சச்சித் பதிரன அணியில், மார்ஷ் தொடரிலிருந்து விலகல்

7696
Pathirana called up for 3rd ODI

இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே கொழும்பில் நடந்த இரண்டு போட்டிகளிலும் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில் கடந்த  ஞாயிற்றுக் கிழமை ரங்கிரி தம்புள்ள மைதானத்தில் இடம்பெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியில் அவுஸ்ரேலிய அணி கடும் போராட்டத்தின் மத்தியில் வெற்றிக் கோட்டை கடந்து இருந்தது.

இந்த 2 அணிகளுக்கும் இடையிலான 4ஆவது ஒருநாள் போட்டி நாளை 3ஆவது போட்டி நடைபெற்ற ரங்கிரி தம்புள்ள மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இந்த நிலையில் இப்போட்டிக்கான இலங்கை குழாமில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மற்றும் சகலதுறை வீரரான 27 வயது நிரம்பிய சச்சித் பதிரன ஓய்வு பெற்ற டில்ஷானுக்கு பதிலாக அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது இலங்கை அணியில் அறிமுகமான சச்சித் பதிரன  பாகிஸ்தான்  அணியுடனான தொடரில் 3 போட்டிகளில் பங்கு கொண்டு 22.00  என்ற துடுப்பாட்ட சராசரியில் 66 ஓட்டங்களை பெற்று இருந்ததோடு  3 போட்டிகளிலும் மொத்தமாக 174 பந்துகளை வீசி 200 ஓட்டங்களை வழங்கி 3 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

2015/16 ஆண்டுகளில் இலங்கை உள்ளூர் மட்டத்தில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டிகளின் போது CCC அணியை வழிநடத்திய சச்சித் பதிரன 10 போட்டிகளில் 29.62 என்ற பந்துவீச்சு சராசரியில் 45 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதுமட்டுமில்லாமல் இலங்கைஅணி இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து  “”  மற்றும் பாகிஸ்தான்  “”  அணிகளோடு மோதிய முக்கோண ஒருநாள் தொடரில் இலங்கைஅணியில் பங்குகொண்டு இருந்த  சச்சித் பதிரன 4 போட்டிகளில் 2 விக்கட்டுகளை கைப்பற்றி இருந்ததோடு 4 போட்டிகளில் 95 ஓட்டங்களையும் பெற்று இருந்தார். இந்த  முக்கோண ஒருநாள் தொடரிற்கு முன்பதாக பாகிஸ்தான்  “”  அணியோடு இடம்பெற்ற 4 நாட்களை கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் சச்சித் பதிரன 6 விக்கட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்.

அடுத்த 2 போட்டிகளுக்குமான இலங்கை  ஒருநாள் குழாம்

எஞ்சலோ மெதிவ்ஸ் (தலைவர்), தினேஷ் சந்திமால் (உப தலைவர் ), தனுஷ்க குணதிலக்க, தனஞ்சய டி சில்வா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், திஸர , குசல் ஜனித்  பெரேரா, சச்சித் பத்திரண, சீக்குகே பிரசன்னா, எஞ்சலோ பெரேரா, டில்ருவான்  பெரேரா, சுரங்க லக்மால், அமில அபோன்சோ, லக்ஷன்  சந்தகன், லஹிரு குமார.

இது இவ்வாறு இருக்க அவுஸ்ரேலிய அணியின் இடதுகை நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஷோன் மார்ஷ் இலங்கை அணியுடனான தொடரில் இருந்து விலகி தனது தாய் நாடு நோக்கி பயணிக்க உள்ளார். கடந்த 3ஆவது ஒருநாள் போட்டியின் போது களத்தடுப்பில் ஈடுப்பட்டுக் கொண்டு இருந்த போது கை விரலில் ஏற்பட்ட உபாதையே ஷோன் மார்ஷ் இந்த தொடரில் இருந்து விலகக் காரணமாக அமைந்து உள்ளது. உஸ்மான் கவாஜா குழாமில் உள்ளதால் ஷோன் மாஷிற்கு பதிலாக எந்த வீரரையும் அவுஸ்ரேலிய கிரிக்கட் சபை தற்போது வரை இணைக்கவில்லை.

