Saturday 1 October 2016

பொய் அன்பு போகும்


50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை

தயாளினியும் பத்மாவும் பூங்காவில் பிள்ளைகள் விளையாடுவதை இரசித்துக் கொண்டிருந்தார்கள்.

“பிள்ளை… பிரணவன் உச்சிக்குப் போகாதை. கவனம்” பத்மா சொல்வதற்குள் தீபன் அவனைத் தள்ளி விட்டான்.

தீபனின் தாயார் தயாளினியும் அதைப் பார்த்திருந்தார்.

பிரணவன் மறுபுறமுள்ள பற்றைக்குள் விழுந்தான். கால் முறிந்து வைத்தியசாலையில் படுத்திருந்தான்.

தள்ளியதைப் பிள்ளையும், பார்த்ததைத் தாயாரும் ஒருவருக்கும் சொல்லவில்லை.


“முற்பிறப்பிலை செய்த பாவத்திற்கு தண்டனை” வைத்தியசாலைக்கு வெளியே நின்ற தயாளினி யாருக்கோ சொல்வது பத்மாவிற்குக் கேட்டது.

1 comment:


  1. அருமையான பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete