December 8, 2014

கட்ராக் (Cataract )..கண்புரை

எமது உடலின் முக்கிய உறுப்புகளில் கண்ணும்.. முக்கிய புலன்களில் பார்வைப்புலனும் அடங்குகிறது. ஆகவே கண்ணையும் கண் பார்வையையும் பாதுகாக்க வேண்டியது தலையாய கடமையாகும்..!


கண்ணின் வில்லைப் பகுதியில் ஏற்படும்.. பாதிப்பே கட்ராக் எனப்படுகிறது. தெளிவான கண்ணாடியால் ஆன வில்லைகள் போன்று இருக்கும் கண்வில்லைகள் வயதாக ஆக.. புகாரடைந்த கண்ணாடியாக மாறிவிடுகின்றன. குளிர்காலங்களில் கார் கண்ணாடிகளில் புகார் படிந்திருப்பது போல. இதனால் பார்வைத் தெளிவின்மை மற்றும் நிறங்களை சரியாக அடையாளம் காண்பதில் பிரச்சனைகள் தோன்றும்.(நிறக்குருடு என்ற பாரம்பரிய நோய் உள்ளவர்களில் நிறங்களை அடையாளம் காண்பதில் இருக்கும் நிலை வேறு. இது வேறு.) 
பாரம்பரிய முறையாகவும் இது வரலாம். மற்றும் உடலிரசாயனச் செயற்பாட்டு பிறழ்வுகள் மூலமான தாக்கங்களின் பெறுபேறாகவும் இது வரலாம். சில பெளதீக தாக்கங்களாலும் இந்த நிலை தோன்றலாம்.


சில குழந்தைகள் பிறக்கும் போதே கட்ராகோடு பிறப்பதும் உண்டு.


கட்ராக் ஒரு கண்ணில் என்றில்லாமல்.. இரண்டு கண்ணிலும் வர வாய்ப்புள்ளது.

கட்ராக் வந்தால்.. விழிவெண்படலம் (Cornea) ஊடாக சிறிய துளையிட்டு.. பாதிக்கப்பட்ட வில்லையை அகற்றி அதற்கு மாற்றீடாக பிளாஸ்டிக் வில்லையை வைத்துவிடுவார்கள். இதன் மூலம் மீண்டும் பார்வைத் தெளிவு திரும்ப 90% வாய்ப்புள்ளது. 

0 comments:

Post a Comment