இலங்கையில் எதிர்வரும் ஜலை மாதம் ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான முழுமையான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முதலாம் திகதி நடப்பு சம்பியன் பி லவ் கண்டி அணி தம்புள்ள ஓரா அணியை எதிர்த்தாடுகிறது. இந்தப் போட்டியானது கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகின்றது. >> ICC இன் மார்ச் மாதத்திற்கான சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரராக கமிந்து முதல் மூன்று போட்டிகள் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், அதனைத்தொடர்ந்து 5 போட்ட
இலங்கை இராணுவத்தினால் 59ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நேற்றுமுன்தினம் (31) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்தது. இலங்கை இராணுவத்தில் உள்ள படைப் பிரிவுகளுக்கிடையில் நடத்தப்படுகின்ற இம்முறை போட்டிகளில் 2 இலங்கை சாதனைகளுடன், 11 போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன. இம்முறை போட்டிகளில் வருடத்தின் அதி சிறந்த இராணுவ மெய்வல்லுனர் வீரருக்கான விருதை ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்ற இலங்கை பீரங்கி பட
IPL தொடரில் பஞ்சாப் அணியின் தலைவராக செயற்பட்டு வரும் சிகர் தவான் தோற்பட்டை உபாதைக்கு முகங்கொடுத்துள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. உபாதை காரணமாக ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலிருந்து விலகியிருந்த சிகர் தவான், குறைந்தது 7 நாட்களுக்கு போட்டிகளில் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கு இலகு வெற்றி எனவே அடுத்து வரும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாட மாட்டார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிகர் தவான் அ
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியானது 328 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. >> இரண்டாம் இன்னிங்ஸில் சரிவை எதிர் நோக்கியுள்ள பங்களாதேஷ் மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் ஒரு போட்டி மீதமிருக்க 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது. பங்களாதேஷின் சில்லேட் நகரில் நடைபெற்று வந்த இலங்கை – பங்களாதேஷ் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (24) நிறைவுக்கு வரும் ...
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான அனைத்து போட்டிகளின் அட்டவணை மற்றும் பிளே- ஆஃப் சுற்று, இறுதிப்போட்டி ஆகியன நடைபெறும் மைதானங்கள் உள்ளிட்ட விபரங்களை ஐபிஎல் நிர்வாகம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 22ஆம் திகதி இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கோலாகலமாக ஆரம்பமாகியதுடன், சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றியீட்டியது. அந்த வகையில் தற்போது வரை 6 லீக் போட்டிகள் முடிந்துள்ளன. இதில் சென்னை சுப்பர்
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் மே மாதம் 01ஆம் திகதி வரை இந்திய பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் ஆட முடியும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. >> உபாதை காரணமாக வெளியேறும் சிகர் தவான்! மே மாத ஆரம்பத்தில் ஜிம்பாப்வே-பங்களாதேஷ் அணிகள் பங்கெடுக்கும் T20 தொடர் நடைபெறுகின்றது. இதனால் பங்களாதேஷ் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் அந்த நாட்டு கிரிக்கெட் சபை மூலம் ஏப்ரல் 30ஆம் திகதி வரை IPL போட்டிகளில் ஆட ஆட்சேபனையின்றிய சான்றிதழை (NOC) பெற்றி
இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பங்களாதேஷ் குழாத்தில் சகீப் அல் ஹஸன் இணைக்கப்பட்டுள்ளார். சகீப் அல் ஹஸன் இறுதியாக அயர்லாந்து அணிக்கு எதிராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தொடரில் விளையாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை. 2024 ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை வெளியானது சுமார் ஒரு வருட காலப்பகுதிக்கு பின்னர் மீண்டும் சகீப் அல் ஹஸன் அணியில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே குழாத்தில் பெயரிடப்பட்டிருந்த தவ்ஹித் ரிடோய் அணியிலிருந்து நீக்கப
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுள்ளார். 2024ஆம் ஆண்டு ஐசிசி T20 உலகக் கிண்ணம் எதிர்வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த சில பாகிஸ்தான் வீரர்கள் தங்களது ஓய்வுமுடிவை திரும்பப்பெற்று பாகிஸ்தான் அணிக்காக விளையாட ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் சம்பியன்
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட பங்களாதேஷ் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் சகிப் அல் ஹசன் தயாராக இருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. முன்னதாக, நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும், இலங்கைக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரிலும் விளையாடாத சகிப் அல் ஹசன், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது. ஆனால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட தயாராக இருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் சபையிடம் அவர் தெ
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை அணியானது பங்களாதேஷிற்கு எதிராக தமது இரண்டாம் இன்னிங்ஸில் சவால்மிக்க வெற்றி இலக்கை நிர்ணயிக்க துடுப்பாடி வருகின்றது. >> இலங்கையைப் பலப்படுத்திய தனன்ஞய – மெண்டிஸ் ஜோடி பங்களாதேஷின் சில்லேட் நகரில் நேற்று (22) ஆரம்பித்த இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸை (280) அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணியானது ...
