இலங்கை கிரிக்கெட் சபையினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 21 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அபிவிருத்தி அணிக்கு தெரிவு செய்யப்பட்ட 20 வீராங்கனைகளுக்கான ஒப்பந்தங்கள் இலங்கை கிரிக்கெட் சபை நேற்று (29) உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் ரவீன் விக்ரமரட்ன, பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா, இலங்கை கிரிக்கெட் உள்ளூர் செயல்பாட்டு தலைவர் சிந்தக எதிரிமான்ன, இலங்கை மகளிர் கிரிக்கெட் அழைப்பாளர் அப்சாரி திலகரட்ன ம
இலங்கை கிரிக்கெட் சபை (SLC), 21 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அபிவிருத்தி அணியின் 20 பேர் கொண்ட வீராங்கனைகள் குழாத்தினை அறிவித்துள்ளது. >> மீண்டும் இலங்கையில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணம் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் தொடர்களை மையமாகக் கொண்டு தெரிவு செய்யப்பட்டுள்ள இந்த மகளிர் கிரிக்கெட் அபிவிருத்தி அணிக்குழாத்தில், நாடெங்கிலும் நடாத்தப்பட்ட திறமை தேடுதல் (Talent Hunting) நிகழ்ச்சித்திட்டத்தில் உள்வாங்கப்பட்ட 120 பேரிலிருந்து, 20 வீராங்கனைகள் இறுதியாக தெரிவு செய்யப்பட்டிருக்க
‘திறமையுள்ள கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சமமான மற்றும் நியாயமான வாய்ப்புக்களை வழங்குதல்’ என்ற தொனிப்பொருளை இலக்காகக் கொண்டு இலங்கை கிரிக்கெட் சபை 2௦17ஆம் ஆண்டுக்கான தேசிய அபிவிருத்தி திட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளது. குறித்த குறிக்கோளை எட்டுவதற்காக, மாகாண ரீதியில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தரமுடைய கிரிக்கெட் அரங்கம் ஆகியவற்றை அமைத்துக்கொடுத்து வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம், உள்ளூர் பாடசாலைகள் மற்றும் கழக கிரிக்கெட் தரத்தை மேம்படுத்தலாம் என இலங்கை கிரிக
ஹரே விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தின்போது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அபிவிருத்தி அணி சிம்பாப்வே அபிவிருத்தி அணிக்கு முதலில் துடுப்பெடுத்தாட வாய்ப்பளித்தது. 50 ஓவர்களை எதிர்கொண்ட சிம்பாப்வே அபிவிருத்தி அணி 9 விக்கட்டுகளை இழந்து 255 ஓட்டங்களைக் குவித்தது. சிம்பாப்வே அபிவிருத்தி அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பிரியன் சாரி 85 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் சிம்பாப்வே அணியின் விக்கட்டுகள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன. இதன் மத்தியிலும் சிறப்பாக