Tuesday, November 22, 2011

விடையை தேடுங்கள் உறவுகளே!



சோகமாய் சொல்லிச் செல்லும்
கவிகளில் கூட,
சில சுவாரஸ்யம் இருக்கும்.

ஏழை என்று பிறந்தவன்,
வாழ்வு பற்றி சொல்லும் போது
என்னதான் இருக்கும்?

வறுமையின் வலைக்குள்
வசப்பட்டவர்கள்தான்,
வாழ்கையில் நிர்பந்திக்கப்பட்டவர்கள்.

ஆற்றுக்குள் எறியப்பட்ட
கற்கள் போல், மூச்சுத்திணறி
மூழ்கிப் போனார்கள்,
காலத்தின் கல்லறைக்குள்.

நெருப்போடு விளையாடும்
கைக்குழந்தை போல்,
நிஜத்தோடு போராடும் அவர்கள்,
என்றும் காயப்பட்டவர்களே!.

அரசியல் மேடையில்
தீனியாய் மாற்றப்பட்டுவிட்டது,
இந்த ஏழையின் வறுமை வாழ்க்கை.

அவை கேட்டு
கைகொட்டிச் சிரித்தே,
பழகி விட்டது நம் நிலைமை.

பக்கத்து வீடு பவித்திறாவோ?
பாலைவன ஆபிரிக்காவோ?
வறுமைக்குள் வசப்பட்டவன்,
வாழ்விழந்து தவிக்கிறான்.

ஆசையும், பணமும்
இவ்வுலகை ஆளும் வரை
அழியப்போவதில்லை வறுமை
இவ்வுலகை விட்டு....

ஒரு நேரச் சோறில்லாமல் உறங்கும்
விழிகள் எத்தனை?
உறங்க இடமில்லாமல் ஒதுங்கும்
உறவுகள் எத்தனை?

இதை நினைத்துப் பார்க்கும்
உள்ளங்கள் எத்தனை?
அதை மொழி பெயர்க்கும்
குரல்கள் எத்தனை?

அவை கேட்டு
உதவும் கரங்கள்
எத்தனை?

வினாவுக்கான விடை
தெரியவில்லை எனக்கு
???????

வானை பிளக்கும் இடியாய், வறுமைக்குள்
புதைந்தவர்களின் உணர்வுகள்,
உரத்து; வினாவாக ஒலிக்கிறது
இக்கவியோடு...

நீங்களும்
"விடையை தேடுங்கள்
உறவுகளே"


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment