மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளில் எவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகவில்லை என உறுதி செய்யப்ப்பட்டதையடுத்து இரு அணிகளுக்குமிடையிலான கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என கிரிக்கெட் சபை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. கடந்த பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி இலங்கை அணி வீரர் லஹிரு திரிமான்ன, பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இம்மாதம் 18ஆம் திகதி முதல் ஆரம்பமாகவிருந்த இலங்கைக் கிர
“முதலாவது அழைப்பிதழை யாருக்குக் குடுக்கலாம்?” மனைவியிடம் ஆலோசனை கேட்டான் அகமுகிலன். “உங்களுக்குப் பிடிச்ச பேராசிரியர் சிவராசாவுக்குக் குடுங்கோவன்.” அதுவே சரியெனப்பட்டது அகமுகிலனுக்கு. மாலை நான்கு மணியளவில் சிவராசாவைச் சந்திப்பதற்காக நகரத்துக்கு பஸ் ஏறினான் அகமுகிலன். நகரத்தில் பல்கலைக்கழகத்திற்கு அண்மையாக சிவராசா இருக்கின்றார். அவரது வீடு நோக்கிப் போய்க் கொண்டிருக்கும்போது, எதிர்ப்புறமாக சிவராசாவும் மனைவியும் வந்து கொண்டிருந்தார்கள். வேட்டி நாஷனலுடன் பேராசிரியர் ஜோராக இருந்தார். மனைவி காஞ்சிபுரப்பட்டு, தலை
மு.பொன்னம்பலம் சிவத்தம்பி தமக்குள்ளேயே சிரித்துக்கொண்டார். அதுவெறும் சிரிப்பல்ல, வெற்றிப்புன்னகை. வெற்றியென்றால் ஏதோ அபாரமான நற்செயலையோ அல்லது சதித்திட்டத்தையோ அமுல் நடத்தி வெற்றி பெற்று விட்டார் என்பதல்ல அர்த்தம். நினைவில் முளைத்ததை இப்போதான் செயலில் நடத்த அவர் திடங்கொண்டுள்ளார். அதாவது தாம் நினைத்ததைச் செய்வதற்கு உள்ளத்தைத் தயார்படுத்தி வெற்றி கொண்டுவிட்டார். அதனால் தான் அவர் முகத்திலே சிந்தனைக் கிறுக்கல்கள் மறைந்து, மகிழ்ச்சியின் முறுவல் மலர்ந்தது. இத்தனைக்கும் அவர் எண்ணத்திலே எழுந்த திட்டம்தான் என்னவோ?
நவம் (சீனித்தம்பி ஆறுமுகம்) இரவு சரியாக எட்டு மணி, கொழும்பு, கோட்டைப் புகையிரத நிலையத்தின் முதலாவது `பிளாட் பாரத்'தை அநாயாசமாக உதறி எறிந்து விட்டு, `ஜம்’மென்று புகையைக் கக்கிக்கொண்டு புறப்பட்டது மட்டக்களப்பு மெயில் வண்டி. வண்டி என்றும் போல் அன்றும் பொங்கி வழிந்தது. இந்த அம்பாறை நீர்ப்பாசன `இராட்சத அணைத் திட்டம்’ மட்டக்களப்புக்கு வந்தாலும் வந்தது மட்டக்களப்பு மெயிலின் நிலையே ஒரு பூரண கர்ப்பிணியின் நிலைதான். புறப்பட்ட ஐந்து நிமிஷங்களில், கொழும்பு நகரின் அடுத்த பெரிய ஸ்டேஷனான மருதானையை `நொறுக்கி’க் கொண்டு கடந
இளம்பிறை எம்.ஏ.ரஹ்மான் பூத்துச் சொரிகையிலே பூக்கருகிப் போனதுவோ?மாதா செய் தீவினையோமலரமுன்னே போனாயோ...?நீ படுத்துக் கிடந்த அறைப் பக்கமிருந்து ஒப்பாரிக் குரல் கேட்கின்றது. அது உன் அம்மாவின் குரல். துக்கத்திற் கனத்துக் கதறுகின்றது. எது உன் முடிவாக இருக்கக் கூடாது என்று இவ்வளவு நேரமும் பிராத்தித்துக் கொண்டிருந்தேனோ, அதுதான் உன் முடிவா? என் கல்யாணி!"ஏய் கெழவி. இதுங் ஹோஸ்பிட்டல்தெரியுங்தானே! சத்தங் போட வேணாங்."கிழவியை 'நேர்ஸ்' அறைக்கு வெளியே கொண்டு வந்து விடுகிறாள். புழுவாகத் துடித்து, சுவருடன் தலையை மோதிக் கொண்ட
“ஐயா… இதைப்போல ஒரு ஐம்பது, போஸ்ற்கார்டில் எழுதித் தர முடியுமா?” பவ்வியமாக சால்வையை இடுப்பில் ஒடுக்கிப் பிடித்தபடி அகத்தன் நின்று கொண்டிருந்தான். உடம்பின் மேல் வெறுமை படர்ந்திருந்தது. அதிலே கன்றிப்போன காயங்களும், வெய்யில் சுட்டெரித்த தழும்புகளும் இருந்தன. என்னவென்று வாங்கிப் பார்த்தார் உடையார். அது உண்மையில் போஸ்ற்கார்ட்டே அல்ல. அதனளவில் வெட்டப்பட்ட காகித அட்டைகள். அதில், பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ் நிகழும் ரெளத்திரி வருடம், மாசி மாதம் இருபதாம் நாள் நடைபெறவிருக்கும் வள்ளியம்மையின் சாமர்த்திய வீட்டுக்
“நிர்மலன்….. என்ன காணும்…. வந்த நேரம் தொடக்கம் ஒரே யோசனையா இருக்கின்றீர்?” நிர்மலனின் தோளை இறுகப் பற்றி புளியமரக் கொப்பை உலுப்புவது போல உலுப்பிவிட்டுச் சிரித்தார் தவராசா. புளியம்பழங்கள் ஒன்றும் உதிர்ந்து விழவில்லை. மாறாக வெறித்த பார்வையுடன் தவராசாவை உற்று நோக்கினான் நிர்மலன். “நிர்மலன்… குளிச்சுப்போட்டு சாப்பிட வாரும். வெளிக்கிட்ட நேரத்திலையிருந்து நல்ல சாப்பாடும் சாப்பிட்டிருக்கமாட்டீர்” என்றார் தவராசாவின் மனைவி ஈஸ்வரி. நிர்மலன் இலங்கையிலிருந்து ஒன்பது மணி நேரம் வான் பறப்பை மேற்கொண்டு, தனது திருமணத்திற்கா
“மொட்டைமாடி - வீட்டுக்கு இரண்டுபக்கமும் வேணும். கீதா வீட்டிலை இருக்கிற மாதிரி. சசியின்ரை வீடு பாத்தனீங்கள் தானே! வீட்டுமுகப்பு அப்பிடி வேணும். நீங்கள் போன வருஷம் கன்பராவுக்கு ஒரு வீட்டை கூட்டிக்கொண்டு போனனீங்களல்லோ? அவைன்ரை வீட்டுக் கிச்சின் கபினெற்றுகளைப் பாத்தனியள்தானே. எவ்வளவு பெரிய விசாலமான தட்டுகள். வீட்டு ரைல்ஸ் பெரிசா இருந்தாத்தான் நல்லது. வாணி வீட்டு ரைல்ஸ் மாதிரி…” மூச்சுவிடாமல், கிசுகிசு கிசுகிசு என்று ரிஸ்யூ கசங்கினமாதி கணவனுக்கு மாத்திரம் கேட்கும் வண்ணம் பொழிந்து தள்ளினாள் மஞ்சு. அவளுக்குப் பக்க
இலங்கை அரசாங்கத்தின் கொவிட் – 19 விதிமுறைகள் மற்றும் சுய தனிமைப்படுத்தல் வழிமுறைகள் காரணமாக நவம்பர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் (LPL) T20 தொடருக்கான திகதியை மறுசீரமைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இதன்படி, நவம்பர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த லங்கா ப்ரீமியர் லீக் T 20 தொடரானது நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. >> மீண்டும் பிற்போடப்படும் இலங்கை – பங்களாதேஷ் தொடர்! உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்களின் பங
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உள்ளூர் குளிர்பான விநியோக அனுசரணையாளராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற மை கோலா பெவரேஜஸ் தனியார் நிறுவனம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் விநியோகஸ்தர்களாக இணைந்து கொண்டுள்ளது. மை கோலா பெவரேஜஸ் தனியார் நிறுவனத்தினால் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விநியோகிக்கும் இரண்டு வர்த்தக குறியீட்டுப் பெயர்களைக் கொண்ட Chrystal And life ஆகியவற்றுக்கும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்த கைச்சாத்திடலும், ஆவணப் பரிமாற்றலும் கொழும்ப
குந்தவை தன் ஊரைக் கடந்து, யாழ்ப்பாணடவுனுக்கு இட்டுச் செல்லும் அந்த கொழும்புத் துறை வீதியில் ஏறுவதற்குள், அவனுக்கு போதும் போதும் என்றாகி விட்டது. “சீ என்ன சாதிச் சனங் கள்ளப்பா இதுகள்" என எரிச்சலுடன் நினைத்துக் கொண்டான். ஒவ்வொரு ஒழுங்கை முடக்கிலும் நின்று அவன் எப்பொழுது வீட்டைவிட்டு வெளிக்கிடுவான் நாவைச் சுழற்றிச் சாட்டையாய் வீசலா மெனக் காத்திருந்தது மாதிரி. “என்ன தம்பி! கன நாள் லீவோ?” - “ஊரிலே தான் நிக்கிறாய் எண்டு கேள்வி. ஆனா, வெளியிலை தலைக்கறுப்பையே காணன்"- "இனி ஊரோடை தான் ...
