Thursday, January 17, 2013

உன்னைப் பிரிய மாட்டேன்.


கண்ணுக்குள் உன்னை வைத்து
இமைகளை மூடுகிறேன்,
என் இரவின் கனாக்களிலும்
நீ வர வேண்டும் என்று..

இதயத்துக்குள்
நினைவுகளாய் நிரம்பிவிட்ட
உன் ஞாபகங்கள்,
அத்துணை அணுக்களிலும்
இரத்த ஓட்டமாய் கலந்து..

என் ஒவ்வொரு அசைவிலும்
உன்னையே பிரதிபலிக்கிறது.

அழகிய நினைவுகளும் நீ.
அழகிய நிகழ்வுகளும் நீ.
அழகிய என் நிதர்சனமும் நீ.

என் காதோடு உன் குரல்
கைபேசி வழியே ஊடுருவ..
உலகையே மறந்து போகிறேன்,
உனக்குள் என்னை புதைத்தவனாய்.


வழிகளில் விழி வருடி
நீ செல்கின்ற நேரம்..
உன் மௌனத்துக்குள்
உறைந்து விடுகிறேன்,
விழிகளை மட்டும் அசைத்தவனாய்.

எந் நேரமும் உந்தன் நினைப்பு,
உன்னை பார்க்க மனம் துடிக்கும் துடிப்பு,
நீ அருகில் இல்லாது நான் தவிக்கும் தவிப்பு,

நினைப்பு, துடிப்பு, தவிப்பு,
இவை மூன்றையும் கலந்து
காலம் செய்யும் நகைப்பு,
இந்தக் காதல்.

போராட்டக் கடலில்,
மூச்சுப் பிடித்து சுழியோடி
நான் கண்டெடுத்த காதல் சிற்பிக்குள்,
உயிர் வாழ்ந்த முத்து நீ.

மூச்சே நின்றாலும்..
உன்னைப் பிரியப் போவதில்லை.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

2 comments:

  1. nalla kavithai ..!

    nantri nanpaa...!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் எனது நன்றிகள் தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை எதிர் பாக்கிறேன்

      Delete