“சிந்து…… மேக்கப் போடுற அன்ரி வந்திடுவா. சீக்கிரம் ரெடியாகு” அம்மா குசினிக்குள் நின்று கூக்குரலிட்டார். குசினிக்குள் அம்மாவின் சிநேகிதிகளின் ஆரவாரம் கேட்கின்றது. ஹோலிற்குள் அண்ணா பிரதீபனும், நண்பர்களும் இறுதிக்கட்ட சோடனைகளில் மூழ்கிப் போயிருந்தார்கள். நேற்று இரவு தொடங்கிய இந்த ஆரவாரம் இன்னமும் முடியவில்லை. அப்பா திருமணமண்டபத்தில் நிறைய வேலைகள் இருப்பதாகச் சொல்லிச் சென்றுவிட்டார். நேற்றுக்கூட அம்மாவுக்கும் அப்பாவுக்குமிடையே பலத்த வாக்குவாதம் இடம்பெற்றிருந்தது. பொதுவாக காசு விஷயத்தில் தான் இருவருக்குமிடையே சண
எனது `சுருதி’ வலைத்தளம் பற்றியும், அதிலுள்ள படைப்புகள் பற்றியுமான வாசகர்களின் கருத்துகளை அறிய விரும்புகின்றேன்.வாசகர்கள் தங்கள் கருத்துகளை எனது வலைத்தளத்தில் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன். ...
சோஷல் மஞ்சு சில வருடங்களாக புற உலகில் இருந்து ஒதுங்கி இருக்கின்றாள். எந்தவொரு நிகழ்விற்கும் அவள் விரும்பிப் போவதில்லை. யாருடனும் பழகுவதுமில்லை. கொழும்பில் மகன், மருமகள், பேரப்பிள்ளையுடன் இருந்த காலங்களில் அவள் தனிமையை உணர்ந்ததில்லை. மகனுக்கு சின்சினாட்டிப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை செய்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தபோது அவள் கொஞ்சம் கலங்கிப் போய்விட்டாள். மகனின் எதிர்காலம் கருதி, வற்புறுத்தி அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தாள். அதன் பின்னர் ஊருக்குத் திரும்பி, போரினால் சிதிலமடைந்திருந்த தனது
பால்வண்ணம் சிறுகதை நூலின் அறிமுக நிகழ்வானது 2023.10.22 அன்று பிற்பகல் 03.00 மணிக்கு வவுனியா நகரசபைப் பொதுநூலகத்தில் பண்டாரவன்னியன் புத்தகசாலையின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்றது. இவ் நிகழ்விற்கு தமிழருவி த.சிவகுமாரன் அவர்கள் தலைமை வகித்திருந்தார். மேலும் கொ.பாபு, ஏழாலை அகரா ஆகியோர் நூல் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டிருந்தார்கள். நேற்றைய தினம் புத்தக ஆர்வலர்கள் சூழ அருமையான பொழுதாக இருந்தது. இளையோர்களும் அறிஞர்களுமாக தமது கருத்துகளை வழங்கிருந்தார்கள். தகவல் - பண்டாரவன்னியன் புத்தகசாலை ...
எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் அவர்கள் எழுதிய 'பால்வண்ணம்' சிறுகதைத் தொகுப்பானது 2023.10.22 அன்று பிற்பகல் 03.00 மணிக்கு நமது வவுனியா நகரசபைப் பொது நூலக கேட்போர்கூடத்தில் அறிமுக நிகழ்வாக இடம்பெறவுள்ளது. இலக்கிய விரும்பிகளை அன்போடு அழைக்கிறோம். சென்றிடுவீர் எட்டுத்திக்கும்,எங்கே போகிறோம்,மெல்பேர்ண் வெதர்,கார்காலம்,ஏன் பெண்ணென்று,வளர் காதல் இன்பம் ஆகியன இவரது பிற நூல்களாகும். தொடர்ந்து இலக்கியங்களோடு செயற்பட்டுவரும் இவரது எழுத்துகளின் வாசனையை நுகர்ந்துகொள்ள நமது எழுத்தாளர்கள் பற்றி அறிந்துகொள்ள வாருங்கள்.புத்கங்கள