எம். ஏ. நுஃமான்அவளை இதற்குமுன் வேறு எங்கேயும் கண்டதாகஅவனுக்கு நினைவு இல்லை. நிச்சயமாகநான் கண்டிருக்க முடியாது என்றுதான் அவன் நினைத்தான். ஏனென்றால்அவன் அடிக்கடி மட்டக்களப்புக்கு வருவதில்லை. வந்தாலும் வாசிகசாலைக்குள் வர அவனுக்கு நேரம்கிடைப்பதில்லை. எப்போதோ இரண்டொரு முறைதான்அவன் இங்கு வந்திருக்கிறான். இவள்அடிக்கடி பின்னேரங்களில் வருவாளாக்கும் என்று நினைத்தான். அவள், அவனுக்கு இடதுபுறமாகச் சிறிது தள்ளி அமர்ந்திருந்தாள். அவனுக்குஅவளை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும்போல்இருந்தது. ஆயினும் புத்தகத்தையே வாசிப்பதுபோ
சிற்பி (சி.சரவணபவன்) சித்திரை மாதத்துச் சூரியன் கொளுத்து கொளுத்தென்று கொளுத்தினான். கண்களைத் திறக்கவே முடியாதபடி அவ்வளவு வெப்பம் அனல் காற்று வீசியது. வீதியிலுள்ள தார் வெப்பத்தைக் கண்டு குமுறுவதைப்போல் உருகிப் பொங்கியது. இந்தப் பதைபதைக்கும் வெய்யிலையும் பொருட்படுத்தாது அந்த இரண்டு உருவங்களும் அங்கே நின்று மோனத் தவம் செய்தன. முதலாவதாக அந்த இடத்தை வந்து சேர்ந்தவன் மயிலன். உடம்பெல்லாம் திருநீற்றுக் குறிகள்; நெற்றியிலிட்ட சந்தனப் பொட்டிற்குள் பளிச்சென்று மின்னிக் கொண்டிருந்தது குங்குமம். இரண்டு காதுகளிலும் செவ்
சு.இராஜநாயகன் “கந்த ஆஆஅஅ.....” முருகேசரின் இந்த அழைப்பு அந்தக் கந்தக் கடவுளுக்குக் கேட்டதோ என்னவோ, அந்தப் பாரிய வேப்பமரத்தின்கீழ், பாத்தியிலிருந்து பிடுங்கி நாற்புறமும் எறிந்துவிட்ட பனங்கிழங்குகள் போல் படுத்திருந்த நூற்றுக்கணக்கான மக்களுக்குக் கேட்டது. அவர்களின் தூக்கமும் சற்றுக் கலைந்தது. முருகேசர் எழுந்து நின்றார். ஏதோ ஒரு திசை நோக்கிக் கைகூப்பி மீண்டும் "கந்தா, கந்தா ஆஅ” என்றழைத்தார். தளர்ந்திருந்த நாலு முழத்தைச் சீராக உடுத்தார். நலமுண்டுத்துண்டை உதறித் தோளிற் போட்டார். குனிந்து சிறு துணிப்பை ஒன்றை எடுத
தி.ஞானசேகரன் மூன்றாம் நம்பர் வார்ட்டில் நோயாளியைக் கவனித்துக் கொண்டிருந்தபோது, ‘நர்ஸ்’ ஒருத்தி என்னிடம் வந்து “ஸேர் யாரோ ஒருவர் வந்திருக்கிறார், உங்களைப் பார்க்கவேண்டுமாம். உங்களது நண்பர் என்று கூறுகிறார்” என்றாள் தயக்கத்துடன்.‘வார்ட் ரவுண்ட்’ செய்யும்போது என்னை யாரும் குழப்புவதை நான் விரும்புவதில்லை என்பது அவளுக்குத் தெரியும். சினத்துடன் நிமிர்ந்து பார்த்தேன்.“ஹலோ மச்சான், ஹெள ஆர் யூ? ” வாசலில் நின்றிருந்த சில்வா கலகலப்போடு கைகளை நீட்டியபடி வந்து என் தோள்களைப் பற்றிக் கொண்டான்.“ஆ, வட் ஏ பிளஸன்ற் சேர்ப்பிற