ரால் மாதிரி ஒரு கலரும், எந்த நேரமும் இளிச்ச வாய் மாதிரி ஒரு கிழிந்துபோன உதடும்) தாக்கியிருப்பது, தங்கள் விமர்சனத்தின் தரத்தை குறைக்க முற்படுகிறது.
Its reducing your professionalism is my humble opinion.There were and are so many actors who looked externally bad but delivered excellent acting. So it would have been more effective if you had commented on the actress' ability to act rather than her outer beauty. but u are doing a good job and keep up the good work in your blog. All the best!

கார்த்தி said...

சார் படத்தை சரியா எதிர்பாத்து நொந்து போயிருக்கிறாக்களில நான் முதலில நிப்பன். ஜெயம் கொண்டான் கமர்ஷியலா வெல்லாவிட்டாலும் இவரது றீமேக் படமான கண்டேன் காலை நல்ல வெற்றி பெற்றது.
எனது பார்வையும் உங்கள் பார்வையும் அப்படியே ஒத்துப்போகிறது

Vidharshanam said...

தொடர்ச்சி ......
காதல் என்பது காலில் 500 KG எடையை கட்டிக்கொண்டு நடக்குற மாதிரி....
மற்றும் சில தப்சி சொல்லும் வசனங்கள் அனுபவபட்டவர்களுக்கு
ரசிக்கக்குடியதாக இருந்தது...

சந்தானம் சிறப்பாக தன் பங்குக்கு மேல் அசத்தியிருக்கிறார்..... அடுத்த வடிவேல் வந்துடாய்யா..வந்துடா....
தொடர்ந்தும் கலக்குவார்.....

சில பாடல்கள் சிறப்பாக அமைத்திருந்தன... அஞ்சனா....காஞ்சனமாலா..

ஜீவா சிறப்பாக வந்தார்.....வென்றாரா??


CINEWORLD திரைஅரங்கம்.....
நானும் முதல் முறையாக போயிருந்தேன்....208 பேர் அமரக்கூடிய அளவான நல்ல வசதியான சொகுசு ஆசனங்கள், திரையிட முதலும் இடைவேளையிலும் ஒலித்த club இசை மற்றும் திரையை நோக்கிய நீல நிற lights என்பன புதிதாகவும் வித்தியாசமானதாகவும் இருந்தது...
DTS ஒலிநயம் சிறப்பாகவே அமைந்திருந்தது (அளவான திரையரங்கம் என்பதாலோ)

அனால் திரையரங்கை சென்றடையும் போதும் முடிந்து வெளியேறும் போதும் எதோ ஸ்ரீபாத மலை ஏறுவது போலிருந்த்தது...என பலரும் முனுமுனுத்தது என் காதுகளையும் எட்டியது நானும் உணர்ந்தேன்(மின்தூக்கி இருந்தும் சனநெரிசளால் பலரும் மாடிப்ப்டிகளையே பயன்படுத்த வேண்டி ஏற்பட்டது )
______________________________
மேலும் உங்கள் விமர்சனம் super படத்தை உண்மையாக பிரதிபலிக்கின்றது.....

Riyas said...

// மிதந்த பல்லும், மூன்றரை கிலோமீட்டர் நீண்ட மூக்கும், அவிச்ச ரால் மாதிரி ஒரு கலரும், எந்த நேரமும் இளிச்ச வாய் மாதிரி ஒரு கிழிந்துபோன உதடும்//

ஒரு ஹீரோயினை இதவிட அழகா வர்ணைகளோட விமர்சிக்க முடியாதுண்ணே..

விமர்சனமும் பலே,,

Akash said...

ஹலோ சார்...? ஒருவரின் நடிப்பை பற்றி என்ன வேண்டுமானாலும் விமர்சனம் வைக்கலாம். அதை விட்டு விட்டு அவரின் தோற்றம் பற்றி குறை சொல்லவது அழகு இல்லை. உங்களுக்கு பிடித்த நடிகரையோ நடிகையை யோ அல்லது உங்களுக்கு பிடித்த மகேல ஜெயவர்த்தன, முரளிதரன் பற்றியோ யாரவது இப்படி சொன்னால் உங்களக்கு எப்படி இருக்கும்?

ம.தி.சுதா said...

////(பார்த்த பிறகு ஏற்பட்ட கடும் கடுப்புக்கு என்ன பெயர் வைப்பதென்று நான் இன்னும் முடிவு செய்யலைங்கோ)////

அந்தளவு அழகவா இருந்தாங்க... நானும பார்த்திட்டு முடிவெடுக்கிறேனே..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

Dts said...

CineWorld la ticket how much ?

”தளிர் சுரேஷ்” said...

யோவ்! பாத்துய்யா! டாப்ஸி ரசிகர்கள் வெளுத்துடப்போறாங்க!

Vithyan said...

Kanjanamala song reminds me the song played for an advertisement for "Navarathna OiL" which Suriya appears..
Vandhan Vendhaan would be a suitable title..

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner