தேசிய விளையாட்டு பேரவையின் புதிய தலைவராக கலாநிதி மையா குணசேகர விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவால் நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தேசிய விளையாட்டுப் பேரவை மற்றும் தேசிய தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கான நியமனங்களை இன்றைய தினம் (04) வழங்கியுள்ளார். >> கோஹ்லி, ரோஹித்திற்கு ஓய்வு; புதிய தலைவர்களுடன் களமிறங்கும் இந்தியா அதன்படி விளையாட்டு பேரவையின் தலைவராக மையா குணசேகர பெயரிடப்பட்டுள்ளதுடன், செயலாளராக ஐ.யு. விக்ரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
சிங்கபூரில் நடைபெற்றுவரும் மிரெக்ஷஷ் நேஷன் கிண்ண (Mirxes Nations Cup) வலைப்பந்தாட்ட தொடரில் இலங்கை அணி தங்களுடைய முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது. கனடா மற்றும் சிங்கபூர் A அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்த இலங்கை அணி தங்களுடைய மூன்றாவது போட்டியில் குக் தீவுகள் அணியை எதிர்கொண்டது. மிரெக்ஷஷ் நேஷன் கிண்ணத்தின் முதலிரண்டு போட்டிகளில் இலங்கைக்கு தோல்வி போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி 63-52 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவான வெற்றியை பதிவுசெய்தது. முதல் காற்பகுதியில் 18-11 என்ற முன்னிலையை
சிங்கபூரில் நடைபெற்றுவரும் மிரெக்ஷஷ் நேஷன் கிண்ண (Mirxes Nations Cup) வலைப்பந்தாட்ட தொடரில் இலங்கை அணி தங்களுடைய முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. கனடா, சிங்கபூர், சிங்கபூர் A, பப்புவா நியூகினியா, குக் தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய 6 அணிகள் மிரெக்ஷஷ் நேஷன் கிண்ண வலைப்பந்தாட்ட தொடரில் மோதி வருகின்றன. >> வலைப்பந்திற்கு விடை கொடுக்கும் தர்ஜினி சிவலிங்கம் சிங்கபூரில் நடைபெற்றுவரும் இந்த தொடரின் தங்களுடைய முதல் போட்டியில் கனடா அணியை இலங்கை அணி எதிர்கொண்டு 46-50 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந
இலங்கை அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் தசைப்பிடிப்பு உபாதைக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. உலகக்கிண்ணத்தின் தங்களுடைய இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு இலங்கை அணி ஹைதரபாத்தில் விளையாடி வருகின்றது. ஒரு மாற்றத்துடன் களமிறங்கும் இலங்கை கிரிக்கெட் அணி இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை குவித்துக்கொண்டது. இதில் குசல் மெண்டிஸ் 79 பந்துகளில் 122 ஓட்டங்க
கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ள மத்திய ஆசிய ஆடவர் கரப்பந்து சவால் கிண்ணம் போட்டிகளுக்கான அனுசரணையை வழங்க டயலொக் ஆசியாட்ட பி.எல்.சி நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது. இந்தப் போட்டித் தொடர் இன்று திங்கட்கிழமை (09) முதல் 15 ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடை பெறவுள்ளது. >> இலங்கைக்கு பதக்க எதிர்பார்ப்பை கொடுத்த 18 வயது வீராங்கனை இரண்டாவது தடவையாக ஆசிய ஆடவர் கரப்பந்து சவால் கிண்ணம் நடைபெறவுள்ள நிலையில், பங்களாதேஷில் 2021ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பருவகால போட்டிகளில் இலங்கை ...