ஷோன் மார்ஷின் உபாதைக் குறித்து அவுஸ்ரேலிய உடற்பயிற்சி மருத்துவர் டேவிட் பக்லே கூறுகையில் ” 3ஆவது  ஒருநாள் போட்டியின் போது ஷோன் மார்ஷின் இடது சுண்டுவிரலில் காயம் ஏற்பட்டு இருந்தது. போட்டியின் பின் மேற்கொள்ளப்பட்ட X-ray பரிசோதனையின் படி இடது சுண்டுவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனால் ஷோன் மார்ஷ் அவுஸ்ரேலியா நோக்கி பயணமாக உள்ளார்என்று கூறியுள்ளார்.

இதேவேளை தனது ஒருநாள் கிரிக்கட் வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்த டில்ஷான் அணித்தலைமையிலிருந்து நீக்கப்பட்டமைவலித்ததுஎன அப்பட்டமாக கூறி உள்ளார்.

இலங்கை அணியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமையைத் தனிப்பட்ட விடயம் எனக் குறிப்பிட்ட திலகரட்ண டில்ஷான், அதுபோன்ற தனிப்பட்ட விடயங்கள் குறித்துக் கவலைப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்த போதிலும், அணித்தலைமையிலிருந்து நீக்கப்பட்டமை வலித்ததாகத் தெரிவித்தார்.

இலங்கையின் முன்னாள் தலைவரான திலகரட்ண டில்ஷான், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து, நேற்று முன்தினம் இடம்பெற்ற இலங்கைஅவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 3ஆவது போட்டியுடன் ஓய்வுபெற்றார். ஓய்வுபெற்ற பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை அணியின் தலைமைப் பதவியிலிருந்து குமார் சங்கக்காரவும் மஹேல ஜெயவர்தனவும் விலகிய பின்னர், அந்தப் பதவி, திலகரட்ண டில்ஷானுக்கு வழங்கப்பட்டது. எனினும், அப்பதவிக்காகத் தான் திட்டமிட்டிருக்கவில்லை என அவர் தெரிவித்தார். “அணித்தலைமைப் பதவியைப் பெற்றுக் கொள்வதற்கு நான் திட்டமிட்டிருக்கவில்லை. ஆனால், இன்னொருவரைக் கண்டுபிடிக்கும் வரை, ஆறு மாதங்களுக்கு அப்பதவியை ஏற்குமாறு, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் என்னிடம் கேட்டார்என, டில்ஷான் தெரிவித்தார்.

தனது காலத்தில், தனது அதிர்ஷ்டம் இருந்திருக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், அதன்போது தற்போதைய தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தொடர்பில் தெரிவித்த கருத்து, மத்தியூஸ் மீதான விமர்சனமா என்ற கேள்வியை எழுப்பியது.

துரதிர்ஷ்டவசமாக, இரண்டு பந்துவீச்சாளர்களையும் நாம் இழந்திருந்திருந்தோம். முரளி ஓய்வுபெற்றிருந்தார். நுவான் குலசேகரவுக்குக் காயம் ஏற்பட்டிருந்தது. அஜந்த மென்டிஸூக்கும் காயம் ஏற்பட்டிருந்தது. சிறப்பான வளங்கள், எனக்கு இருந்திருக்கவில்லை. அஞ்சலோ மத்தியூஸூக்கு ஓராண்டாக கெண்டைக்கால் பின்தசை உபாதை ஏற்பட்டிருந்தது, அதனால் அவர் பந்துவீசியிருக்கவில்லை. அது என்னுடைய துரதிர்ஷ்டமாக இருக்க வேண்டும், ஏனென்றால் நான் பதவி விலகிய பின்னர், ஒரு வாரத்துக்குப் பின்னர் நாங்கள் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றோம். அந்த வாரத்தில், மத்தியூஸ் பந்துவீச ஆரம்பித்தார். மஹேலவின் நல்ல அதிர்ஷ்டம் காரணமாகத் தான் அது இருக்க வேண்டும்என்று அவர் குறிப்பிட்டார்.