“நாளைக்குக் காலமை சவரின் ஹில் பாக்கப் போகிறோம். நீங்களும் வெளிக்கிட்டு நில்லுங்கோ. போற வழியிலை உங்களையும் கூட்டிக்கொண்டு போறோம்,” மகள் தன் பெற்றோருக்கு, முதல்நாள் இரவு தொலைபேசியில் அழைப்பு விட்டிருந்தாள். ஞாயிற்றுக்கிழமைகளில் சந்திரமோகனும் பராசக்தியும் தாமதித்தே உறக்கம் கலைவார்கள். அன்று நேரத்திற்கு எழுந்து தயாராகிவிட்டார்கள். மெல்பேர்ணில், பலரட் என்ற இடத்தில் உள்ள சவரின் ஹில்லை---தங்கச்சுரங்கத்தை---அவர்கள் ஏற்கனவே இரண்டு தடவைகள் பார்த்துவிட்டார்கள். இருப்பினும் மகள், மருமகன், பேர்த்தியுடன் பார்க்கப் போவது
”அண்ணா! இஞ்சை வந்து பார் அம்மாவை...” வரதலிங்கத்தின் காதிற்குள் கிசுகிசுத்தான் சதாநேசன். இருவரும் பூனை போல கால்களைத் தூக்கித் தூக்கி வைத்து நடந்து, அம்மாவின் அறையை நோக்கிச் சென்றார்கள்., மறைவாக நின்று அம்மாவை எட்டிப் பார்த்தார்கள்.அம்மா படுக்கையில் அமர்ந்தவாறு, வரதலிங்கம் சுவிஷில் இருந்து கொண்டுவந்த ஆடைகளைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் பஞ்சு போன்ற பாதங்கள் கட்டிலிலிருந்து நீண்டு அந்தரத்தில் தொங்கி ஆடிக்கொண்டிருந்தன. மனம் எங்கோ லயித்திருக்க, உதடுகள் மெல்லச் சிரிப்பதும் மூடுவதுமாக இருந்தன. அம
இதனால் சகலமானவர்க்கும் அறிவிப்பது யாதெனில்..********************************************************************என் தம்பியும் துபாயில் வசிக்கும் எழுத்தாளருமான தேவா சுப்பையா , தமது தகப்பனாரின் நினைவில் இராம செ.சுப்பையா நினைவு அறக்கட்டளை என்று தொடங்கி எனது கருமாண்டி ஜங்ஷன் யூ டியூப் சேனல் ஒருங்கிணைப்பில் கடந்த வருடம் ஒரு சிறுகதை போட்டி நடத்தி 60,000 ரூபாய் பரிசு தந்தார். கதைகளை சுவடு பதிப்பகம் மூலம் நூலாக கொண்டுவந்தார்.விழாவும் நடந்தேறியது .அறிவீர்கள்.இந்த ஆண்டும் இராம.செ.சுப்பையா நினைவு சிறுகதை போட்டி அறிவித
குப்பிழான் ஐ.சண்முகன்கடகடவென்ற இரைச்சலுடன் புகையிரதம் விரைந்து கொண்டிருந்தது. உள்ளே கூட்டம் நெரிந்து குமைந்தது. நானிருந்த பெட்டியின் வாசற்புறக் கதவருகில் நின்று வெளியே தெரிந்த காட்சிகளில் கண்களை மேயவிட்டுக் கொண்டிருந்தேன். கரையோரப் பகுதியில், இடைக்கிடை நெடுமூச்சு விட்டவாறே புகையிரதம் சென்றது. எனது கண்கள் கரைப் பகுதிகளைத் துழாவின. ஓடிக் கொண்டிருக்கும் காட்சிகளில் மனது தங்காமலும் ஓடாத காட்சிகளில் மனது தங்கியும் கோலம் போட்டது. கரையில் போடப்பட்டிருந்த கருங்கல் அணைகளில், மனிதர்கள் கூட்டம், கூட்டமாக இருந்து ஏதேத
செந்தூரன் காலை மூன்று மணி பறங்கி மலைத் தோட்டம் ஏழாம் நம்பர் ‘லயத்தில்’ உள்ள சுப்பையா நாயக்கரின் ‘காம்பிராவி’ல் கொழுந்து கணக்குப்பிள்ளையிடம் கைமாற்றாக வாங்கிய ‘அலாரம்’ கணீர் என்று ஒலித்தது. வழக்கத்திற்கு மாறாகத் தூங்காமலே கனவு கண்டு கொண்டிருந்த சுப்பையா நாயக்கர் மணியோசை கேட்டதும் எழுந்து விட்டார். எழுந்தவர் சும்மாயிருக்கவில்லை. நாள் முழுவதும் உழைத்த களைப்பால் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த மனைவியையும், பிள்ளைகளையும் திட்டிக் கொண்டே எழுப்பினார் சுப்பையா. “சனியனுங்கோ! நேரம் போச்சேன்னு கொஞ்சமாவது யோசனை இருக்கா?
மெல்பேர்ண் வெதர் - நாவல் வாங்கhttps://www.amazon.in/dp/B08X1BNBWV/ref=sr_1_2?dchild=1&keywords=melbourne+weather&qid=1613800463&s=digital-text&sr=1-2இலவசமாகப் படிக்க http://shuruthy.blogspot.com/p/blog-page_6267.html