பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு தொடர்பில்; பங்களாதேஷ் கிரிக்கட் சபை கவனம்

603
Taskin Ahmed
AP Photo

இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் ஐ.சி.சி. விதிமுறைக்கு மாறாகப் பந்து வீசியதாக அந்த அணியின் முன்னணிப் பந்து வீச்சாளர்களான தஸ்கின் அஹமது மற்றும் அரபாத் ஷன்னி ஆகியோர் மீது புகார் கூறப்பட்டது.

ஆகையால், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க பங்காளதேச கிரிக்கெட் வாரியம் ஒரு கமிட்டியை உருவாக்க திட்டமிட்டிருந்தது. இந்த கமிட்டியைக் கடந்த வாரம் நடைபெற்ற பொதுக்குழுவில் உருவாக்கியது. இந்த குழுவிற்கு ஜலால் யூனுஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது பங்காளதேசத்தில் நடைபெற்று வரும் டாக்கா பிரீமியர் லீக் முதல் வாரத்தில் மட்டும் நயீம் இஸ்லாம், பைசல் ஹொசைன், மொமினுல் இஸ்லாம், ரெஜாயுல் கரிம், அமித் குமார் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் முஸ்டாபிஜூர் ரஹ்மான் (இரண்டு முறை) ஆகியோர் மீது நடுவர்கள் புகார் கூறினார்கள். இவர்களுடன் சுமார் 13 பேர் மீது இந்தப் புகார் எழுந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான 1ஆவது டெஸ்டில் எண்டர்சன் விளையாடுவது கேள்விக்குறி

இதனால் .சி.சி. விதிமுறைக்கு உட்பட்டு வீரர்களைப் பரிசோதனை செய்யும் கார்டிப் மெட்ரோபொலிடன் யுனிவர்சிட்டியில் இருந்து நிபுணர்களை வரவழைத்து வீரர்களுக்கு ஆலோசனை வழங்க இருப்பதாக ஜலால் யூனுஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜலால் தெரிவிக்கையில் ‘‘டாக்கா பிரீமியர் லீக் தொடரில சுமார் 13 முதல் 14 வீரர்கள் மீது புகார் வந்துள்ளது. அவர்களது பந்து வீச்சை சரி செய்வதற்கான வேலைகளை ரமழான் முடிந்த பின்னர் தொடங்குவோம். வலைப்பயிற்சியில் அவர்களது பந்து வீச்சை மதிப்பீடு செய்வோம். இதில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஓமர் காலித், திப்பு ராய் சவுத்ரி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் கோலம் பரூக் ஆகியோர் இந்த மதிப்பீட்டின் போது வீரர்களைக் கவனிப்பார்கள். எங்களது பார்வைக்கு அவர்கள் பந்து வீச்சில் குறைபாடு இருந்தால் அதை சரிசெய்வோம்.

எங்களது ஆலோசனைகளுக்குப் பிறகு சீராக அவர்களது பந்து வீச்சை சரிசெய்து கொண்டால், அடுத்த ஆண்டு லீக்கில் இடம்பெறுவார்கள். மாறாகத் தொடர்ந்து தவறு செய்தால் அவர்களுக்குத் தடை விதிக்கப்படும்.

தொழில்நுட்ப உதவிக்காக .சி.சி்.யுடன் தொடர்பில் இருக்கிறோம். கார்டிப் மெட்ரோபொலிடன் யுனிவர்சிட்டியைத் தொடர்பு கொண்டு அவர்களது நிபுணர்களை டாக்கா வந்து ஆலோசனை வழங்கக் கேட்டுக்கொண்டுள்ளோம். அப்போது உள்ளூர் பயிற்சியாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கார்டிப் மெட்ரோபொலிடன் யுனிவர்சிட்டி நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்டு வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க வசதியாக இருக்கும்” என்றார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்