இலங்கையின் முன்னணி பெட்மிண்டன் வீரர் நிலூக கருணாரத்ன சர்வதேச பெட்மிண்டன் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். சுவிஸ்லாந்தின் ஒலிம்பிக் குழு தலைமையத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இலங்கை சார்பில் பங்கேற்ற போதே தன்னுடைய ஓய்வு தொடர்பிலான அறிவிப்பை இவர் வெளியிட்டார். >> பதக்க வாய்ப்பை தவறவிட்ட இலங்கை வீரர்கள் நிலூக கருணாரத்ன இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 2012, 2016 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் பெட்மிண்டன் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் 17 தடவைகள் தேசிய பெட்மிண்
உலகக்கிண்ண தொடருக்காக தென்னாபிரிக்காவின் கேப் டவுனுக்கு செல்வதற்கு முதல் பொட்ஸ்வானாவில் சில வெற்றிகளை பெற்று இலங்கை வலைப்பந்தாட்ட அணி நம்பிக்கையை பெற்றுள்ளது. வலைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்துக்கு முகங்கொடுப்பதற்கு முன்னர், இலங்கை வலைப்பந்தாட்ட அணி பொட்ஸ்வானாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. >>ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு மூன்றாவது இடம் குறித்த இந்த சுற்றுப்பயணத்தில் பொட்ஸ்வானா தேசிய அணியை இரண்டு தடவைகள் எதிர்கொண்டதுடன், பொட்ஸ்வானா பொலிஸ் மற்றும் கழக அணியான பி.டி.எப் கெட்ஸ் (BDF C
தாய்லாந்தின் தாய்பேயில் நடைபெற்றுவரும் ஆடவருக்கான ஆசிய கரப்பந்தாட்ட சவால் கிண்ணத்தில் சவுதி அரேபியாவை வீழ்த்திய இலங்கை அணி 13வது இடத்தை பிடித்துக்கொண்டது. மொத்தமாக 15 அணிகள் மோதும் இந்தப் போட்டித்தொடரின் முதல் சுற்றில் இந்தோனேசியா மற்றும் பஹரைன் அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்த இலங்கை அணி முதல் 12 அணிகளுக்கான இடத்தை தவறவிட்டது. தேசிய கடற்கரை கபடியில் சாதித்த வடக்கு, கிழக்கு அணிகள் அதனைத்தொடர்ந்து 13வது இடத்தை தீர்மானிக்கும் வகையில் இந்தியா மற்றும் சவுதி அரேபிய அணிகளை எதிர்த்தாடியது. இதில் இந்திய கரப்பந்தாட்ட
ஐக்கிய அமெரிக்கா அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளரான கைல் பிலிப்பிற்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரது பந்துவீச்சுப் பாணி சட்டவிரோதமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவருக்கு போட்டித் தடை விதிப்பதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வெள்ளிக்கிழமை (23) அறிவித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் அவரால் பந்துவீச முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் உலகக் க
நேபாளத்தில் நடைபெற்று வரும் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளன (CAVA) மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ணத்தில் சனிக்கிழமை (27) நடைபெற்ற போட்டியில் இலங்கை மகளிர் அணி 3-0 என இலகுவாக வெற்றிபெற்றது. ஐந்தாவது இடத்துக்கான இந்தப் போட்டியில் இலங்கை மகளிர் அணி, கிரிகிஸ்தான் அணி அணியை எதிர்கொண்டு விளையாடியது. பங்களாதேஷை இலகுவாக வீழ்த்திய இலங்கை மகளிர் அணி மாலைத்தீவுகளை வீழ்த்திய இலங்கைக்கு முதல் வெற்றி விறுவிறுப்பான போட்டியில் தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி இந்தப் போட்டியின் ஆரம்பம் முதல் மிகச்சிறப்பாக ஆடிய இலங்கை மகளிர்
நேபாளத்தில் நடைபெற்று வரும் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளன (CAVA) மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ணத்தில் புதன்கிழமை (24) நடைபெற்ற மாலைத்தீவுகள் அணிக்கு எதிரான தங்களுடைய கடைசி குழுநிலை போட்டியை இலங்கை மகளிர் அணி 3-0 என கைப்பற்றி தொடரில் முதல் வெற்றியை பதிவுசெய்தது. முதல் இரண்டு போட்டிகளில் சிறந்த போட்டியை கொடுத்து தோல்வியடைந்திருந்த இலங்கை மகளிர் அணி, இன்றைய போட்டியில் மிகச்சிறப்பாக ஆடியிருந்தது. >>விறுவிறுப்பான போட்டியில் தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி<< ஆட்டத்தின் முதல் செட்டை 25-18 என்ற புள்ள
நேபாளத்தில் நடைபெற்று வரும் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளன (CAVA) மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ணத்தில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற போட்டியில் இலங்கை மகளிர் அணி 3-1 என தோல்வியை சந்தித்துள்ளது. முதல் போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணியிடம் 3-0 என தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி, இரண்டாவது போட்டியில் கஸகஸ்தான் அணியை (குழு B) எதிர்கொண்டது. இலங்கை தேசிய கரப்பந்து அணியில் மலையக வீராங்கனை திலக்ஷனா முதல் போட்டியில் இலங்கைக்கு தோல்வி; அபார வெற்றிபெற்ற இந்தியா! போட்டியின் முதல் செட்டில் கஸகஸ்தான் அணி அபாரமாக ...
நேபாளத்தில் இன்று (22) ஆரம்பித்த மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளன (CAVA) மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ணத்தின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணி 3-0 என உஸ்பெகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்துள்ளது. உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போட்டியின் (குழு B) முதல் செட்டில் இரண்டு அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. செட்டின் முதல் பாதியில் 14-10 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை அணி முன்னிலை வகித்ததுடன், அதன் பின்னர் உஸ்பெகிஸ்தான் கடுமையான போட்டியை கொடுத்தது. இலங்கை தேசிய கரப்பந்து அணியில் மலையக ...
நேபாளத்தில் இன்று (22) ஆரம்பித்த மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளன (CAVA) மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ணத்தின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணி 3-0 என உஸ்பெகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்துள்ளது. உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போட்டியின் (குழு B) முதல் செட்டில் இரண்டு அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. செட்டின் முதல் பாதியில் 14-10 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை அணி முன்னிலை வகித்ததுடன், அதன் பின்னர் உஸ்பெகிஸ்தான் கடுமையான போட்டியை கொடுத்தது. இலங்கை தேசிய கரப்பந்து அணியில் மலையக ...
இந்தியாவில் நடைபெற்ற அங்குரார்ப்பண மகளிர் பிரீமியர் லீக் T20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி முதலாவது சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. ஐந்து அணிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கெபிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டெல்
யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு எதிரான 116வது வடக்கின் பெரும் சமரில் யாழ். மத்தியக் கல்லூரி அணி சகலதுறையிலும் பிரகாசித்து இன்னிங்ஸ் மற்றும் 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலைப்பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் 279 ஓட்டங்களை பெற்றிருந்த யாழ். மத்தியக் கல்லூரி அணி, சென் ஜோன்ஸ் கல்லூரியை அவர்களுடைய முதல் இன்னிங்ஸில் 127 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியதுடன், மீண்டும் போலவ் ஒன் முறையில் 137 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளையும் சாய்த்து முன்னிலைப்பெற்றுள்ளது. யாழ். மத்திக்கு துடுப்பாட்டத்தில் பலம் கொடுத்த அஜய், விதுசன்!
நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான இந்திய அணியிலிருந்து ருதுராஜ் கைகவட் நீக்கப்பட்டுள்ளார். ருதுராஜ் கைகவட்டிற்கு மணிக்கப்பட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் பெங்களூரில் அமைந்துள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் சிகிச்சைப்பெற்றுக்கொள்ள உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்னா அணியை பந்துவீச்சில் மிரட்டிய விஷ்வ, அசித ரஞ்சி கிண்ணத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் விளையாடியதன் பின்னர், மணிக்கட்டு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளதாக கைகவட் தெரிவித்துள்ள
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் T20I போட்டியில் நிர்ணயிக்கப்பட்டிருந்த வெற்றியிலக்கு தொடர்பில் இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கருத்து வெளியிட்டுள்ளார். அதன்படி பலமான துடுப்பாட்ட வரிசையை 162 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இலங்கை அணியால், வெற்றிலக்கை அடைந்திருக்க முடியும் என இவர் குறிப்பிட்டார். டுபாய் கெபிட்டல்ஸ் அணியுடன் இணையும் சாமிக்க கருணாரத்ன! “இந்த ஆடுகளத்தில் 170 அல்லது 180 ஓட்டங்கள் சிறந்த ஓட்ட எண்ணிக்கையாக இருந்திருக்கும். பந்துவீச்சு ஆ
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியவை உள்ளடக்கிய ஏழு பேர் கொண்ட தேசிய விளையாட்டு தேர்வுக் குழுவை விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்துள்ளார். முப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் ஏழு பேர் கொண்ட தேசிய தேர்வுக் குழு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கான நியமனக் கடிதங்கள் செவ்வாய்க்கிழமை (04) விளையாட்டுத்துறை அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது. இந்தக் குழுவில் சனத் ஜயசூரியவுடன் முன்னாள் தேசிய டென்னிஸ் வீரர் அர்ஜுன் ரி
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளரான மஹீஷ் தீக்ஷன, இலங்கை இராணுவத்தின் சார்ஜென்ட் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார். சர்வதேச மட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்கள் நேற்று (20) இராணுவ தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு அவர்களது திறமைகளை பாராட்டி பதவி உயர்வு மற்றும் நிதி ஊக்குவிப்பு வழங்கப்பட்டது. இதன்படி, இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் மஹிஷ் தீக்ஷன, இலங்கை இராணுவத்தில் சார்ஜென்டாக பதவி உயர்வு ப