பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் வனிந்து ஹஸரங்க இணைக்கப்பட்டுள்ளார். வனிந்து ஹஸரங்க கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஓய்விலிருந்து திரும்பி மீண்டும் பங்களாதேஷ் தொடருக்கான டெஸ்ட் குழாத்தில் இணைந்துள்ளார். >>ஒரு நாள் தொடரினை கைப்பற்றிய பங்களாதேஷ் அணி அதேநேரம், வலதுகை சுழல் பந்துவீச்சாளர் நிசான் பீரிஸ் முதன்முறையாக இலங்கை தேசிய அணியில் இணைக்கப
விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் ஆகியன இணைந்து இவ்வருடம் ஏற்பாடு செய்துள்ள 48ஆவது தேசிய விளையாட்டு விழாவின் முதலாவது நிகழ்ச்சியாக நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் தலவாக்கலையைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஷான் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். நான்கு வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற இம்முறை தேசிய விளையாட்டு விழா நகர்வல ஓட்டப் போட்டியானது நேற்று முன்தினம் (16) நுவரெலியா கோல்வ் புற்தரையில் நடைபெற்றதுடன், நாட்டிலுள்ள 9 மாகாணங்களையும் சேர்ந்த 79 வீரர்க
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி சற்று முன்னர் சட்டோக்ரமில் ஆரம்பமாகியிருக்கின்றது. >>3ஆவது ஒருநாள் போட்டியை தவறவிடும் டில்ஷான் மதுஷங்க?<< போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் இப்போட்டியில் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருக்கின்றார். ஒருநாள் தொடரினை கைப்பற்ற இப்போட்டியில் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்துள்ள இலங்கை அணி உபாதைக்குள்ளான வேகப்பந்துவீச்சாளர் டில்சான் மதுசங்கவிற்குப் பதிலாக
இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி முக்கிய மாற்றம் ஒன்றை மேற்கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி வெற்றியோடு ஒருநாள் தொடரினை சமப்படுத்திய இலங்கை அந்தவகையில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் பிரகாசிக்கத் தவறியிருந்த ஆரம்பத் துடுப்பாட்டவீரரான லிடன் தாஸ் ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டிக்கான பங்களாதேஷ் ஒருநாள் குழாத்தில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றார். லிடன் தாஸ் இலங்கை அணியுடன் நடைபெற்ற இரண்டு
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஆகீப் ஜாவெட் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளரான ஆகிப் ஜாவெட் மே.தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்தின் நிறைவுவரை இலங்கை அணியுடன் இணைந்து செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. >> அதிரடி வெற்றியோடு ஒருநாள் தொடரினை சமப்படுத்திய இலங்கை ஆகிப் ஜாவெட் பாகிஸ்தான் தேசிய அணிக்காக 163 ஒருநாள் மற்றும் 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2
இம்முறை ஐபிஎல் தொடரில் டெல்லி கெப்பிடல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த தென்னாபிரிக்கா அணியின் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி காயம் காரணமாக விலகியதை அடுத்து அவருக்கு மாற்றீடு வீரராக அவுஸ்திரேலியாவின் ஜேக் ஃபிரேசர் மெக்கூர்க்கை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 17ஆவது அத்தியாயம் இ;ம்மாதம் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இம்முறை போட்டித் தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகிறது. இந்த நிலை
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணியானது 3 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. சென்னை சுபர் கிங்ஸ் உடன் இணையும் யாழ்ப்பாண இளம் வேகப்பந்துவீச்சாளர் மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 1-1 என சமநிலைப்படுத்தியிருக்கின்றது. முன்னதாக சட்டோக்ராமில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்த
சர்வதேச கிரிக்கெட் வாரியம் சோதனை முறையில் ஆரம்பித்திருந்த நிறுத்து கடிகார (Stop Clock) விதிமுறையை T20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து அமுல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டு சோதனை நடவடிக்கையாக போட்டிகளின் போது அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் டுபாயில் நடைபெற்ற ஐசிசி சந்திப்பின்போது இந்த விதிமுறை நிரந்தரமாக அமுல்படுத்தப்படும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. >> சென்னை சுபர் கிங்ஸ் உடன் இணையும் யாழ்ப்பாண இளம் வேகப்பந்துவீச்சாளர் அதன்படி ஒ
பாடசாலைகள் கிரிக்கெட் அபிவிருத்தி திட்டத்தின் ஓர் அங்கமாக இலங்கையின் முன்னணி செவிப்புலனற்றோர் பாடசாலைகளில் ஒன்றான இரத்மலானை செவிப்புலனற்றோர் பாடசாலைக்கு வலைப் பயிற்சி மையம் ஒன்றை இலங்கை கிரிக்கெட் சபை அன்பளிப்புச் செய்துள்ளது. குறித்த பாடசாலையின் நிர்வாகத்தினால் முன்வைக்கப்பட்ட விசேட கோரிக்கையை அமைய இந்த வலைப் பயிற்சி மையத்தை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இலங்கை கிரிக்கெட் சபையின் நிதியுதவியுடன் இரத்மலானை செவிப்புலனற்றோர் பாடசாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வலைப் பயிற்சி மைய
நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட T20i தொடரில் விளையாடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 14ம் திகதி பாகிஸ்தானுக்கு புறப்படவுள்ள நியூசிலாந்து அணி முதல் மூன்று போட்டிகளையும் ராவல்பிண்டியில் விளையாடவுள்ளது. செவிப்புலனற்றோருக்கான T20 உலகக் கிண்ணத்தை வென்றது பாகிஸ்தான் முதல் போட்டி ஏப்ரல் 18ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டாவது போட்டி 20ம் திகதியும், மூன்றாவது போட்டி 21ம் திகதியும் நடைபெறவுள்ளன. குறித்த இந்த ம
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாக டெல்லி கெப்பிடல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஹெரி ப்ரூக் அறிவித்துள்ளார். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ஹெரி ப்ரூக், 11 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உட்பட 190 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தார். இதனால் அவரை இம்முறை ஐபிஎல் ஏலத்திற்கு முன்னரே ஹைதராபாத் அணி கழட்டிவிட்டது. இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலத்தில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி அவரை 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ...