டில்ஷானின் தலைமைத்துவத்தின் கீழ், 9 போட்டிகளில் விளையாடிய மத்தியூஸ், 16 இனிங்ஸ்களில் 4 இனிங்ஸ்களில் மாத்திரமே பந்துவீசியிருந்தார். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 22 போட்டிகளில் 12 போட்டிகளில் பந்துவீசிய மத்தியூஸ், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் 3 போட்டிகளில் எந்தவொரு போட்டியிலும் பந்துவீசியிருக்கவில்லை. ஆனால், டில்ஷானின் தலைமைத்துவத்தின் கீழ் மத்தியூஸ் விளையாடிய இறுதி 6 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் அவர் பந்துவீசியதோடு, இறுதி 5 டெஸ்ட்களில் ஒரே ஓர் இனிங்ஸைத் தவிர அனைத்து இனிங்ஸ்களிலும் அவர் பந்துவீசியிருந்தார். எனவே, மத்தியூஸ் வேண்டுமென்றே அவ்வாறு செயற்பட்டார் என, டில்ஷானின் கருத்தை எடுத்துக் கொள்ள முடியாது.

தென்னாபிரிக்க அணிக்கெதிராக 2011ஆம் ஆண்டு இறுதியிலும் 2012ஆம் ஆண்டு ஆரம்பத்திலும் இடம்பெற்ற தொடரின் முடிவில், அணித்தலைவர் பதவியிலிருந்து திடீரென நீக்கப்பட்ட டில்ஷான், அதுகுறித்தும் கருத்துத் தெரிவித்தார். “தென்னாபிரிக்கத் தொடரின் முடிவில், எல்லாவற்றையும் தூக்கி ஓரமாக வைத்தேன். அவுஸ்திரேலியாவுக்குச் சென்றேன், 500 ஓட்டங்களைப் பெற்றேன், தொடரின் நாயகனாகத் தெரிவானேன். யார் தலைவராக இருப்பது என்பது எனக்குத் தேவையில்லாதது. என்னை அணித்தலைவர் பதவியிலிருந்து யார் அகற்றினார் என்பது தொடர்பாக நான் கவனம் செலுத்தியிருக்கவில்லை. நான் எப்போதும் நாட்டுக்காக விளையாடுபவன். இவ்வாறான தனிப்பட்ட விடயங்கள் குறித்து நான் கவலைப்படவில்லை. ஆனால், எனக்கு அது வலித்ததுஎன்று தெரிவித்தார்.

இது தவிர, தலைவராக டில்ஷான் நியமிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற முதலாவது தொடரான இங்கிலாந்துக்கான இலங்கைத் தொடரில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 193 ஓட்டங்களைக் குவித்த டில்ஷான், அப்போட்டியில் விரலில் காயமடைந்தார். அதன் காரணமாக, அடுத்த போட்டியில் அவர் பங்குபற்ற முடியாது போக, அணித்தலைவர் பதவியை ஏற்பதற்கு எவரும் தயாராக இருந்திருக்கவில்லை என டில்ஷான் தெரிவித்தார். அப்போது, சனத் ஜெயசூரியவையோ அல்லது திலின கண்டம்பியையோ அணித்தலைவராக்கும் பேச்சும் காணப்பட்டதாகவும் டில்ஷான் தெரிவித்தார். அடுத்த போட்டியில், குமார் சங்கக்காரவே அணித்தலைவராகச் செயற்பட்டிருந்தார்.

தனது ஓய்வு குறித்துக் கருத்துத் தெரிவித்த டில்ஷான், ஓய்வுபெறுவதற்குத் திட்டமிட்டிருக்கவில்லை எனத் தெரிவித்த அவர், இன்னும் ஓர் ஆண்டுக்காவது விளையாடும் எதிர்பார்ப்பிலேயே இத்தொடரில் களமிறங்கியதாகவும், ஆனால், 25ஆம் திகதி நித்திரையிலிருந்து எழும் போது, ஓய்வுபெறுவதற்கான நேரம் இதுவென உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.

உண்மையைச் சொல்வதானால், இன்னும் ஓர் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு என்னால் விளையாட முடியும். ஆனால், எதிர்காலத்தைப் பற்றிப் பார்க்க வேண்டியுள்ளது. இரண்டு ஆண்டுகள் நான் விளையாடினால், அடுத்த உலகக் கிண்ணத்துக்கு, 18 மாதங்களே இருக்கும். அது, அணியைப் பொறுத்தவரை சரியானதன்றுஎன அவர் மேலும் தெரிவித்தார்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து அவர் ஓய்வுபெற்றாலும், எதிர்வரும் 6ஆம், 9ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில், அவர் பங்குபற்றிய பின்னரே, அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சச்சித் பதிரன இலங்கை குழாமில் இணைந்தமை தொடர்பில் உங்களது கருத்துகளை கீழே கொமெண்ட் செய்யவும்!!