Let us Proudly Commemorate International Year of Small Scale Fisheries & Aquiculture - 2022

மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

( சசி)

பாசிக்குடா மீனவர்கள்  'LAND RIGHTS NOW' எனும் வாசகத்துடன்  எதிர்ப்பு நடவடிக்கையில் இன்று காலை ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இன்றய தினம் உலகெங்கும் 'LAND RIGHTS NOW' எனும் தொனிப்பொருளில் அபகரிக்கப்பட்ட காணிகள் சம்பந்தமான முன்னெடுப்பினை நாடளாவரீதியில்  'ஒக்ஸ் பார்ம்' நிறுவனம்  மேற்கொண்டு  வருகின்றது.
கடந்த காலங்களில் பிரதமர் பாசிக்குடா  மீனவர்கள் தற்போது தொழில் நடவடிக்கையில் ஈடுபடுகின்ற காணிகளை சுற்றுலா துறைக்காக விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சுற்றுலாத்துறை மக்களை சேரவில்லை என்றால் அது சுற்றுலாத்துறையாக இருக்கமுடியாது. சுற்றுலாத்துறையானது மக்களை வெளியேற்றுவது அல்லவென உலக சுற்றுலா அமைப்பின் பொதுச்செயலாளர்  தாலிப் ரிபாய் தெரிவித்த கருத்தின் பிரகாரம் பாசிக்குடா மீனவர்களும் தங்களது  காணி  சம்பந்தமான எதிர்ப்பினை  தேசிய மீனவ ஒத்துழைப்பின் ஒத்துழைப்புடன்  இன்று பாசிக்குடாவில்  முன்னெடுத்துள்ளனர் .
இன்று உலகெங்கும் நடக்கும் இந்த முன்னெடுப்பு இலங்கையில் குறிப்பாக தற்போது சுற்றுலா துறைக்கு பிரசித்தி பெற்றுள்ள பாசிக்குடாவில்  மீனவர்களினால் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது