யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 13ஆவது இந்துக்களின் பெருஞ்சமர் கிரிக்கெட் போட்டியில் யாழ். இந்துக் கல்லூரி அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும் 100 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. சுதர்சன் சுபர்ணன் சகலதுறை ஆட்டம், குமணன் தரணிசன், ஸ்ரீஜெயந்தன் ஹரிஹரன் ஆகியோரது அற்புத பந்துவீச்சு ஆற்றல்கள் மூலம் யாழ். இந்துவின் வெற்றியை இலகுபடுத்தியிருந்தனர். இந்த வெற்றியுடன் இந்துக்களின் பெருஞ்சமரில் 3ஆவது வெற்றியை யாழ். இந்துக் கல்லூரி அணி ஈட
இலங்கையின் 19 வயதின் கீழ் டிவிஷன் – III பாடசாலை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று சனிக்கிழமை (16) நடைபெற்ற போட்டிகளில் யாழ். மத்தியக் கல்லூரி மற்றும் யாழ். ஸ்கந்தவரோதயா கல்லூரி அணிகள் வெற்றிகளை பதிவுசெய்தன. இதேவேளை 19 வயதின் கீழ் டிவிஷன் – II போட்டியில் இன்றைய தினம், கட்டுநேரிய சென். செபஸ்தியன் கல்லூரிக்கு எதிரான போட்டியில் விளையாடிய யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அக்குரனை அஸ்ஹருக்கு எதிராக அபாரம் காண்பித்த ஆகிப் ...
ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷொஹிதுல் இஸ்லாமுக்கு 10 மாதங்கள் போட்டித் தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) உத்தரவிட்டுள்ளது. ICC ஊக்கமருந்து எதிர்ப்பு சட்டத்தின் பிரிவு 2.1 ஐ மீறியதை ஷொஹிதுல் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து கடந்த மே 28ஆம் திகதியிலிருந்து முன் திகதியிட்டு இந்த தடை அமல்படுத்தப்பட்டது என்பதால் அடுத்த ஆண்டு மார்ச் 28ஆம் திகதி வரை அவருக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடமுடியாது என குறிப்பிடப்பட
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20I தொடர்களுக்கான பங்களாதேஷ் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் குழாத்தில் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முஷ்தபிசூர் ரஹ்மான், மீண்டும் டெஸ்ட் குழாத்துக்குள் இணைக்கப்பட்டுள்ளார். இறுதியாக இவர் கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடியிருந்தார். >> சர்ரே அணியை பந்துவீச்சில் மிரட்டிய துனித் வெல்லாலகே அதேநேரம், அணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த முஷ்பிகூர் ரஹீம் மூன்று குழா
பாடசாலைகளுக்கு இடையிலான டிவிஷன் 3 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு (காலிறுதிக்கு முந்தைய சுற்று) யாழ். மாவட்ட பாடசாலைகளான யாழ். மத்திய கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி அணிகள் தகுதிபெற்றுள்ளன. இம்முறை ஒருநாள் போட்டிகளாக நடைபெற்ற இந்த தொடரில் யாழ். மாவட்ட டிவிஷன் 3 பாடசாலை அணிகள் K குழுவில் இடம்பெற்றிருந்த நிலையில், யாழ். மத்தியக் கல்லூரி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துக்கொண்டது. >>மோசமான ஆட்டத்தினால் அரையிறுதி வாய்ப்பை இழந்த சென்.ஜோன்ஸ் கல்லூரி போட்டித்தொடரில் 4 போட்டிகளில்
யூரோ கால்பந்து தொடரின் நடப்புச் சம்பியன்களாக இருக்கும் போர்த்துகல் அணி, தமது சம்பியன் பட்டத்தினை தொடர்ந்தும் தக்கவைக்கும் நோக்குடன் 2020ஆம் ஆண்டுக்கான யூரோ கால்பந்து தொடரில் பலமிக்க வீரர்களுடன் களம் காணுகின்றது. யூரோ கிண்ண வரலாறு போர்த்துகல் யூரோ கால்பந்து தொடரில் தமது முதல் சம்பியன் பட்டத்தினை கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியினை 1-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி பெற்றுக்கொண்டது. அதோடு இதுவே சர்வதேச கால்பந்து அரங்கில் போர்த்துகல் அணி பெற்ற முதல் சம்பியன் பட்டமாகவும் ..