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற செவிப்புலனற்றோருக்கான T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை செவிப்புலனற்றோர் அணியை 88 ஓட்டங்களால் வீழ்த்திய பாகிஸ்தான் செவிப்புலனற்றோர் அணி சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது. செவிப்புலனற்ற சர்வதேச கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்திருந்த (Deaf International Cricket Council – DICC) 4ஆவது செவிப்புலனற்றோருக்கான T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் கடந்த 6ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவில் ஆரம்பமானது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், அவுஸ
இலங்கை கிரிக்கெட்டின் ஒத்துழைப்புடன் ஜப்பானில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் கிரிக்கெட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில், இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் ஜப்பான் கிரிக்கெட் சங்கம் (JCA) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன்மூலம், ஜப்பான் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்குத் தேவையான நிபுணத்துவம் மற்றும் ஆதரவை வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இலங்கையில் இருந்து வீரர்கள், அணிக
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி சற்று முன்னர் சட்டோக்ரம் நகரில் ஆரம்பமாகியுள்ளது. >> மார்ஷ் தலைமையில் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் அவுஸ்திரேலிய T20 அணி போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றிருக்கின்றார். இப்போட்டிக்கான இலங்கை குழாம் வேகப்பந்துவீச்சாளரான அசித பெர்னாண்டோவிற்குப் பதிலாக லஹிரு குமாரவிற்கு வாய்ப்பு வழங்கியிருக்கின்றது. இதேவேளை உபாதை காரணமாக பங்களாதே
மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளவிருக்கும் அவுஸ்திரேலியாவின் 14 பேர் அடங்கிய T20 குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த T20 குழாத்தினை வழிநடாத்த சகலதுறை வீரரான மிச்சல் மார்ஷ் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். தற்போது அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியானது தமது சுற்றுப்பயணத்தில் தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகின்றது. இந்த டெஸ்ட் தொடரினை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ள நிலையில் குறிப்பிட்ட தொடரின் பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் பெப
ஐசிசி இன் பெப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், சிறந்த வீராங்கனை விருதை அவுஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்டும் வெற்றி கொண்டுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் பேரவையான ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த நிலையில் பெப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை யார் என்ற பரிந்துரை பட்டியலை ஐசிசி அண்மையில் அறிவித்திருந்தது. இதில் ஆடவர் பரிந்துரை பட்டியலில் இந்திய
பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குசல் மெண்டிஸின் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை ஒருநாள் குழாத்தில் பாரிய மாற்றங்களை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்படுத்தவில்லை. LPL, லங்கா T10 தொடர்களுக்கான புதிய அணிகள் அறிமுகம்! ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் துஷ்மந்த சமீரவுக்கு பதிலாக அசித பெர்னாண்டோ விளையாடி ஒருநாள் போட்டிகளில் கவனத்தை ஈர்த்திருந்தார். எனினும் அவர் உபாதை காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரிலிருந
கணுக்கால் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் ஷமி, ஜுன் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடக்கூடும் என பிசிசிஐ செயலாளார் ஜெய்ஷா கூறியுள்ளார். இதனிடையே, விபத்தில் சிக்கி படுகாயமடைந்து கடந்த ஓராண்டுக்கு கூடுதலாக ஓய்வில் இருந்த இந்திய அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ரிஷப் பாண்ட், இம்முறை ஐப
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரரான விராட் கோலி இந்த ஆண்டு (2024) நடைபெறவிருக்கும் T20 உலகக் கிண்ணத் தொடரில் ஆடுவது சந்தேகம் என சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. LPL, லங்கா T10 தொடர்களுக்கான புதிய அணிகள் அறிமுகம்! ஒன்பதாவது முறையாக T20 உலகக் கிண்ணத் தொடர் இந்த ஆண்டு ஜூன் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரை மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெறவிருக்கின்றது. இந்த உலகக் கிண்ணத் தொடருக்கான எதிர்பார்க்கை அணிகளை மே மாத ...
லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) தொடரில் காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய அணியான கோல் மார்வல்ஸ் அணி தங்களுடைய சின்னம் (logo), ஜேர்சி மற்றும் ஐகோன் வீரரை நேற்றைய தினம் அறிவித்திருந்தது. கோல் மார்வல்ஸ் மற்றும் மொரட்டு மார்வல்ஸ் அணிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (11) கொழும்பில் உள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. Photos – Galle Marvels – Team Launch – LPL 2024 இந்த நிகழ்வின் போது கோல் மார்வல்ஸ் அணியின் சின்னம் மற்றும் ஜேர்சி வெளியிடப்பட்டது. ...