பாகிஸ்தானின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளரும், உலகக் கிண்ணத்தை வென்றவருமான முஷ்டாக் அஹ்மட், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக பங்களாதேஷ் அணியின் சுழல்பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் வீரர் ரங்கன ஹேரத் பணியாற்றிய நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் அந்தப் பதவியிலிருந்து விலகினார். எனவே, வெற்றிடமாக இருந்த அவரது இடத்துக்கு முஷ்டாக் அஹ்மட்டை நியமிக்க பங்களாதேஷ் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டு
பிபா உலகத் தொடரில் இலங்கைக்கும் பூட்டானுக்கும் இடையிலான பரபரப்பான ஆட்டத்தில், இலங்கை அணி களத்தில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தி, இறுதியில் சிறப்பான வெற்றியைப் பெற்றது. கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த மோதலில் இரு அணிகளும் சிறப்பாக தங்கள் ஆட்டத்திறனை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் தொடக்க பாதியில் இலங்கை பல கோல் வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும், அவர்களின் முயற்சிகள் இருந்தபோதிலும், அவர்களால் கோலை அடிக்க முடியவில்லை. போட்டியின் முதல் பாதி சமநிலையில் நிறைவ
பங்களாதேஷிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியானது 328 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றதோடு, ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்கான இரு போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது. >> முதல் டெஸ்டில் அபார வெற்றியினைப் பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் அணி சில்லேட்டில் நடைபெற்ற குறித்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றியை அதன் தலைவர் தனன்ஞய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தமது அபார துடுப்பாட்டங்களின் வாயிலாக உறுதி செய்தனர். இந்த நிலையில் ...
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் இமாத் வசீம் தனது முடிவை மாற்றிக்கொண்டு, ஐசிசி T20 உலகக் கிண்ணத்தில் விளையாடத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அண்மையில் முடிவடைந்த பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் சம்பியன் பட்டம் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக ஆடிய இமாத் வசீம் சிறப்பாக செயல்பட்டதுடன், முதல்தான் சுல்தான்ஸ்; அணியுடனான இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவானா
பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது ஓய்வு அறிவிப்பை மீளப் பெற்ற வனிந்து ஹஸரங்கவிற்கு, பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் நடைபெறும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆட தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. >> இலங்கை டெஸ்ட் குழாத்தில் மீண்டும் வனிந்து ஹஸரங்க! இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தின் போது 37ஆவது ஓவரில் வனிந்து ஹஸரங்க மைதான நடுவரின் தீர்ப்பிற்கு எதிராக நடுவருடன் முரண்பட்டிருந்தார். பின்னர் போட
அபு தாபியில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ண தகுதிகாண் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டு அணிகள் பங்களாதேஷில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ணத்துக்கு தகுதிபெறவுள்ளது. மகளிர் T20 உலகக்கிண்ண தகுதிகாண் தொடரில் மொத்தமாக 10 அணிகள் இரண்டு குழுக்களின் கீழ் விளையாடவுள்ளன. இதில் இரண்டு குழுக்களிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி அதிலிருந்து இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். >>பங்களாதேஷ் அணியின் சுழல்பந்து வீச்சு பயிற்சியாளராகும் முஷ்டாக் அஹ்மட்
நாம் ஒரு படைப்பை எழுதி, பத்திரிகை/சஞ்சிகைகளிலோ அல்லது இணையத்தளங்களிலோ பிரசுரிக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை எத்தனை பேர்கள் படிக்கின்றார்கள், அந்தப் படைப்புப் பற்றிய வாசகர்களின் கருத்துக்கள் என்ன என்பதை எப்படி அறிவது? படிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வெறுமனே கடந்து சென்றுவிடுகின்றார்கள். இணையத்தளங்களில் முகத்துக்காக சில முகத்துதிக் குறிப்புக்கள், விருப்பக்குறீடுகளைப் போட்டுவிட்டுக் கடந்து விடுகின்றார்கள். போட்டிகளுக்கு அனுப்பும்போது அந்தப் படைப்புகளை நடுவர்கள் படிக்கின்றார்கள். போட்டியில் பரிசு க
தனிப்பட்ட காரணங்களினால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து அவுஸ்திரேலியா அணியின் முன்னணி சுழல்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா விலகியுள்ளார். இம்முறை ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையில் களமிறங்கவுள்ள ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் அவுஸ்திரேலியா சுழல்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா இடம் பெற்றிருந்தார். கடந்த சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் 1.5 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமான இவரை, ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டது. இந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து ஆடம் ஸாம்பா விலகியுள்ளார். வலது கை சுழல
லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் விளையாடவுள்ள வெளிநாட்டு வீரர்கள் தங்களுடைய பெயர்களை விண்ணப்பிக்க முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை கிரிக்கெட் சபையின் https://srilankacricket.lk/lpl-player-registration-portal/ இணையத்தளத்தின் ஊடாக வீரர்கள் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. >>IPL தொடரில் விளையாட வியாஸ்காந்திற்கு வாய்ப்பு!<< வெளிநாட்டு வீரர்கள் இரண்டு பிரிவுகளின் கீழ் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்துக்கொள்ள முடியும