March 3, 2017

பசளிக்கீரையை நிலக்கண்ணி வெடிகளை கண்டறியும் கருவியாக மாற்றிய விஞ்ஞானிகள்

பசளிக் கீரை­யா­னது ஆரோக்­கிய குண­முள்ள அற்­புத உண­வாகக் கரு­தப்­ப­டு­கி­றது.  இந்­நி­லையில் அதனை நிலக்­கண்­ணி­வெ­டி­களை கண்­டு­பி­டிக்கும் கரு­வி­யாக மாற்றி அமெ­ரிக்க விஞ்­ஞா­னிகள் புதுமை படைத்­துள்­ளனர்.அவர்கள் பசளி இலை­க­ளுக்குள் நுண்­ கு­ழாய்­களை உட்­செ­லுத்தி அவற்றை வெடி­பொ­ருட்­களைக்  கண்­டு­பி­டிக்கும் உணர் ­க­ரு­வி­யாக மாற்­றி­யுள்­ளனர்.
இந்­நி­லையில் மேற்­படி பசளித் தாவ­ர­மா­னது எதிர்­கா­லத்தில் நிலக்­கண்­ணி­வெ­டிகள் உள்­ள­டங்­க­லான வெடி­பொ­ருட்­களை அகற்றும் கரு­வி­யாக நிபு­ணர்­களால்  பயன்­ப­டுத்­தப்­ப­டலாம் என  மேற்­படி கண்­டு­பி­டிப்பை மேற்­கொள்­வதில் பங்­கேற்ற  அமெ­ரிக்க மஸா­சுஸெட்ஸ் தொழில்­நுட்ப நிறு­வ­கத்தைச் சேர்ந்த பொறி­யியல் விஞ்­ஞா­னிகள் தெரி­விக்­கின்­றனர்.
அவர்கள் நிலக்­கண்­ணி­வெ­டி­க­ளிலும் ஏனைய வெடி­பொ­ருட்­க­ளிலும் பயன்­ப­டுத்­தப்­படும்  நைத்­தி­ரோ ­அ­ரோ­மற்றிக்ஸ் என்ற இர­சா­ய­னத்தைக் கண்­ட­றியும் வகையில் அந்த பச­ளிக்­கீ­ரையை வடி­வ­மைத்­துள்­ளனர்.
இந்த இர­சா­யனம் நிலக்கீழ் நீரில்  அவ­தா­னிக்­கப்­படும் பட்­சத்தில் பசளித் தாவர இலை­களில் உட்­செ­லுத்­தப்­பட்­டுள்ள நுண் குழாய்கள், அகச்­சி­வப்பு புகைப்­ப­டக்­க­ரு­விகள் மூலம் இனங்­கண்­ட­றி­யப்­ப­டக்­கூ­டிய ஒளிர்வு சமிக்­ஞை­களை வெளிப்­ப­டுத்தும்.
மேற்­படி புகைப்­ப­டக்­க­ரு­வியை ஸ்மார்ட் கைய­டக்­கத்­தொ­லை­பே­சியை ஒத்த அளவிலுள்ள சிறிய கணினியில்  இணைத்து பயன்படுத்த முடியும்.  அந்தக் கணினியானது பெறுபேற்றை  பயன்பாட்டாளருக்கு இலத்திரனியல் அஞ்சலாக அனுப்பி வைக்கும்.

0 comments:

Post a Comment