Thursday, December 06, 2012

"வறுமைக் காற்று"


சோகமாய் சொல்லும்
கவியிலும் சுவாரஸ்யம்
உண்டு.

ஏழையவன் வாழ்வைச்
சொல்லுகையில்
கண்ணீரே உண்டு.

வறுமையின் வலையில்
வசப்பட்டவனே
வாழ்வினில் வலி சுமப்பவன்.

தண்ணீரில் விழுந்த கற்கள் போல்,
வறுமைக் கண்ணீரில்
மூழ்கிப் போனவன் அவன்.

தீயுடன் உறவாடிய
கைக் குழந்தை போல்,
நிஜத்துடன் உறவாடும்
அவனும் என்றும்
காயம் கண்டவனே...

வறியவன் வாழ்வு பற்றி
இன்று அன்றாட அரசியல்..
நெஞ்சில் வருத்தமின்றி
மேடையில் அவன் உணர்வுகள்..

வியாபாரம் செய்கிறான்
அரசியல்வாதி
"ஐயோ..." அவனையே
தலைவன் என்கிறான்
அந்த அறியாவாதி.

பக்கத்து வீட்டுப் பவித்திராவோ?
பாலைவன ஆபிரிக்காவோ?
வறுமையில் பிறந்தவன்
வாழ்விழந்து தவிக்கிறான்.


உலகின் ஒரு மூலையில்
உணவில்லாமல் உயிர்விடுகிறது
ஒரு கூட்டம்.

மறு மூலையில் உணர்வில்லாமல்
உணவை வீணடிக்கிறது
ஒரு கூட்டம்.

ஆசையும், பணமும்
மனிதனை ஆளும் வரை
உதவும் கரங்களுக்கு
உயிரோட்டமில்லை.

வறுமைத் தொற்று நோய்
அழியவும் போவதில்லை.

கனவு உலகத்தில்
வறுமை ஒழிப்புக்கே
முதலிடம்.

வறியவன் வரியாய்
உரத்து ஒலிக்கிறது
இக் கவி என் கனவு உலகில்...


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment