Tuesday 1 September 2015

கங்காருப் பாய்ச்சல்கள் (6)

ஒரு புத்தகத்திற்கு ஒரு அறிமுகம். அம்புட்டுத்தான்!

எனது ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்சிறுகதைத்தொகுப்பு வெளியானபோது, அதன் அணிந்துரை ---வெங்கட் சாமிநாதன் அவர்களால் எழுதப்பட்டது---ஞானம் சஞ்சிகையில் பிரசுரமானது. அதைப் பார்த்துவிட்டு எழுத்தாள நண்பர் ஒருவர் எனக்கு மின்ன்ஞ்சல் செய்திருந்தார்.

புத்தகத்தின் பிரதி ஒன்றை தனக்கு அனுப்பிவைக்குமாறும், அதைப்பற்றியதொரு அறிமுகத்தை தான் எழுதுவதாகவும் மின்ன்ஞ்சலில் குறிப்பிட்டிருந்தார்.  புத்தகத்தை அனுப்பி வைத்தேன்.

புத்தகம் கிடைத்தமை பற்றி அறியத் தரவில்லை. நீண்ட காலமாக அவரது அறிமுகம் எங்கும் வராத்து கண்டு அவருக்கு மின்ன்ஞ்சல் செய்தேன். அதற்கு அவர் – தான் ஒரு அறிமுகம் எழுதிக் கொண்டிருந்ததாகவும், தினக்குரலில் ஏற்கனவே எனது புத்தகம் பற்றிய அறிமுகம் வந்துவிட்டதால் தான் எழுதிக்கொண்டிருந்ததை  நிறுத்திவிட்ட்தாகவும் எழுதியிருந்தார். விருப்பமானால் பாதி எழுதியதை எனக்கு அனுப்பி வைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

சரி பரவாயில்லை, நீங்கள் எழுதியதை பூரணப்படுத்திவிட்டு இன்னொரு பத்திரிகை அல்லது இணையத்தளங்களிற்கு அனுப்பி வையுங்கள் என்றொரு பதில் மின்ன்ஞ்சல் போட்டேன்.


இற்றைவரைக்கும் அதற்கு பதில் வரவில்லை. என் புத்தகம் பற்றிய அறிமுகமும் வரவில்லை.

No comments:

Post a Comment