ரியல் மெட்ரிட் கால்பந்துக் கழகத்தின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக அவர் தரப்பால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரொனால்டோ கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஸ்பானிய சுப்பர் கிண்ண கால்பந்து தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் கட்டப் போட்டியில் ரியல் மெட்ரிட் அணி 3-1 என வெற்றிபெற்றது. குறித்த போட்டியின் 80 ஆவது நிமிடத்தில் ரொனால்டோ கோலடித்தார். அப்போது அவர் தனது ஜேர்சியைக் கழற்றி பார்சிலோனா ஆதரவாளர்கள் முன்னிலையில் தனது வெற்றியைக் க
ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கங்களை அள்ளியவரும் உலகின் அதிவேக வீரர் என்று வர்ணிக்கப்படுபவருமான உசைன் போல்ட் தான் விடைபெறும் 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் அமெரிக்காவின் ஜெஸ்டின் கெட்லிடம் தோல்வியை சந்தித்தார். இதனால் ஜெமைக்க வீரரான போல்ட் தான் பங்கேற்ற இறுதியான தனிநபர் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதனால் அவர் வெண்கலப் பதக்கத்தோடு ஆறுதல் அடையவேண்டி ஏற்பட்டது. 21 வயதான அமெரிக்காவின் கிறிஸ்டியன் கோல்மனும் போல்டை முந்தி இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். லண
கொழும்பு இந்து கல்லூரி மற்றும் யாழ் இந்து கல்லூரிக்கும் இடையிலான இரண்டு நாட்களை கொண்ட இந்துக்களின் பெரும் சமர் கிரிக்கட் போட்டியில், சமபலத்துடன் மோதிக்கொண்ட இரு அணிகளினதும் பலத்த போராட்டத்துக்கு மத்தியில் போட்டி சமநிலையில் முடிவுற்றது. பம்பலபிட்டிய, இந்து கல்லூரி மைதானத்தில் இரண்டாவதும் இறுதியுமான நாளாக நடைபெற்ற, இந்த போட்டி விறுவிறுப்பாகவும் அதேநேரம் துடுப்பாட்டம் பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு ஆகிய துறைகளில் பல்வேறான திறமைகளை வெளிப்படுத்தியிருந்த போட்டியாகவும் அமைந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. அத்த
கொழும்பு இந்து கல்லுரி மற்றும் யாழ் இந்து கல்லூரிக்கும் இடையில் இன்றைய தினம் (do sports no drugs) ’போதைப்பொருளற்ற விளையாட்டு’ எனும் தொனிப் பொருளில் ஆரம்பமாகிய 19 வயதுக்கு உட்பட்ட இந்துக்களுக்கான பெரும் சமர் கிரிக்கெட் போட்டியில் கொழும்பு இந்துக் கல்லூரி வலுவான நிலையில் காணப்படுகிறது. கொழும்பு இந்துக் கல்லுரியில் ஆரம்பித்த இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய யாழ் இந்து கல்லூரி முதலில் கொழும்பு இந்து கல்லூரியை துடுப்பாடுமாறு பணித்தது. அந்த வகையில் களமிறங்கிய கொழும்பு இந்து கல்லூரிக்கு ஆரம்பம் இனிதா
கொழும்பு இந்து கல்லுரி மற்றும் யாழ் இந்து கல்லூரிக்கும் இடையில் இன்றைய தினம் (do sports no drugs) ’போதைப்பொருளற்ற விளையாட்டு’ எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட இந்துக்களுக்கான பெரும் சமர் கால்பந்து போட்டியில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியை, கொழும்பு இந்துக் கல்லூரி 5-0 என்ற கோல்கள் அடிப்படையில் இலகுவாக வெற்றியீட்டியது. குறித்த போட்டியானது யாழ் இந்துக் கல்லுரி மற்றும் கொழும்பு இந்து கல்லூரி மாணவர் சங்கத்தினால் எட்டாவது தடவையாகவும் கொழும்பு இந்து கல்லுரி மைதானத்தில், இன்றைய தினம் காலை ...